மசாலா தோசைக்கு 2ம் இடம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஆண்டை போல், இந்தாண்டிலும், வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. இணையவழியில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யந்நவும் உணவு வகைகளை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. சைவமோ, அசைவமோ, பிரியாணி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் … Read more

`யார்தான் விளையாட்டுத்துறை அமைச்சர்?’ – விருதுநகர் திமுக பொதுக்கூட்ட ஹைலைட்ஸ்

தமிழக அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதற்காக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன்‌ வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கிக்தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசி வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு … Read more

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா புகைப்பட கண்காட்சியை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பேராசிரியர் அன்பழகன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார்.

தமிழக காங்., கோஷ்டிகளை ஒற்றுமைப்படுத்த, ராகுல் ஒரு நடைபயணம் வந்தா நல்லாயிருக்கும்!| Dinamalar

தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியில், பா.ஜ., பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலால், மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து, மக்களை ஒன்றுபடுத்த, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம், 12 மாநிலங்களில், 3,500 கி.மீ., துாரத்தை, 150 நாட்களில் கடந்து பிப்., முதல் வாரத்தில், ஜம்மு – காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது. தமிழக காங்., கோஷ்டிகளை ஒற்றுமைப்படுத்த, ராகுல் ஒரு நடைபயணம் வந்தா நல்லாயிருக்கும்! … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரம்: இரான் அரசு செய்யும் தவறுகள்… என்ன நடக்கிறது?!

இரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், போராடும் மக்கள் மீதான தண்டனைகளையும் கடுமையாக்கி வருகிறார் இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியோ. மேலும் போராட்டக் கூட்டத்தைக் கலைக்க தடியடிகள், பெல்லட் குண்டுகள், துப்பாக்கிச்சூடுகள் என இரான் பாதுகாப்பு படையினர் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, போராட்டத்தில் கைதானவர்களுக்கு அடுத்தடுத்து ஆயுள்தண்டனை, மரண தண்டனை என விதித்து சொந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது இரான் அரசாங்கம். இரான் கடந்த செப்டம்பர் மாதம், … Read more

திருச்சி- சேலம் தேசிய நெடுசாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்

திருச்சி: பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளாது. திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

‛சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக மாறும்: நிதின் கட்கரி உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2024-ம் ஆண்டுக்குள் நமது சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சரக்குப் போக்குவரத்து சார்ந்த செலவுகள் தற்போது 16 சதவீதமாக உள்ளது. இது 2024ம் ஆண்டுக்குள் ஒற்றை இலக்காக எண்ணான, 9 சதவீதமாக குறையும். இதனால், ஏற்றுமதி செயல்பாடுகள் … Read more

“ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா…”- பேருந்தில் ஏறிய மூதாட்டியை திட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்

தஞ்சாவூரில், அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவரிடம் டிக்கெட் ஓசின்னா அடிக்கடி போயிட்டு போயிட்டு வருவியானு கேட்டு நடத்துனர் ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேருந்து தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து மெலட்டூர் வழியாக திருக்கருக்காவூர் கிராமத்திற்கு 34 ஏ என்ற எண் கொண்ட அரசு நகரப்பேருந்து சென்று வருகிறது. அதில் தஞ்சாவூர் அருகே உள்ள வீரமாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் நடத்துனராக … Read more

தம்பதி இடையே 12 வயது வித்தியாசம்! பிரித்தானியாவில் இந்திய பெண், 2 குழந்தைகள் கொலையில் புதிய தகவல்கள்

பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள தம்பதி Ketteringல் வியாழன் அன்று அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான சாஜு (52) தற்போது பொலிஸ் விசாரணை மற்றும் காவலில் உள்ளார். 2012ல் சாஜு மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. 2021 அக்டோபரில் … Read more

நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமத்தை தருகிறது! சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்ற விடுமுறை குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘தாமதமாகும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமம்’ என்பர். ஆனால் தற்காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. நமக்கு தெரிந்தவரையில், அதிமுக பொதுக்குழு வழக்கை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிமன்றமும், ஒவ்வொரு நீதிபதியும் … Read more