மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

ஷில்லாங், மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : மேகாலயா நிலநடுக்கம்

”நரபலியிலிருந்து என்னை பெரியார் மண்தான் காப்பாத்தியிருக்கு; இனிமே நான், என்…” – ஷாலினி சர்மா பேட்டி

“ஆர்.எஸ்.எஸில் உள்ள என் வளர்ப்புத் தாய் ஏற்கனவே என் தம்பியை நரபலி கொடுத்துவிட்டார். அடுத்து என்னையும் நரபலி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்ற பகீரிட வைக்கும் குற்றச்சாட்டுடன், 23 வயது இளம்பெண் ஷாலினி சர்மா மத்திய பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி தமிழகத்திற்கு ஓடிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் ஷாலினி ஷர்மாவை விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். உயிர் அச்சத்திலிருந்து மீளாதவராக நம்மிடம் பேசினார்,  “மத்திய பிரதேசம் மாநிலம் … Read more

டெஸ்டில் 66 பந்துகளில் 95 ஓட்டங்கள் விளாசல்! 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிய இலங்கை வீரர்

இலங்கையின் தம்புல்லா அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்கா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிரடியாக 95 ஓட்டங்கள் விளாசினார். தேசிய சூப்பர் லீக் நான்கு நாட்கள் கொண்ட தேசிய சூப்பர் லீக் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஜாஃப்னா, கண்டி, தம்புல்லா, காலே உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன. கொழும்பில் நடந்த போட்டியில் தம்புல்லா அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜாஃப்னா அணி 236 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தம்புல்லா … Read more

திருப்பூர் காங்கேயம் அருகே லாரியும், மினி லாரியும் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே லாரியும், மினி லாரியும் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காங்கேயத்தில் இருந்து முத்தூருக்கு செல்லும் வழியில் வேன் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

விமான நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்| Gold worth Rs 53 lakh seized at airport

திருவனந்தப்புரம்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,259 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பயணியின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மாத்திரை வடிவில் உள்ள 4 தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துபாயில் இருந்து வந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவனந்தப்புரம்: கேரளா மாநிலம் … Read more

"சிறையிலிருந்து சீக்கிரம் திரும்ப பிரார்த்திக்கிறேன்" – சிசோடியா கைதாவதற்கு முன்பே கெஜ்ரிவால் ட்வீட்

டெல்லி மதுக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று விசாரணை நடத்தவிருக்கிறது. முன்னதாக பிப்ரவரி 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, டெல்லியின் நிதி அமைச்சராக நிதிநிலை அறிக்கை தயாரித்து வருவதால், விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தார் மணீஷ் சிசோடியா. அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, அவரிடம் இன்று விசாரணை மேற்கொள்கிறது. இந்த நிலையில், மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகள் உட்பட நாட்டு மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. … Read more

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… முக்கிய பிரபலங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவினை ஆடம்பரமாக கொண்டாட அரண்மனை வட்டாரங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முக்கிய பிரபலங்கள் பலர் மறுப்பு தெரிவித்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடம்பர விழா எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட இருக்கிறது. பல காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையை சார்லஸ் மன்னர் குறைத்துக்கொண்டாலும் விழாவானது ஆடம்பரமாகவே நடக்கவிருக்கிறது. @getty மட்டுமின்றி, விண்ட்சர் கோட்டையில் முக்கிய பிரபலங்கள் பங்கேறும் இசை விழா ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர். … Read more

ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கருவிகள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிவர்: ஆர்.கே.செல்வமணி

சென்னை: ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கருவிகள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிவர் என்று பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு நடிகர்கள், மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்று ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ., அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்| Manish Sisodia present at CBI office

புதுடில்லி: புதுடில்லியில் நடந்த மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்தில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆஜரானார். புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கடந்த வாரம், விசாரணைக்கு ஆஜராகும்படி, அம்மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு, சி.பி.ஐ.,இரண்டாவது முறையாக, ‘சம்மன்’ அனுப்பியது. முறைகேடு தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ., … Read more

”கனிமக் கடத்தலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!” – முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

நெல்லை, தூத்துக்குடி, தனாசி மாவட்டங்களில் செயல்படும் கனிம குவாரிகளிலிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அனுமதி இல்லாமலும் கனிமக் கடத்தல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். கனிமக் கடத்தல் எதிர்ப்பு போராட்டம் இந்த நிலையில், கனிமக் கடத்தலைத் தடுக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் … Read more