கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 4 பதின்ம வயதினர்., தீவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா கடற்பரப்பில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரண்டு பெண்கள் உட்பட நான்கு பதின்ம வயது இளைஞர்கள் தீவு ஒன்றில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். விக்டோரியா மாகாணத்தின் மார்னிங்டன் தீபகற்பத்தில் உள்ள உள்ள Rosebud நகரத்தில் Point Nepean கடலோர சாலைக்கு சற்று அப்பால் கடற்கரையில், திங்கட்கிழமை காலை க்ளென் வேவர்லியைச் சேர்ந்த இரண்டு 18 வயதுடைய ஆண்கள், 18 வயது பெண் மற்றும் 19 வயது பெண் ஆகியோர் அலைச் சறுக்கு (inflatable paddleboards) … Read more

மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது

மதுரை: மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபல கம்பெனியின் பெயர், லோகோவை பயன்படுத்தி டீ தூள் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவுக்குள் சீனா நுழைந்தது போல்… கர்நாடகாவுக்குள் நுழைவோம்” – சிவசேனா எம்.பி. எச்சரிக்கை

மகாராஷ்டிரா, கர்நாடகா இடையிலான எல்லை பிரச்னை கடந்த 50 ஆண்டுகளாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் பெலகாவி எனப்படும் பெல்காமை மகாராஷ்டிராவோடு இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா கோரி வருகிறது. சமீபத்தில் இரு மாநிலங்களும் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அமித் ஷா இரு மாநில முதல்வர்களையும் சந்தித்து பேசினார். அதோடு கர்நாடகாவின் பெல்காமில் இரு மாநில வாகனங்களும் தாக்கப்பட்டன. மேலும் திங்கள் கிழமை மராத்திய அமைப்புகள் … Read more

8 இளம்பெண்களிடம் தனியாக சிக்கிய ஆணுக்கு நேர்ந்த பரிதாபம்: கனடாவில் அதிரவைக்கும் ஒரு சம்பவம்

கனடாவின் ரொரன்றோவில், வீடற்ற நபர் ஒருவரை எட்டு இளம்பெண்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட வீடற்ற நபர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொரன்றோவில், யார்க் பல்கலை பகுதியில், 59 வயதுடைய வீடற்ற ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது படுகாயமடைந்த நிலையில் கிடந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், காயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலையாளிகள் யார் என தெரியவந்ததால் … Read more

துணை முதலமைச்சர் பதவி 'டம்மி' என்பதால் அதனை வேண்டாம் என கூறினேன்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: துணை முதலமைச்சர் பதவி ‘டம்மி’ என்பதால் அதனை வேண்டாம் என கூறினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். துணை முதலமைச்சராக இருந்த 4 ஆண்டு காலத்தில் நான் தவறு செய்ததாக சொன்னால் மன்னிப்பு கேட்கத் தயார். 4 ஆண்டு காலமும் அதிகாரம் முழுவதையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

25 கிலோ ஹெராயின் பறிமுதல்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாசில்லா பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று(டிச.,21) பஞ்சாப் அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் பரோபல் கிராமத்தின் அருகே பாகிஸ்தானின் ட்ரோன் பறந்தது. உடனடியாக எல்லை … Read more

மகாராஷ்டிரா: தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி-பலே கும்பல் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநில தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மர்ம கும்பல் மோசடி செய்தது. மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த சாகர் ஜாதவ் என்பவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்த பிறகுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சாகர் ஜாதவ் போலீஸில் கொடுத்த புகாரில், “நண்பர் ஒருவர் மூலம் மகேந்திர சக்பால் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சக்பால் தனக்கு மந்த்ராலயா எனப்படும் மாநில தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகளை … Read more

அதிவேக சார்ஜிங்! மிக குறைந்த விலை… மீண்டும் சந்தைக்கு வந்த நோக்கியோ ஸ்மார்ட்போன்

நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்தியாவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் பெற்றிருக்கிறது. நோக்கியோ சி31 ஸ்மார்ட்போன் இதையடுத்து சமீபத்தில் நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 1600 x 720 ரெசல்யூஷன் கொண்ட 6.74-இன்ச் LCD டிஸ்பிளே, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் 2.5டி கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. 1.6Hz octa-core Unisoc processor ப்ராசஸ்ரில் இயங்கும் ஸ்மார்ட்போன் இது. மேலும் இதன் பேஸ் வேரியண்டில் 3ஜிபி + 32ஜிபி, 4ஜிபி+64ஜிபி … Read more

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா: அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை என ராகவன் என்பவர் தொடர்ந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

பிக் பாஸ் 6 நாள் 72: `கனா காணும் காலங்கள்' வீடு; கமல் சொன்னதை மீறிய அசிம் – தனலட்சுமி!

இந்த வார வீக்லி டாஸ்க்கான ‘கனா காணும் காலங்கள்’ பார்ப்பதற்கு சற்று சுவாரசியமாக இருந்தது. எந்த வித நெகட்டிவிட்டியையும் வெளிப்படுத்தாமல் மழலைகளாகவே மாற முயன்ற ஹவுஸ்மேட்ஸ்களின் மெனக்கெடலையும் குறும்புகளையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இதில் திருஷ்டிப் பரிகாரமாக அமைந்தது, அசிம் – தனலஷ்மி உரையாடல். ‘விதிமீறல் செய்யாதீர்கள்’ என்று கமல் அத்தனை அழுத்தமாக எச்சரித்தும் கூட ‘இந்த வாரம் யார் வெளியே போவாங்க?’ என்று எவிக்ஷனைப் பற்றி இருவரும் பேசியதை தவிர்த்திருக்கலாம். பிக் பாஸ் வீட்டில் … Read more