2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்  முதன்முறையாக  தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக,  விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை … Read more

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” – அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் … Read more

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: 4 மாதங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:   அரசுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை புதூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘மதுரை புதூர் கொடிக்குளம் பாரத் நகர் மற்றும் சர்வேயர் காலனி பகுதியில் … Read more

புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album

புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா … Read more

கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் … Read more

BB TAMIL 9 DAY 87: விக்ரம் – திவ்யா மோதல்; மீண்டும் பாரு – கம்மு ரொமான்ஸ் – 87வது நாளின் ஹைலைட்ஸ்

சர்ச்சையும் சண்டையும் இல்லாமல் ஸ்போர்டிவ்வாக விளையாடி பாரு அடைந்த வெற்றி ஒன்று உண்டென்றால் அது TTF5 மட்டுமே. அதற்காக பல இடிகளைத் தாங்க வேண்டியிருந்தது. வெல்டன். அத்தனை அசிங்கமான சண்டைகளுக்குப் பிறகும் பாரு – கம்மு ரொமான்ஸ் மீண்டும் பூக்க ஆரம்பித்திருக்கிறதா?! அது உண்மையெனில் பாரு அனத்தியது அத்தனையும் பொய் என்று பொருள். BB TAMIL 9 DAY 87 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 87 ‘கோடு போட்டா’ என்கிற பாடலுடன் … Read more

1000 கிலோ வெடிமருந்துகளுடன் சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘பிரளே’விற்கான பயனர் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒற்றை ஏவுகணையிலிருந்து அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,   துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்க டிஆர்டிஓவின் தொடர்ச்சியான 4வது நாள் சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டில் … Read more

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் – சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகைகள் மற்றும் பட்டாடைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் கோயில் அம்மன் சன்னிதி அனுப்பு மண்டபத்தில் வைத்து எண்ணப்படும். கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. கோயிலின் பிரதான உண்டியல்கள் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பில் அறநிலையத்துறை அதிகாரிகள், … Read more

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன்! அன்புமணி சாடல்

சென்னை: தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன் வைத்துள்ளது என  குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி,   கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி,  தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. … Read more