சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை! தேவசம் போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை  விதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேவசம் போர்டு என அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம்  நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் நடை டிசம்பர் 30ந்தேதி  மாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில் நடை  அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு … Read more

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்துக்கு தடை விதித்து எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார்.

மதுரை: ரயில் பாதையில் விரிசல்; மொபைலில் படம் பிடித்து விபத்தைத் தடுத்த இளைஞர்!

ரயில்பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் பார்த்து சமயோசிதமாகச் செயல்பட்ட இளைஞரை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அழைத்து பரிசு கொடுத்துப் பாராட்டியுள்ளனர். ரயில்வே மதுரை அருகே சமயநல்லூர் – கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசித்து வருகிறார் சுந்தர மகாலிங்கம். இவர் மகன் சூர்யா கடந்த டிசம்பர் 15 அன்று காலை 8 மணியளவில் தனது வீட்டு அருகே செல்லும் ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அதை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவர், … Read more

குடும்பத்துடன் மோதல்! சிம்ம ராசிக்காரரான மேகன்… இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடரும் மறைந்த இளவரசி டயானாவின் நம்பகமான நண்பருமான டெபி ஃபிராங்க், மேகன் மெர்க்கல் தொடர்பான எதிர்காலத்தை கணித்துள்ளார். மேகன் பிரகாசிக்கப் பிறந்தவர்  அதன்படி 2023 ஆம் ஆண்டில் மேகன் பல இன்னல்களை சந்திப்பார் என டெபி கூறியிருக்கிறார். அதே நேரம் சிம்ம ராசிக்காரரான மேகன் பிரகாசிக்கப் பிறந்தவர் என குறிப்பிட்டுள்ள டெபி, அவருக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும் என கணித்துள்ளார். அவரது போராடும் குணம், மே மாதம் முடி சூட்டும் … Read more

பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்! துரைமுருகன் அதிரடி

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை திமுகவில்  இருந்து நீக்கம் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்,. சென்னை விருகம்பாக்கத்தில்  நடைபெற்ற திமுக பொதுக்கூட்டர்ததில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து,  இந்த புகாரின் பேரில் … Read more

திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் வீட்டில் தனியாக இருந்த ராதா என்பவர் நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மடாதிபதி சித்தேஸ்வரா உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு.| Abbot Chitheswara cremation with full state honors

விஜயபுரா : மடாதிபதி சித்தேஸ்வரா உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவரது மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு தலைவர்கள் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். விஜயபுராவில் உள்ள ஞானயோகி ஆசிரமத்தை சேர்ந்த மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமிகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆசிரமத்திலேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பக்தர்கள், மடாதிபதியை சந்திக்க ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் பக்தர்கள் … Read more

INDvSL: அறிமுகமே அசத்திய சிவம் மவி; கடைசி ஓவரில் வேகம் கூட்டிய அக்சர்; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, கடைசி வரை பரபரப்பைக் கூட்டி படபடக்க வைத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. Ind Vs SL போட்டிக்கு முன்பாக டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ‘இந்த பிட்ச் சேஸிங்கிற்கு உகந்ததுதான். ஆனால், நாங்கள் சேஸிங்க் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே சவாலளித்துக் கொள்ள விரும்புகிறோம். … Read more

தகன இல்லங்கலில் குவியும் சடலங்கள்… மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள்

சீனாவில் கொரோனா பாதிப்பால் இறந்த சொந்தங்களை உறவினர்களே தனியாக தகனம் செய்யும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகன இல்லங்களில் நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் எரியூட்டும் நிலை உருவாகியுள்ளதுடன், தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளது. @reuters பொதுவாக 40 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது 200 சடலங்கள் வரையில் எரியூட்டும் சூழல் … Read more