பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்! தவெக செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்…

சென்னை:  பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்  என்றும், அப்போது  எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக கூறினார். விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து … Read more

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ; ஒருவர் பலி

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்தார் தர்சிம் சிங். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டிஎஸ்பி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தர்சிம் சிங்கிற்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு மகன், மருமகள் இருந்தனர். இதனிடையே, தர்சிம் சிங்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், அமிர்தசரசின் மஜத் சாலை பகுதியில் உள்ள வீட்டில் தர்சிம் சிங்கின் முதல் மனைவி, மகன், மருமகளுடன் வசித்து … Read more

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான டூரிங் ஸ்டைலை பெற்ற டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மாடல்கள் முறையே ₹2,38,682 மற்றும் ₹1,91,654 எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 டோமினார் வரிசையில் Road, Rain, Sport, மற்றும் Off-Road என 4 விதமான முறைகளை பெற்ற ஏபிஎஸ் மோடு, புதுப்பிக்கப்பட்ட ரைடிங் அமைப்பினை மேம்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உடன் புதிய எல்சிடி கிளஸ்ட்டர் மேம்பட்ட திரையுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை … Read more

Vijay: 'தலைமைச் செயலகம் போக விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்….! – பரந்தூர் விவசாயிகள் ரியாக்சன்

‘பரந்தூருக்கு ஆதரவாக தீர்மானம்!’ தவெக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். நிகழ்வில் பரந்தூர் சம்பந்தமாக விஜய் வாசித்த தீர்மானம் கவனம் பெற்றிருந்தது. ‘1500 குடும்பம்தான்னு சொல்றீங்க. அவங்களும் நம்ம மக்கள்தானே.’ என பரந்தூர் மக்களுக்கு ஆதரவாகப் பேசிய விஜய், Vijay ‘விமான நிலையத் திட்டத்தை கைவிடவில்லையெனில் பரந்தூர் விவசாயிகளைத் திரட்டி தலைமைச் செயலகத்துக்கு வந்து உங்களை சந்திக்க நேரிடும்.’ என்றார். விஜய்யின் பேச்சால் பரந்தூர் விமான நிலையம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. விஜய் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்துக்கு … Read more

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் – முழு விவரம்!

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என  தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும்,  பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்  என்றும், அப்போது  எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் … Read more

காதலியை பதிவு திருமணம் செய்த இரவே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருேபட்டை தாலுகா நாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் பாபு (வயது 33). இவர் கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் பாபுவும், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல இடங்கள் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. … Read more

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் பெற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி ஹாரியர்.EV உற்பத்தி துவங்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவில் 10,000 எண்ணிக்கையை கடந்துள்ளதாக தனது X சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது. ரூ.21.49 லட்சம் முதல் ரூ.30.23 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஹாரியர்.இவி காரில் 65Kwh மற்றும் 75Kwh என இரு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே டாடாவின் C75 ரேஞ்ச் 420-455கிமீ முதல் 480-505 கிமீ வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் … Read more

Suriya 45: `சிங்கம் படத்துக்குப் பிறகு இந்தப் படம் கூரையைப் பிச்சுட்டு போகும்!' – சாய் அபயங்கர்

சுயாதீன இசைத்துறையின் தற்போதைய சென்சேஷன், சாய் அபயங்கர், இதுவரை மூன்று சுயாதீன பாடல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களின் இயக்குநர்களும் சாய் அபயங்கரின் பெயரை இசையமைப்பாளராகத் டிக் அடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் தற்போது, சூர்யா, சிம்பு, ப்ரதீப் ரங்கநாதன், ராகவா லாரன்ஸ் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய். அதைத் தொடர்ந்து, தற்போது அவருடைய நான்காவது சுயாதீன பாடலையும் தயார் செய்துவிட்டார். அந்தப் பாடல் ஜூலை … Read more

இந்து குறித்து ஆபாச பேச்சு: பொன்முடி மீதான வழக்கில் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை:   இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை  சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடுவோம் என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில்  தமிழ்நாடு போலீசார் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என  சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாகசாடியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்மீது ஏராளமான வழக்குகள் … Read more

அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

புதுடெல்லி, அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more