மின்சாரப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். சென்னையில் தனியார் பேருந்து சேவை தொடர்பாக சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால், அமைச்சர், தனியார் சேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசு பேருந்து சேவையில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என விளக்கம் அளித்தார். … Read more

டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

டெல்லி : டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் ஜப்பானிய பெண் மீது சிலர் வண்ணப் பொடிகளை தூவி தவறாக நடந்ததாக புகார் கூறப்படுகிறது.

சூரத் – சென்னை இடையே இந்தியாவின் 2வது நீள எக்ஸ்பிரஸ்வே: பணிகள் மும்முரம்| Indias 2nd longest expressway between Surat Chennai: Work in full swing

சென்னை: சூரத் சென்னை இடையே ஆறுவழிச்சாலையாக அமையும் எக்ஸ்பிரஸ்வே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பாதை இந்தியாவின் 2வது நீளமான எக்ஸ்பிரஸ்வே ஆகும். குஜராத் மாநிலம் சூரத் – சென்னை இடையே ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு, கடந்த 2019ல் வெளியிடப்பட்டது. சூரத்தில் துவங்கும் அச்சாலை, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக், சோலாப்பூர், மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாசிக், சங்கம்நெர், அஹமது நகர், … Read more

அமலாக்கத்துறை ரெய்டு: கர்ப்பிணி மருமகளை 15 மணி நேரம் அமர வைத்த அதிகாரிகள் – பாஜக-வை சாடிய லாலு

பீகாரில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தை பா.ஜ.க படிப்படியாக அழிக்க முயன்றதால் முதல்வர் நிதீஷ் குமார் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனால் கோபமடைந்துள்ள மத்திய அரசு, லாலு பிரசாத் யாதவின் பழைய வழக்குகளை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. ஏற்கெனவே லாலு பிரசாத், அவரின் மனைவியிடம் வீட்டுக்கேச் சென்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கப் பிரிவு … Read more

கனடாவின் புதிய தடை: ரஷ்யாவிற்கு மீண்டும் பங்கமான அடி!

ரஷ்யாவிலிருந்து அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. அலுமினியம், எஃகு இறக்குமதிக்கு தடை உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிக்கக்கூடிய வர்த்தகத்திற்கு மறுபு தெரிவிக்க கனடா தீர்மானித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அனைத்து ரஷ்ய அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. “உக்ரைன் இந்தப் போரை வெல்ல முடியும் மற்றும் வெல்ல வேண்டும். புடினின் சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித்தனமான உக்ரைன் படையெடுப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் வருவாயைக் குறைக்க அல்லது … Read more

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை பயணம் புகைப்பட கண்காட்சியை பார்வைட்ட ரஜினி, ஸ்டாலினுக்கு புகழாரம்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை பயணம் புகைப்பட கண்காட்சியை பார்வைட்ட  நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார். தலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்று தான் என்று கூறியதுடன், அமைச்சர்  சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என்றும் அவரதும் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. . இக்கண்காட்சியினை … Read more

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என்றும் கணித்துள்ளது. 

சினிமா பாணி ஸ்கெட்ச்; காருடன் நேருக்கு நேர் மோதல் – திருவாரூரில் பிரபல ரெளடி கொலை

திருவாரூரில் நீதிமன்றத்துக்கு சென்று விட்டு திரும்பிய பிரபல ரெளடி ஒருவர் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவில் வரும் காட்சிகளை விஞ்ச கூடிய வகையில் நடந்த இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி ராஜ்குமார் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் … Read more

உங்களுக்கு பி-12 குறைபாடா? இதனால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா

சிறியோர் முதல் பெரியோர் வரை உடலிலுள்ள அன்றாட செயற்பாடுகளுக்கு அவசியமான சில விட்டமின்கள் உள்ளன.அவை குறையுமிடத்து உடலின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு சில உணவுகளின் மூலமே உடல் அவ்வாறான சத்துகளை உள்ளெடுத்துக்கொள்கிறது.    8 வகைப்படும் விட்டமின்கள் உள்ளன. அதில் பி-12 எனப்படுவதும் ஒன்றாகும். இது ‘சயனோகோபாலமின்’ என அழைக்கப்படும். இது இலகுவில் நீரில் கரையக்கூடியது.   வைட்டமின் பி 12 இன் போதுமான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால், நீங்கள் வைட்டமின் … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ்! தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சிபிசிஐடி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு தடைகேட்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால், பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்டார். அதுபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை … Read more