பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக 12 கிராம மீனவர்களிடையே பிரச்சனை இருந்து வந்தது. ஏற்கனவே பிரச்சனை தொடர்பாக பல கட்ட பேச்சு நடத்தி ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

மகரவிளக்கு பூஜைக்குத் தயாராகும் சபரிமலை; பந்தளத்திலிருந்து 12-ம் தேதி புறப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதற்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டலபூஜை நிறைவடைந்து இரண்டு நாள்கள் சபரிமலை நடை சார்த்தப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதிவரை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான சுத்தி கிரியைகள் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 12-ம் தேதி … Read more

இலங்கை சிங்கள கவர்ச்சி நடிகை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

இலங்கை மக்களால், குறிப்பாக இளைஞர்களால் அதிகளவில் பேசப்படும் அதேவேளை தேடிபார்க்கப்படும் ஒரு நபர் தான் பியூமி ஹன்சமாலி. கவர்ச்சியான சித்தரிப்புக்கும் பல சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்ட அவரது சமூக பணி பலராலும் ஈர்க்கப்பட்டுள்ளதோடு அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அவர் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகின்றார். என்ன காரணத்திற்க்காக இவர் இப்படி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார் என்று தேடி பார்த்தால் , தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு அவர் வீடு கட்டி கொடுக்க முன்வந்துள்ளார். … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 4ந்தேதி முதல் விசாரணை நடைபெற்று … Read more

விருதுநகரில் கூட்டு பட்டா தர லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான விஏஓ-க்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான விஏஓ-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி உமாபதிக்கு ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு நொடி வண்டின் ரீங்காரம் மட்டும் கேட்கும், அதான் ஏ.ஆர் மேஜிக்! – உருகும் ரசிகை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இசைப்புயல் ஆரவாரம் இல்லாத அலட்டிக் கொள்ளாத மனுஷர். எளிமை அடக்கம் புதுமை இவற்றின் மொத்த அடையாளம் அவரின் இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு சரித்திரம் சொல்லும். போகிற போக்கில் எத்தனையோ ஹிட் பாடல்களை அள்ளி தந்திருக்கிறார். பிரபல இனிப்பு கடை உரிமையாளரிடம் … Read more

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை கிட்டத்தட்ட சாத்தியமேயில்லை: வெளிநாட்டவர்கள் கூறும் காரணங்கள்

வெளியே இருந்து பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் காணப்படுகிறது சுவிட்சர்லாந்து. ஆனால், அங்கு வாழ்க்கை கடினம் என்கிறார்கள் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள். வெளிநாட்டவர்களைக் கவரும் சுவிட்சர்லாந்தின் உண்மை நிலை வெளிநாட்டவர்கள் பலர் வாழ விரும்பும் கனவு நாடாக விளங்குகிறது சுவிட்சர்லாந்து. ஆனால், சில விடயங்கள் வாழ்க்கையைக் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளார் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் சிலர். The InterNations என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சுவிட்சர்லாந்தில் வாழும் பல்வேறு நாட்டவர்களிடம் சுவிட்சர்லாந்து வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் … Read more

தமிழ்நாடு சர்ச்சை: தமிழ்நாடு கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை: கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, கவர்னர் மாளிகை விளக்கம் வெளியிட்டு உள்ளது.  காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில்  ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.   அப்போது பேசியவர்,  தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.  எல்லா வற்றுக்கும் நாங்கள்  திராவிடர்கள் என்று … Read more

மும்பையில் ரூ.47.25 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்..!!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.47.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். ரூ.31.29 கோடி மதிப்புள்ள 4.47கிலோ ஹெராயின், ரூ.15.96 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

Hockey World Cup: 15 மாதங்களில் பிரமாண்ட மைதானம்; தலா ஒரு கோடி பரிசு; – கலக்கும் ஒடிசா!

15 வது ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் வரும் 13 ஆம்  தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட மொத்தம்  16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளும் இடம் பிடித்துள்ளன. தனது முதல் போட்டியில் இந்திய அணி  ஸ்பெயினுடன் … Read more