குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு, 158 பயணிகளுடன்,நேற்று இரவு 11.05க்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு, 11:51 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 6:55 மணிக்கு சென்னை வர வேண்டிய அந்த விமானம், காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக்.,குக்கு ஆதரவாக பள்ளி மாணவன் கோஷம்| School student slogan in support of Pak

தானே, மஹாராஷ்டிராவில், நகராட்சி அலுவலக வாசலில் நடந்த போராட்டத்தில், 14 வயது சிறுவன் பாகிஸ்தான் வாழ்க என, கோஷமிட்டதை தொடர்ந்து, 19 பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து … Read more

ராகுல் காந்தி – கமல்ஹாசன் நெருக்கம்… பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா?!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபகாலமாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டிவருகிறார். இந்த நெருக்கத்தின் பின்னணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகள் இருக்கின்றனவா? பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்! கடந்த டிசம்பர் 24 அன்று, டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கைகோர்த்து நடந்தார் கமல்ஹாசன். அன்று மாலை நடைபயணம் முடிந்த பிறகு டெல்லி செங்கோட்டை அருகே பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய கமல், “இந்தக் … Read more

2022-ல் நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய கனடா!

கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது. கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கியதன் மூலம் புதிய குடியேற்ற சாதனையை படைத்துள்ளது என்று கனேடிய அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. 4.3 லட்சம் பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி 2022-ஆம் ஆண்டில் 431,645 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அரசாங்கம் இலக்கை நிர்ணயித்த கனேடிய அரசாங்கம், அந்த இலக்கை அடைந்து கனேடிய வரலாற்றில் அதிக மக்களுக்கு குடியிருப்பு … Read more

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை…

கஜகஸ்தான்: ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை சாரா காதெம் (வயது 25). அண்மையில் கஜகஸ்தான் நாட்டின் அல்மேட்டி நகரில் நடந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் சாரா காதெம் கலந்து கொண்டு விளையாடினார். அவர் விளையாடும்போது, பர்தா அணியவில்லை என கூறப்படுகிறது. ஈரான் நாட்டு அரசு சட்டத்தின்படி, ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. … Read more

ஜன.04: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

புதுடில்லியில் நடந்த கொடூர சாலை விபத்து விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்| New information revealed in the investigation of the horrific road accident in New Delhi

புதுடில்லி, புத்தாண்டு தினத்தன்று புதுடில்லியில் நடந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவில்லை என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. புதுடில்லியில், ஆங்கில புத்தாண்டு தினமான 1ம் தேதி அதிகாலையில் நடந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 20 வயது பெண் கார் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட … Read more

திருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் கைது

திருப்பூர் புறநகர்ப் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குச் சென்ற 14 வயதான மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.