கால்பந்து மைதானத்தில் 135 பேர் பலியான துயரம் சம்பவம்! இரண்டு அதிகாரிகளுக்கு சிறை

இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் பலர் பலியான சம்பவம் தொடர்பில், இரண்டு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். 135 பேர் பலியான துயர சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அப்போது திடீரென கலவரம் வெடித்தது. ஆடுகளத்திற்குள் பலர் புகுந்தனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. @H … Read more

பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பயத்தை போக்க நடவடிக்கை! டிஜிபி

கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள்  இன்னும்  பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, தமிழ்நாட்டின் தொழிற்நிறுவங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி குறித்து, தமிழக காவல்துறையும், மாநிலஅரசும் பல்வேறு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சித்து விளையாட்டு போன்று ஆளுநர் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். மசோதாவை மீண்டும் அனுப்பினால் அதை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு எந்த சட்டவாய்ப்பும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

“வதந்தி வீடியோ; முன்ஜாமீன் பெற்றவர் தமிழகத்தில்தான் கையெழுத்திட வேண்டும்!" – டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில், அவர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் டி.பி.ஜி சைலேந்திர பாபு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரைப் பொறுத்தவரை 471 பின்னலாடை நிறுவனங்களுக்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு நடத்தியதுடன், சுமார் 46,000 வடமாநிலத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றனர். சைலேந்திர பாபு திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக … Read more

நூதன முறையில் தங்கத்தை கடத்த முயன்ற விமானப் பணியாளர் கைது!

 கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் ஒருவர் தங்கம் கடத்தியதாகக் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகச் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்க கடத்தல் கேரள மாநிலத்தின் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவர் ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் 1487 கிராம் தங்கத்தைக் கடத்தியதற்காகக் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சி சர்வீஸ் கேபின் க்ரூ உறுப்பினர் ஷாஃபி என்பவர் தங்கம் கொண்டு வருவதாகச் சுங்கத் தடுப்பு … Read more

தமிழ்நாட்டில் இயக்கப்பட உள்ள கோடைகால சிறப்பு ரயில்கள் விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலத்தின் பயணிகளின் தேவையைக்கருதி,  சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரயில் எண் 06004 திருநெல்வேலி- தாம்பரம் , இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து  இரவு 7.30-க்கு புறப்படும். அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  இந்த ரயில் 2,9,16,23,30 ஏப்ரல் மாதத்தில், 7, 14, 21, … Read more

100 நாள் வேலைத் திட்ட மோசடி தொடர்பான புகாரில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சிவகங்கை: 100 நாள் வேலைத் திட்ட மோசடி தொடர்பான புகாரில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கண்டதேவி ஊராட்சித் தலைவர், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுருந்தது. கூட்டுறவு வங்கி ஊழியர்கள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் பெயரில் பதிவு செய்து ஊராட்சி நிதியில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.

என் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி

ஐதராபாத், டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்தும், பின்னர் 2-வது முறையாக 6-ந்தேதி … Read more

How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How To Use Green Tea For Skin Care?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் க்ரீன் டீ இடம் பிடித்திருக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் என, பலவிதங்களில் உதவும். உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளுடன், வெளிப்புற சருமத்திற்கும் க்ரீன் டீ இலைகள் நல்ல பலனை தர கூடியது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குதல், சருமத்தில் பளபளப்பை கொண்டு வருதல், … Read more

அவசரப்படவேண்டாம்… எரிவாயுக் குழாய் சேதம் தொடர்பில் எச்சரிக்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்

ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர். அமெரிக்க தரப்பிலிருந்து வெளியான தகவலால் பரபரப்பு New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. அது வேண்டுமென்றே செய்யபட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord … Read more