Michael: `மாநகரம் படத்தில் என் பேரு என்ன?' – தயாரிப்பாளரிடம் கேட்ட சந்தீப் கிஷன்

`புரியாத புதிர்’, `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த ரிலீஸ் ‘மைக்கேல்’. கதாநாயகனாக சந்தீப்கிஷனும் , மிரட்டலான வில்லன் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் திவ்யான்ஷா, வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று சென்னை சேத்துப்பட்டிலுள்ள லேடி ஆண்டால் பள்ளியில் நடைபெற்றது. … Read more

வீட்டை இடிக்கும் பணியாளருக்கு கிடைத்த பெருந்தொகை… சந்தோஷத்துக்கு பதில் சோகத்தில்முடிந்த விவகாரம்

வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவருக்கு 150,000 டொலர்கள் கிடைத்தன. ஆனால், அந்த சம்பவம் சந்தோஷத்தில் முடிவதற்கு பதிலாக தொல்லையில் முடிந்தது. வீட்டை இடிக்கும் பணியின்போது கிடைத்த பணம் அமெரிக்காவிலுள்ள Cleveland என்ற இடத்திலுள்ள விடு ஒன்றை இடிக்கும் பொறுப்பை Amanda Reece என்ற ஒப்பந்ததாரர் ஏற்றிருந்தார். அவரது பணியாளரான Bob Kitts என்பவர் வீட்டை இடித்துக்கொண்டிருக்கும்போது, குளியலறை சுவருக்குள் இரண்டு பெட்டிகளில் கவர்களுக்குள் பணம் இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக அவர் Amandaவுக்கு தகவலளிக்க, இருவருமாக … Read more

தேசியம் என்ற பெயரில் மோசடி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறது அதானி குழுமம் : ஹிண்டன்பர்க் பதிலடி

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன குற்றச்சாட்டுகளுக்கு தனது 413 பக்க விளக்கத்தை அளித்துள்ள அதானி குழுமத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது. “அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பங்கு பத்திர விதி மீறல்கள் செய்ததாக எங்கள் நிறுவனத்தின் மீது அதானி குழுமம் குற்றம் சாட்டிய நிலையில் எங்கள் நிறுவனம் எந்த சட்ட விதிகளை மீறியது என்பது குறித்து இந்த 413 பக்க விளக்கத்தில் ஒரு இடத்தில் கூட அதானி நிறுவனம் குறிப்பிடவில்லை” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது. அதானியின் ‘413 … Read more

யானை மனித மோதல்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 5 முகாம்களை ஏற்படுத்த முடிவு: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: யானை மனித மோதல்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 5 முகாம்களை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடிவு செய்துள்ளார். அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு எச்சரிக்கை அளிக்க ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை கருவிகள் மூலம் யானை வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை: கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாடி பாலாஜியின் மனைவி நித்யா… நடந்தது என்ன?!

சென்னை, மாதவரம் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்து வருகிறார். நடிகர் தாடி பாலாஜியை பிரிந்து நித்யா வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நித்யாவின் வீட்டின் எதிரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். நித்யாவுக்கும், மணிக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி, தன்னுடைய காரை வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அவரின் காரை யாரோ சேதப்படுத்தியிருந்ததால் … Read more

திருமணமான மூன்றே நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! கதறிய மனைவியை தேற்ற முடியாமல் தவித்த குடும்பம்

தமிழகத்தில் திருமணமான மூன்று நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுமாப்பிள்ளை சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு சோபனா (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க போவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர், மது போதையில் வீடு திரும்பிய நிலையில், செனாய் நகர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். மரணம் இதையடுத்து, … Read more

76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் சிலைக்கு 76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலை, மெட்ரோ பணிக்காக அங்கிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டு,   எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டு உள்ளது. இன்ற காந்தியின் நினைவுநாளை யொட்டி, … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு; கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்து கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி பெரியார் பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு செய்கிறார்.

Vikatan survey: உங்கள் வீட்டின் நிதி நிர்வாகி யார்?

‘பட்ஜெட்ல எப்போ பார்த்தாலும் துண்டு விழுது’, ‘எவ்ளோ சம்பாதிச்சாலும் போதுமானதா இல்ல’னு கவலைப்படுபவரா நீங்கள் இந்த சர்வே உங்களுக்காக… உங்கள் வீட்டு நிதி நிர்வாகத்தில் நீங்கள் செய்ய  வேண்டிய மாற்றம் பற்றி தெரிந்து கொள்வதற்கான சர்வே இது… கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய நிதி பழக்கங்களை கட்டுரையாக நாங்கள் சொல்கிறோம். Loading… Source link