நீலகிரி: 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர்கள் போக்சோவில் கைது!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதியின் 7 வயது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அண்மையில், பள்ளி முடிந்து வீட்டுக்குத் தனியாக நடந்து சென்றிருக்கிறார். இதைப் பார்த்த வடமாநில இளைஞர்கள் இருவர், தவறான நோக்கத்துடன் சிறுமியைத் தூக்கிச் சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். பதறிய சிறுமி பயத்தில் அலறித் துடித்திருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டிருக்கின்றனர். மக்களைக் கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். இது குறித்து, சிறுமியின் … Read more

பிரித்தானியாவில் ஹொட்டல் முதலாளியை கரப்பான் பூச்சிகளை வைத்து பழிவாங்கிய சமையல்காரர்!

பிரித்தானியாவில் ஹொட்டல் முதலாளியை பழிவாங்க 20 கரப்பான் பூச்சிகளை சமையலறைக்குள் விட்ட ஊழியருக்கு 17 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹொட்டல் Lincolnல் உள்ள ராயல் வில்லியம் IV ஹொட்டலில் (Royal William IV pub) Tom Williams (25) என்பவர் சமையல்காரராக வேலை செய்தார். கடந்தாண்டு அக்டோபர் 11-ல் விடுமுறை ஊதியம் தொடர்பாக ஹொட்டல் முதலாளியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் Tom தனது பணியை ராஜினாமா செய்தார். அதோடு முதலாளியை பழிவாங்கும் விதமாக, தான் வேலைசெய்த ஹொட்டலின் சமையலறையில் … Read more

இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெல்லி: விமான பயணத்தின்போது, இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான இயக்குனரம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 6ம் தேதி  பாரிஸ் டில்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையில் ஒரு ஆண் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விமான இயக்குனரகத்தில், புகாரளிக்காததற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து … Read more

போலீசார் தாக்கியதால் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

சென்னை: போலீசார் தாக்கியதால் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயி செம்புலிங்கம் மரணம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. காவல் ஆய்வாளருக்கு  பதில் டி.ஸ்.பி 3 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் நிலுவையில் 4.90 கோடி வழக்குகள்: கிரண் ரிஜிஜூ தகவல்| There are 4.90 crore pending cases in India: Kiran Rijiju informs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் தற்போது நிலவரப்படி, 4.90 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்று நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.90 கோடியாக உள்ளது. அரசு மற்றும் நீதித்துறையின் ஒருங்கிணைந்த முயற்சி வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். தொழில்நுட்பம் இதில் முக்கிய பங்கு வகிக்கும். நீதி தாமதம் … Read more

“என்னுடைய இமேஜை உடைக்க பாஜக பல ஆயிரம் கோடிகளைச் செலவிட்டிருக்கிறது; ஆனால்..?!" – ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரை கிட்டத்தட்ட அதன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், “என்னுடைய இமேஜை உடைப்பதற்காகப் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வும், அதன் தலைவர்களும்தான் இதனைத் திட்டமிட்டுச் செய்திருக்கின்றனர். ராகுல் காந்தி ஆனால், பல ஆயிரக்கணக்கான கோடிகளால் ஒருபோதும் உண்மையை மறைக்க முடியாது. இதை நீங்களும் கண்டீர்கள். உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும். … Read more

லண்டனில் பல லட்சம் மதிப்பிலான உடையை வாங்கி அணிந்த முகேஷ் அம்பானி மனைவி! புகைப்படம்

நீட்டா அம்பானி லண்டன் பயணத்தின் போது குளிரில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அணிந்த உடைகளின் விலை குறித்த வாய்பிளக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நீட்டா அம்பானி உலக கோடீஸ்வரர்களின் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீட்டா அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனராக நீட்டா உள்ளார். காண்போரை அசரடிக்கும் வகையிலான அழகிய மற்றும் விலையுயர்ந்த உடைகளை அணிவதை நீட்டா வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அம்பானி சமூகவலைதள … Read more

வேலையில்லா பட்டதாரிகள் உதவித்தொகை வெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5ஆண்டுகளை கடந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, ஏழை வேலையில்லா பட்டதாரிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் உதவித்தொகைஅளித்து வருகிறது. அதன்படி,  10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் பிளஸ்2, கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5ஆண்டுகளை கடந்தும் பணி கிடைக்காதவர்கள், இந்த    … Read more

வணிக வரித்துறையில் கடந்த நிதியாண்டை விட வருவாய் அதிகரிப்பு

சென்னை: வணிக வரித்துறையில் கடந்த டிச. 2022 வரை ரூ.96,756 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜனவரி மாதம் ரூ.7,300 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் மொத்த வருவாய் (23.1.2023) ரூ.1,04,059 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல பதிவுத்துறையில் ரூ.13,631.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

நீதித்துறையை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.,: கெஜ்ரிவால் தாக்கு| BJP wants to take over the judiciary: Kejriwal attacks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீதித்துறையை கைப்பற்ற பா.ஜ., அரசு நினைக்கிறது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றி்ல மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசுகையில், மக்கள் பிரதிநிதிகளை மக்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், நீதிபதிகள் தேர்தல்களை சந்திப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதனால் அவர்களை மாற்ற முடியாது. அதே நேரத்தில் வழக்குகளை கையாளும் விதம், வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில், நீதிபதிகளை மக்கள் கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டு … Read more