காந்தி மண்டபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: சென்னை அடையாறு காந்தி மண்டப வளாகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். ரூ.95 லட்சத்தில் கிண்டி காந்தி மண்டபத்தில்  நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகள்  திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த … Read more

உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலையில் சிறப்பு பட்டமளிப்பு விழா தொடங்கியது..!!

லக்னோ: உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் சிறப்பு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் MP பங்கேற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம். பல்கலை. சிறப்பு பட்டமளிப்பு விழாவில் வேந்தரான பாரிவேந்தர் எம்.பி. உரையாற்றி வருகிறார்.

மறக்க முடியுமா: இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம் | Today is Pulwama attack anniversary

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை … Read more

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் – பிரதமர் மோடி

டெல்லி, 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தற்கொலை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி … Read more

சீர்காழி: நூதன முறையில் பொருள்கள் வாங்கி ஆன்லைன் மோசடி; மர்ம நபரை தேடும் போலீஸார்!

சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் இக்பால். இவர் அதே பகுதியில் பெரம்பு நாற்காலி, கோரை பாய் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இக்பால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனக்கான கணக்கை தொடங்கியிருக்கிறார். அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பலப் பொருள்களை தவணை முறையில் வாங்கியிருக்கிறார். ஆன்லைன் மோசடி பொருள்களை வாங்கி இவர் சரியாக பணம் கட்டியதால், இவருக்கு அந்த ஆன்லைன் வர்த்தக் நிறுவனம் ரூ.40,000 வரை கடன் … Read more

டி20 உலகக்கோப்பையில் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து

மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. ட்ரையோன் அபாரம் போலன்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ட்ரையோன் 40 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஈடன் கார்சன் மற்றும் தஹூஹூ தலா 2 விக்கெட்டுகளையும், ஹேலே ஜென்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். South Africa … Read more

காஷ்மீரில் லித்தியம்: பயங்கரவாத அமைப்புகள் இந்தியஅரசுக்கு மிரட்டல்…

ஸ்ரீநகர்: காஷமீர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்புகள் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில்  ஜம்மு-காஷ்மீரின் ரைசி … Read more

சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டியத்தைச் சேர்ந்த மாணவன் தற்கொலை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டியத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். விடுதியில் தங்கி படித்து வந்த 2-ம் ஆண்டு மாணவர் ஸ்ரீவன் சன்னி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாப்பிள்ளை அவங்க தான்… ஆனா, அவங்க போட்டிருக்கிற சட்டை எங்களுடையதுன்னு உரிமை கொண்டாடுறாரோ?| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில், சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் தான், ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும், பல்வேறு துறைகள் சார்பில், மத்திய அரசால், முதன்மை மாநிலத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க., அரசும், அந்த விருதுகளைப் பெற்றது. அந்த விருதுகள், 22 மாத தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டுக்காக அல்ல. முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைக்காக, அது தொடர்கிறது. இப்ப என்ன சொல்ல வர்றாரு… ‘மாப்பிள்ளை அவங்க தான்… ஆனா, அவங்க போட்டிருக்கிற சட்டை எங்களுடையது’ன்னு … Read more

மராட்டியம்: போக்குவரத்து காவலரை காரின் முன்பக்கத்தில் ஏற்றி 1 கி.மீ. இழுத்து சென்ற நபர்

பால்கார், மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். வாகனங்களை சோதனை செய்தும், அனுப்பி உள்ளார். இந்த நிலையில், அந்த வழியே கார் ஒன்று விரைவாக வந்து உள்ளது. அதனை காவலர் தடுத்து நிறுத்தி உள்ளார். ஆனால், அந்த கார் நிற்காமல் போக்குவரத்து காவலரை மோதும் வகையில் சென்று உள்ளது. இதனால், காரின் முன்பக்கத்தில் காவலர் தொற்றியபடி காணப்பட்டார். கார் நிற்காமல் அவரை இழுத்து கொண்டு … Read more