பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் இருவர் கைது – நடந்தது என்ன?

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் மா.சு., திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா மேடை விழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த 22 வயதான இளம் பெண் காவலரிடம் அங்கிருந்த இளைஞர்கள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த … Read more

உறவினர் சடலங்களை தெருக்களில் தகனம் செய்யும் மக்கள்… இறுதிச்சடங்குகளுக்கு அனுமதி மறுப்பு

சீனாவில் இறுதிச்சடங்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் சடலங்களை மக்கள் தெருக்களில் தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும்போக்கு நடவடிக்கைகள் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கும் பல மடங்கு அதிகரித்துவருவதால், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் தகன இல்லங்கலில் சடலங்கள் குவிந்து வருகிறது. சடலங்களை எரியூட்டுவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள், தங்கள் உறவினர்களை தெருக்களில் எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். @Douyin/shenyutian68 கொரோனா இல்லாத சமூகம் என்ற சீன நிர்வாகத்தின் கடும்போக்கு … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம்

கோபிச்செட்டிபாளையம்: அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம் அடைந்தார். தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருப்பூர்: திருமணம் செய்து கொள்ள கூறிய காதலி; பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த காதலன் – அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா (19). பெற்றோர் இறந்துவிட்டதால், மாமாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவந்தார் பூஜா. அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரும், பூஜாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக பூஜாவுடன் பேசுவதை லோகேஸ்வரன் தவிர்த்து வந்துள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு லோகேஸ்வரனை பூஜா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், பூஜாவை … Read more

ஜனவரி 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 229-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 229-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே மணல் திட்டாக மாறிய சாலை

திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சாலை மணல் திட்டாக மாறியது. 2 அடி உயரத்திற்கு கடல் மணல் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாக முகத்துவராப் பகுதியில் கடல் நீருடன் மணல் அடித்துவரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: ​சொகுசு காரில் கஞ்சா ​கடத்தல்; 3 பெண்கள் உட்பட 5 பேர் ​சிக்கியது எப்படி?!

​திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில்​ ​கஞ்சா ​விற்பனை அதிகமாக நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போ​லீஸார் ​​நிலக்கோட்டை​, ​வத்தலக்குண்டு பகுதி​களில் தீவிர சோதனை​யில் ஈடுபட்டு வந்தனர்​. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இதில் வத்தலகுண்டு பகுதிக்கு ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தி வந்த கார் பட்டிவீரன்பட்டி பகுதியில் இருப்பது தெரியவந்து​ள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில்​ பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டை சாலையில் உள்ள ஒரு … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 100 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

வியட்நாமில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். வியட்நாமின் தெற்கு மாநிலமான டோங் தாப் என் இடத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை, 10 வயது சிறுவன் அங்குள்ள 115 அடி (30 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நவீன இயந்திரங்கள் மூலம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். WPA … Read more

ஜன.05: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.