நட்சத்திரத்திலும் நாம் கால்பதி்ப்போம்: ஜனாதிபதி குடியரசு தின உரை| G20 presidency is an opportunity to promote democracy&multilateralism & the right forum for shaping a better world & a better future

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாம் நட்சத்திரத்திலும் கால்பதி்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு , குடியரசு தின செய்தி வெளியிட்டு உரையாற்றினார். நாளை (ஜன. 26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு: குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் … Read more

பி.பி.சி டாக்குமென்டரி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு; ஏ.கே.அந்தோணியின் மகன் காங்கிரஸிலிருந்து விலகல்

குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி டாக்குமென்டரியை கேரள மாநிலத்தில் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் பொது இடங்களில் வெளியிட்டு வருகின்றனர். டாக்குமென்டரியில் பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி பா.ஜ.க போராட்டம் நடத்தி வருகிறது. திருவனந்தபுரத்தில் டி.ஒய்.எஃப்.ஐ சார்பில் டாக்குமென்டரி வெளியிட்ட பகுதியில் போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர்மீது வஜ்ரா வாகனங்கள் மூலம் தண்ணீர் பிய்ச்சி அடித்த சம்பவங்களும் நடைபெற்றன. காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் பி.பி.சி டாக்கிமென்டரியை வெளியிடுவதற்கு எதிராக முன்னாள் … Read more

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது . இந்த வழக்கு பொங்களூரு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் 2017-ம் ஆண்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து உச்ச … Read more

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்: பாரிவேந்தர் எம்.பி.

சென்னை: உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்பை தர உறுதியேற்போம் என கூறியுள்ளார். ஆற்றல் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க உறுதியேற்போம் என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தைச்சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களுக்கு பத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு…| Padma awards to two snake charmers from Tamil Nadu: Central government announced…

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : தமிழகத்தின் இருளர் இனத்தைச்சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் – தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும்பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பத்மவிருதுக்கு தேர்வு பெற்றவர்கள் பெயர் இன்று … Read more

திருப்பூர்: அடிக்கடி தோட்டத்துக்குள் வந்ததால் ஆத்திரம்; வளர்ப்பு நாயைக் கொன்று எரித்த விவசாயி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ளது நாச்சம்மாள்பள்ளம்புதூர். இந்த ஊரில் வசித்து வருபவர் விவசாயி குப்புசாமி (57). அதே கிராமத்தில் இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நாய் ஒன்றினை வளர்த்து வந்திருக்கிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் அந்த நாயைக் காணவில்லை என மூலனூர் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், குப்புசாமி தோட்டத்துக்கு அருகில் வசிக்கும் விவசாயி ராமலிங்கம் (53) என்பவர் நாயை அடித்துக் கொன்று, … Read more

எதிர்காலத்துக்கு பெரிய அபாயம்… எலான் மஸ்க் எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

எதிர்கால கலாச்சாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க். எலான் மஸ்க் எச்சரிக்கையின் பின்னணி விடயம் என்னவென்றால், சமீபத்தில் ஜப்பான் பிரதமரான Fumio Kishida, தனது நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரித்திருந்தார். அதாவது, ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துவருகிறது. ஆகவே, ஜப்பான் சமூக நிலைகுலைவின் விளிம்பில் இருப்பதாக எச்சரித்திருந்தார் அவர். Elon Musk had stern words for those not … Read more

குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் மீண்டும் வெளியீடு! தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு  ஜூலை 17ந்தேதி தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில்  முதன்முறையாக மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தற்போது மீண்டும் மொழிபெயர்க்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு அமைத்துள்ளார். இந்த நிலையில்,  ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்ட  1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு..!!

திருவாரூர்: ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!

ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவம் துவங்குவதற்கு முன்பாக, 23 வகையான பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்வது வழக்கம். மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம்,  இந்த 23 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும். மத்திய அரசு நிர்ணயம் செய்த பின், மாநில அரசுகள், ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசு 2023 – 24 … Read more