48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்… இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள்

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7 சீன பண்ணை தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார். இருவேறு பண்ணைகளில் ஏழு சீன பண்ணை தொழிலாளர்களும் துப்பாகியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இருவேறு பண்ணைகளில் இந்த 7 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் 4 சடலங்களும் இன்னொரு பண்ணையில் 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டது. @abc7 மேலும் சம்பவத்தின் போது சிறார்களும் அப்பகுதியில் காணப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த சில … Read more

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மற்றும் ஆளுநர்…

புதுச்சேரி: புதுச்சேரியில்  மாநில அரசு அறிவித்துள்ளபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி நேற்று (25-01-23)  மாலை தொடங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சர் என்ஆர்.ரங்கசாமிம்,  ஆளுநர் தமிழிசையும் இணைந்து பயனர்களுக்கான   திட்டத்தை தொடங்கி வைத்தனர். புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் என்ஆர். ரங்கசாமி,  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு … Read more

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு பல வருடங்கள் வாடகை கட்டாமல் இருந்த 40 கடைகளுக்கு சீல்..!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு பல வருடங்கள் வாடகை கட்டாமல் இருந்த 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடை உள்ளிட்ட 40 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாக்குறுதி தந்தால் தான், காங்., உடன் கூட்டணி வைப்பேன் என நிபந்தனை விதித்தால் என்ன?| Speech, interview, report

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டியது. காங்., தலைவராக இருந்த ஆச்சார்யா, ‘அரசியலில் ஓய்ந்து, தோற்று போனவர்களுக்கு பதவி கொடுக்க கவர்னர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன’ என்றார். ‘அந்த மாளிகைகளை, ஏழைகளுக்கான மருத்துவ மனைகளாக பயன்படுத்தலாம்’ என, மஹாத்மா காந்தி கூறியுள்ளார். ‘கவர்னர் பதவிகளை கலைப்பதாக வாக்குறுதி தந்தால் தான், காங்., உடன் கூட்டணி வைப்பேன்’ என நிபந்தனை விதித்தால் என்ன? இந்திய கட்டுனர் சங்க முன்னாள் தேசிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி: … Read more

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட பிபிசி-யின் ஆவணப்படம்… ஏபிவிபி மாணவர் அமைப்பு புகார்!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரம், நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. நரேந்திர மோடி இந்த நிலையில், … Read more

மனிதர்களால் ஏற்படும்… நம்ப முடியாத பேரழிவாக இருக்கும்: முக்கிய நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்

மனிதனால் உருவாக்கப்பட்ட, மிகவும் ஆபத்தான அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக இருக்குமாறு பில் கேட்ஸ் அவுஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார். ஒன்றாகச் செயல்பட வேண்டும் சிட்னியில் திங்களன்று ஆய்வாளர்கள் குழு ஒன்றை சந்தித்த பில் கேட்ஸ், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள ஒன்றாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். @getty உலக நாடுகள் ஒரே அணியாக திரண்டு, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா … Read more

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே 26ந்தேதி கொடியேற்றுகிறார் கவர்னர் ரவி…

சென்னை: நாளை மறுதினம் (26ந்தேதி) குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென் ன கடற்கரை காமராஜர் சாலை  உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவையொட்டை நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் … Read more

திண்டுக்கல் சிறுமலை மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

திண்டுக்கல்: சிறுமலை மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். 18-வது கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் பேருந்து கவிழந்தது. பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக விபத்து என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 15 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

வாஹீர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் சேர்ப்பு | Induction of Waheer submarine fleet

மும்பை, :இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, ‘ஐ.என்.எஸ்., வாஹீர்’ என்ற நீர்மூழ்கி கப்பல், நேற்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில், ‘ஐ.என்.எஸ்., வாஹீர்’ என்ற, நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முழுமையாக முடிவடைந்து, வெள்ளோட்டம் பார்க்கும் பணிகளும் நடந்து வந்தன. இதையடுத்து, இந்த கப்பல் இந்திய கடற்படையில் நேற்று … Read more

கொலிஜியம் விவகாரம்: நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஏன்?!

ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்களில் ஒன்றான நீதித்துறை, சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிவருகிறது. நீதித்துறைக்கான சுதந்திரத்தை இந்திய அரசியல் சாசனம் உறுதிசெய்திருக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் அமைப்பால், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறை 1998-ம் ஆண்டிலிருந்து இருந்துவருகிறது. இந்த முறையை மாற்ற வேண்டும் என்பது பா.ஜ.க அரசின் … Read more