குமரி: தொடர் திருட்டு, சிறை… ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை – போலீஸுக்கு சவாலான கொள்ளையன் ஜெகன்!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டாறு, கடையாலுமூடு உள்ளிட்ட போலீஸ் நிலையப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, ரப்பர் ஷீட் உலர் கூடங்களை உடைத்து ரப்பர் ஷீட்களை திருடிச் செல்வது போன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். விசாரணையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் … Read more

இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு…

ஹரி மேகன் தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ? நண்பர் ஒருவருடன் மேகன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார், அப்போது இளவரசர் ஹரிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதைக் கண்டு கலங்கிய ஹரி, அந்த குறுஞ்செய்தியை தன் மனைவி மேகனுக்குக் காட்டுகிறார். Image: Netflix / TikTok கணவன் முகம் வாடியிருப்பதைக் கண்ட மேகன், ஹரியைக் கட்டி அணைத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது, ஹரி, மேகனுக்கு ஆதரவாக ரசிகர்கள் … Read more

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை:  உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘உலக தண்ணீர் தினமான … Read more

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று ஓபிஎஸ்க்கு முதல்வர், உதயநிதி நேரில் ஆறுதல் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ம் தேதி பெரியகுளத்தில் காலமானார்.

முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ‛பவுலிங்| First ODI: Team India Bowling

மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (மார்ச் 17) மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றார். இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி விபரம்: இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர … Read more

Test Cricket: இந்தியாவுக்கு 18; இலங்கைக்கு 12; வணிக முனைப்பில் அறம் தவறியதா ஐ.சி.சி?

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஐ.சி.சி யின் நடைமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் ஒப்பானதாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறதா? எனும் கேள்வி கிரிக்கெட் சமூகத்திலிருந்தே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சமீபத்தில், “அந்த பெரிய 3 அணிகள் தவிர்த்து யாருமே டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவாக ஆடமுடியாதவாறு சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது” என வேதனை தெரிவித்திருந்தார். “50 டெஸ்ட் போட்டிகளை எட்டவே எனக்கெல்லாம் இன்னமும் ஏழு ஆண்டுகள் பிடிக்கும்” என ஆதங்கப்பட்டிருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்கியா. Jason Holder … Read more

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 700 மாணவர்கள்: போலி ஆவணத்தினால் ஏற்பட்ட கதி!!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமாக சென்றுள்ளன என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.   ஏஜன்சி அலுவலகம் மாநகரப் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த அலுவலகம் அமைந்துள்ளது. ஆனால், இது ஆறு மாதங்களாக பூட்டியே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சேவைகளுக்காக ஒரு மாணவரிடம் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கியதாகவும் தகவல்கள் வருகின்றது. மாணவர்களின் நிலைமை … Read more

தனியார் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டல்! சாத்தான்குளம் பகுதி பாஜக பிரமுகர் கைது.!

சாத்தான்குளம்: தனியார்  கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பகுதி பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்உடைக்கும் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது.  இங்கு சென்ற பாஜக நிர்வாகி பூபதி தலைமையிலான சிலர், கட்சிக்கு நன்கொடை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால், ஆலையை நிர்வகித்து வந்த மேலாளர், முதலாளி ஊரில் இல்லை என்பதால், அவர் வந்ததும் கேட்டுச்சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், அதை … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

`எடப்பாடி மீது வழக்குப்பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ – கொதிக்கும் அதிமுக

திருச்சி ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்பட்ட இறகுப் பந்து மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அந்த மைதானம் திருச்சி சிவாவின் வீட்டிற்கு அருகிலேயே இருந்தும், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில் கூட திருச்சி சிவாவின் பெயர் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரின் ஆதரவாளர்கள், மைதானத்தை திறந்துவைக்க சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்துக் கருப்புக்கொடி காட்டினர். இருதரப்புக்கும் உள்ளூர பல ஆண்டுகளாக போட்டி இருந்துவந்தாலும், சொந்த கட்சி அமைச்சருக்கே வெளிப்படையாக … Read more