காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்ற நபர் இன்று காலை 11 மணியளவில் அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த … Read more

ரயிலில் தவறவிடப்பட்ட வேலட்; அமெரிக்கப் பெண்ணுக்கு உதவிய இளைஞர் – வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு

குஜராத்தின் புஜின் பகுதிக்கு அமெரிக்கப் பெண் ஒருவர் சுற்றுலாவுக்காக வந்திருந்தார். அப்போது, அவர் பயணித்த ரயிலில் அவரது பர்ஸை மறந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு சிராக் என்பவரிடமிருந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் வந்திருக்கிறது. அதில், `உங்களுடைய வேலட்டை ரயிலில் மறந்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள். அது இப்போது என்னிடம்தான் இருக்கிறது. வந்து வாங்கிச் செல்லுங்கள்’ எனத் தெரிவித்து, அவரது முகவரியையும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணும், அந்த நபர் சொன்ன முகவரிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரின் வேலட்டை பத்திரமாக அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறார் அந்த நபர். இது தொடர்பாக அமெரிக்கப் பெண், சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். அவர் … Read more

நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம்

இந்திய மாநிலம் தெலங்கானாவில் காதலிக்கு தொல்லை கொடுத்த தனது நண்பனின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கோண காதல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஹரி ஹர கிருஷ்ணா(21). இவரும் நவீன் (22) என்ற இவரது நண்பரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்தனர். இருவரில் நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அப்போது … Read more

முதலமைச்சர் பேச்சுக்கு அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: முதலமைச்சர் பேச்சுக்கு அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உததவித்தொகை குறித்து ஈபிஎஸ் பேசியதற்காக முதல்வர் பதில் அளித்துள்ளார், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதி கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர்  ரகுபதி கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்குள் குடும்பத்துடன் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குஜராத் நபர் 'டிரம்ப்' சுவரில் இருந்து கீழே விழுந்து பலி – 2 பேர் கைத…

அகமதாபாத், குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டல் கலோல் பகுதியில் வசித்து வந்தவர் பிரிஜிகுமார். அவருக்கு பூஜா என்ற மனைவியும் தன்மென் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே, பிரிஜிகுமார் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்துள்ளார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும் தரகர் கும்பலை அனுகியுள்ளார். அந்த தரகர் கும்பல் கொடுத்த ஆலோசனை படி கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜிகுமார் தனது மனைவி பூஜா, மகன் தன்மென் ஆகியோருடன் மும்பையில் … Read more

அதிமுக-வை இனி பிரச்னையின்றி வழிநடத்துவரா எடப்பாடி பழனிசாமி?!

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு கூட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கினார். அதில், எடப்பாடி … Read more

ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ! ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்..வீடியோ

டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் மிரட்டலான ஆட்டத்தினால் அல் நஸர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஹாட்ரிக் கோல் பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 18வது நிமிடத்தில் எதிரணி வீரர் Hand Ball செய்ததால் அல் நஸருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ, அசத்தலாக கோல் அடித்து தனது வேட்டையைத் தொடங்கினார். அதன் பின்னர் 23வது நிமிடத்தில் … Read more

மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு: மின்வாரியம் சுற்றறிக்கை

சென்னை: மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர். சிறுதானியங்களில் தயாரித்த லட்டு, மிக்சர், கொழுக்கொட்டை, பிஸ்கட், சீடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளனர். அனைத்து மின்வாரிய அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

ஷில்லாங், மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : மேகாலயா நிலநடுக்கம்

”நரபலியிலிருந்து என்னை பெரியார் மண்தான் காப்பாத்தியிருக்கு; இனிமே நான், என்…” – ஷாலினி சர்மா பேட்டி

“ஆர்.எஸ்.எஸில் உள்ள என் வளர்ப்புத் தாய் ஏற்கனவே என் தம்பியை நரபலி கொடுத்துவிட்டார். அடுத்து என்னையும் நரபலி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்ற பகீரிட வைக்கும் குற்றச்சாட்டுடன், 23 வயது இளம்பெண் ஷாலினி சர்மா மத்திய பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி தமிழகத்திற்கு ஓடிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் ஷாலினி ஷர்மாவை விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். உயிர் அச்சத்திலிருந்து மீளாதவராக நம்மிடம் பேசினார்,  “மத்திய பிரதேசம் மாநிலம் … Read more