சென்னை மயிலாப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞர் ராகுல்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 கூட்டத்தால் 2 லட்சம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருவார்கள்: மத்திய அமைச்சர் கணிப்பு| G20 summit to bring 2 lakh delegations to India: Union minister predicts

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: ஜி 20 கூட்டத்தால், 2 லட்சம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் கூறியுள்ளார். சண்டிகரில் நடந்த சர்வதேச நிதிக் கட்டிக்கலை பணிக்குழு துவக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் பேசியதாவது: ஜி 20 தலைமையின் கீழ் நாட்டில் நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமை. அது மகிழ்ச்சியின் தருணம். நாட்டில் 50 மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட ஜி 20 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு … Read more

“ஓபிஎஸ் எதை எடுத்தாலும் பாஜக-வை வம்புக்கு இழுக்கிறார்!" – கடுகடுத்த தளவாய் சுந்தரம்

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை இலை சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதி என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரை அவர் இந்தக் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவராக ஏதாவது பேசிக் கொண்டு … Read more

முதல் முறையாக சீருடையில் தம்பதி பெயர்களை வைத்துக் கொண்ட ஓரினச்சேர்க்கை வீராங்கனைகள்! இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனைகள் சிவெர் மற்றும் பிரண்ட் தங்கள் தம்பதி பெயர்களை சீருடையில் வைத்துக் கொண்டதை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. காதல் தம்பதி ஆல்ரவுண்டர் வீராங்கனைகளான நடாலி சிவெர், கேத்தரின் பிரண்ட் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி ஐந்து ஆண்டு கால உறவில் இருந்தது. 2017ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் சிவெர் – பிரண்ட் முக்கிய பங்கு வகித்தனர். … Read more

கணவரை விவாகரத்து செய்து, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கணவரை விவாகரத்து செய்து, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது. குடும்ப நல நீதிமன்றத்தை அணுகும்படி கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாம் தனிநபர் சட்டத்தில் விவாகரத்து செய்து மனைவி பெற்ற குலா சான்றிதழ் ரத்து செய்யக்கோரி கணவர் ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார்.

விருதுநகர்: வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்; அதிமுக மகளிரணி நிர்வாகி, கணவர் உட்பட 3 பேர் கைது!

விருதுநகர், கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவரின் மனைவி அமல்ராணி‌, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மகளிரணி துணைத் தலைவியாக இருக்கிறார். இந்தத் தம்பதி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக விருதுநகர் பேராலி ரோடு ஐ.டி.பி.டி காலனியில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறினர். இந்த நிலையில், அந்த வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றது அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, சந்திரசேகரன் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய … Read more

ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி மாமன்ற கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் கோரிக்கை…

சென்னை: இன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி சென்னை மாநகராட்சி 35வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய மேயர்  பிரியா சட்ட ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்  இன்று மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  துணை மேயர்  மகேஷ்குமார்,  மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் … Read more

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, – பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

“பங்குச்சந்தை, கிரிப்டோகரன்ஸி… நன்கு அறிந்தபின் முதலீடு செய்யுங்கள்" – நிபுணர்களின் வேண்டுகோள்!

சென்னையின் பிரபல கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் பணத்தின் பயன்பாடு பற்றிய ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்தக் கருத்தரங்கில் முதலீட்டின் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராக பெங்களூருவில் உள்ள டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பானுமூர்த்தி, ஜியோட்டர் கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஒ அர்ஜுன் விஜய், ஆடிட்டர் ரேவதி ரகுநாதன் ஆகியோர் பேசினர். ‘‘Rediscovering the Realm of Money’’ என்கிற … Read more