நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம்: நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

`ஏற்கெனவே திருமணமானவரா?’ தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது நடந்த மணப்பெண் கடத்தல் சம்பவம் சர்ச்சையானது மணப்பெண் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் … Read more

முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி… மன்னரின் தீர்மானம்: அச்சத்தில் இளவரசர் வில்லியம்

மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டுவிழாவில் தன் இளைய மகன் ஹரியும், மருமகள் மேகனும் பங்கேற்றேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இளவரசர் ஹரி தரப்பின் நிலை மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா, வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை ஹரி, மேகன் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மன்னரின் தீர்மானம் மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் தனது இளைய மகன் ஹரியையும், மருமகள் மேகனையும் தனது … Read more

கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? கோபாலபுரம் வீட்டில் வைக்கலாமே! சவுக்கு சங்கர் காட்டம்!

சென்னை: கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? என கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கர், ‘துணிவு வசூலை எடுத்து பேனா சிலை வைக்கலாம், முரசொலி அறக்கட்டளை பணத்தைக்கொண்டு, கோபாலபுரம், வேளச்சேரி, உளுந்தை கிராமம் போன்ற உங்களுக்கு சொந்தமான இடங்களில். இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே! என காட்டமாக விமர்சித்தார். ஜிஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை விமர்சித்ததாக கூறிய புகாரின் பேரிலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகவும், காவல்துறையினரால்  கைது … Read more

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

சென்னை: பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 12,400 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு டிஜிபி வளாகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Union Cabinet approves the budget

புதுடில்லி: 2023 – 24ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். புதுடில்லி: 2023 – 24ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முன்னதாக நிதி அமைச்சர் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

இதோ சிக்கினான்டா ராஜாக்கிளி! – அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இப்போது ஆசிரியையாக பணி புரியும் என் சிறு வயது தோழியின் கிராமத்திற்கு ரெண்டு நாள் பயணமாக சென்றிருந்தேன். சிறு வயது கதைகள் பேசி சிரித்து மகிழ்ந்து நல்ல உணவருந்தி மதியம் ஒரு சின்ன தூக்கம் போட்டு எழும்பினோம். பின் மதியம் நாலு மணிக்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுடை இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டிற்கு டிபன் சாப்பிடவும் தான், உங்க தலைவர்கள் போனாங்களா?| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: யாரையும் தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை, அ.தி.மு.க.,விற்கு இல்லை. நாங்கள் யாருக்கும் எஜமானரும் இல்லை; அடிமையும் இல்லை. ஈரோடு தேர்தலில் மக்கள், பழனிசாமி பக்கம் உள்ளனர். அப்ப, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வீட்டிற்கு டீ சாப்பிடவும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டிற்கு டிபன் சாப்பிடவும் தான், உங்க தலைவர்கள் போனாங்களா? பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மேட்டூர் அணையில் … Read more