திருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் கைது

திருப்பூர் புறநகர்ப் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குச் சென்ற 14 வயதான மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இரு மாநில முதல்வர்களின் வீட்டருகே வெடிகுண்டு – பாதுகாப்பாக அப்புறப்படுத்தியது ராணுவம்| Bombs near the residences of two state chief ministers – safely disposed of by the army

சண்டிகர், சண்டிகரில் பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை, நம் ராணுவத்தினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் சண்டிகர் நகரில் அமைந்துள்ளன. இருவரின் இல்லங்களுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான பொருள் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதை ஆய்வு செய்த போலீசார், வெடிகுண்டு என கண்டறிந்தனர். இது இருந்த இடத்தின் அருகே, … Read more

“ஆமாம், எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5,000 வழங்க சொன்னோம்; ஏனென்றால்…" – அமைச்சர் பெரியகருப்பன்

“திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா பாதிப்பு இருந்ததால் பொங்கல் தொகுப்பில் ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டுகோள் விடுத்தோம்.”என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பெரியகருப்பன் ராணி வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவு மண்டபத்தில் வேலு நாச்சியாரின் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்.பி கார்த்தி சிதம்பரம், எம்.எல்.ஏ தமிழரசி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.பெரியகருப்பனிடம் “பொங்கல் பரிசுத்தொகை … Read more

எம்பாப்பே சந்திப்பை தவிர்த்த மெஸ்ஸி., PSG அணியுடன் மீண்டும் இணையும் ஜாம்பவான்

உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் நாளிலேயே கைலியன் எம்பாப்பேவுடன் மீண்டும் இணைவதை லியோனல் மெஸ்ஸி தவிர்த்ததாக கூறப்படுகிறது. அர்ஜென்டினாவுடன் 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு லியோனல் மெஸ்ஸி செவ்வாய்க்கிழமை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் பயிற்சிக்குத் திரும்பினார். 35 வயதான அவர் கத்தாரில் தனது மகத்தான வெற்றிக்குப் பிறகு PSG-ல் 10 நாள் இடைவெளியை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை Chateauroux-க்கு எதிரான Coupe de France மோதலுக்கு முன்னதாக தனது PSG கிளப்புக்கு … Read more

பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் கோயில், மேற்கு சைதாப்பேட்டை

பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் கோயில், சென்னை மாவட்டம், மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு, இத்தலத்தில் சிறியளவில் இருந்த கோயிலில், கோதண்டராமர் சன்னதி மட்டும் இருந்தது. ஒருசமயம் இராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய (தோன்றிய) வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி, அதன்பின் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி, “பிரசன்ன வெங்கடேசர்” என்று பெயர் பெற்றார். இங்கு சுவாமியை … Read more

சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது பயிற்சியாளரின் கழுத்தை கடித்த புலி., வீடியோ வைரல்

இத்தாலியில் நேரலை நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரைத் தாக்கிய புலி அவரது கழுத்தைக் கடித்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. இத்தாலியின் Lecce மாகாணத்தில் கடந்த வியாழன் மாலை ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரை புலி தாக்கியது. சர்க்கஸ் பயிற்சியாளரை புலி இழுத்து தரையில் தள்ளி கழுத்தை கடித்த திகிலூட்டும் தருணத்தின் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது. அசந்த நேரத்தில் தாக்கிய புலி அந்த வீடியோவில், சர்க்கஸ் பயிற்சியாளர் மற்றொரு புலி … Read more

ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் பலி 2 வாரத்தில் மூன்றாவது சம்பவம்| Another Russian killed in Odisha, third incident in 2 weeks

புவனேஸ்வர், ஒடிசாவில் ஏற்கனவே இரண்டு ரஷ்யர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று பாரதீப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்த மேலும் ஒரு ரஷ்யர் உயிரிழந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், கடந்த மாதம் ௨௧ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். விசாரணை இவர்களில் ஒருவரான விளாடிமிர் பிடனோவ், ௬௩, கடந்த ௨௨ல் தன் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். … Read more