`பணப் பிரச்னையில் பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் படுகொலையா?' – பெண்ணின் புகாரை விசாரிக்கும் போலீஸ்

பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் கடந்த 9-ம் தேதி டெல்லியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து அவருடைய உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கில் நடிகர் சல்மான் கான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். சதீஷ் கெளசிக் இறந்து சில நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் என்பவரின் மனைவி, இது தொடர்பாக டெல்லி … Read more

காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்த விமான பணிப்பெண்; நள்ளிரவில் நான்காவது மாடியிலிருந்து..,

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். விமானப் பணிப்பெண் உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. Twitter @ians_india கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4 பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த 4பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும்யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்| Gujarati Folk Singer Showered With Wads Of Cash During ‘Bhajan’ Performance

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத்தில், நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் ரூபாய் நோட்டுகளை வீசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், வல்சாத் அக்னீவர் கவு சேவாதள என்ற அமைப்பு சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், கிர்திதன் காத்வி என்ற நாட்டுப்புற பாடகர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவரது பாடல்களை கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பாடகர் … Read more

“தேர்தல் ஆணையத்துக்கு, ஒவ்வொரு தேர்தலுமே `அக்னி பரீட்சை'தான்!" – தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலோடு, 400 தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறது. இதில் 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 16 ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும் அடங்கும். இந்திய தேர்தல் ஆணையம் அதைத் தொடர்ந்து, தற்போது வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடும்விதமாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது குழுவுடன் … Read more

அபாரமாக ஆடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள்: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி

 இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையிலுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக நடக்கும் இப்போட்டியில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார்கள். @cricbuzz முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (rohit sharma) அபாரமாக விளையாடி … Read more

4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி

அகமதாபாத்: ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை … Read more

குடியரசு துணைத்தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருடன் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு மேற்கொண்டார்.

“ஒவ்வொரு தேர்தலும் அக்னி பரீட்சை”: தேர்தல் கமிஷனர்| ECI chief Rajiv Kumar says it gives ‘Agnipariksha’ in every election

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: ”சட்டசபை தேர்தல்கள், லோக்சபாவுக்கு பல தேர்தல்கள் நடத்தி இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலும், ஆணையத்திற்கு அக்னி பரீட்சையாக அமைகிறது”, என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரிடம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராஜிவ் குமார் கூறியதாவது: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களை சேர்த்து 400 சட்டசபை … Read more

“மன சமநிலையை இழந்துவிட்டார் என நினைக்கிறேன்!" – சுவாதி மாலிவாலைச் சாடிய DCW முன்னாள் தலைவர்

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட குஷ்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். சுவாதி மாலிவால் அவரைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் சர்வதேசப் பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் சுவாதி மாலிவால், தானும் சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் … Read more