மேற்குவங்க கவர்னராக ஆனந்த போஸ் பதவியேற்பு| Dinamalar

கோல்கட்டா: மேற்குவங்கத்தின் புதிய கவர்னராக சிவி ஆனந்த போஸ் இன்று (நவ.,23) பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில், கோல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1977ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த போஸ், கடந்த நவ.,17ல் மேற்குவங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் பணி ஓய்விற்கு பிறகு கோல்கட்டாவில் உள்ள தேசிய … Read more

பிக் பாஸ் 6 நாள் 44: `உங்க நம்பர் குடுங்க!' – ரச்சிதாவிடம் கேட்ட ராபர்ட்; உக்கிரமான நீதிமன்ற டாஸ்க்

‘இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது; புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல; வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல..’ என்பது ‘பராசக்தி’ திரைப்படத்தில் வரும் வசனம். அசிம் – அமுதவாணன் பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், விசாரணைக்கு வந்த முதல் வழக்கே பயங்கர விசித்திரமாக இருந்தது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே முகாந்திரம் இல்லை. யூகத்தின் பெயரில் சொல்லப்பட்ட ஒரு கருத்திற்காக, ஒருவரை குற்றவாளி என்று குற்றம் … Read more

பிரித்தானியாவில் 12 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கிடைக்கவிருக்கும் உதவி: யார் தகுதியானவர்?

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களில் 12 மில்லியன் பேர்களுக்கு தலா 600 பவுண்டுகள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது. நவம்பர் 23ம் திகதி முதல் முதியவர்களில் 11.6 மில்லியன் மக்கள் தங்களின் வங்கிக்கணக்குகளில் குறித்த தொகை செலுத்தப்பட உள்ளது. பிரித்தானிய அரசு அறிவித்துள்ள இந்த தொகையானது குளிர்காலத்தில் எரிசக்தி உதவித் தொகையாகவும் முதியவர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் பார்க்கப்படுகிறது. எரிசக்தி உதவித்தொகையாக 100ல் இருந்து 300 பவுண்டுகள் ஓய்வூதிய வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, … Read more

டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.  திமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள்: முத்தரசன்

நெல்லை: சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ஒவ்வாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக போட்டி அரசு நடத்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார். ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார்.

ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ என்ஆர்ஜியின் சிஎன்ஜி வெர்ஷன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டியாகோவின் சிஎன்ஜி ரூ.7.40 லட்சத்தில் தொடங்கி ரூ.7.80 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. XT மற்றும் XZ  பெட்ரோல் மாடலை விட Tiago NRG கார் ரூ.90,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. ஸ்விஃப்ட் சிஎன்ஜி மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி என இரு மாடல்களுக்கும் போட்டியாக அமைந்துள்ளது. டாடா டியாகோ NRG iCNG CNG மாடல் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. … Read more

“ராகுல் காந்தி தற்போது சதாம் உசேன்னைப் போல இருக்கிறார்" – அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கலந்துக் கொண்டு பா.ஜ.க-வுக்காக வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தை, முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுக்கூட்டத்தில், பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் … Read more

நல்ல உணவு இல்லாததால் உணவு வங்கிகளைத் தேடி ஓடும் புலம்பெயர்ந்தோர்: பிரித்தானிய தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், நல்ல உணவு கிடைக்காததால் உணவு வங்கிகளைத் தேடிச் செல்லும் அவலநிலை உருவாகியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது. ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்திலுள்ள எசெக்சில் சுமார் 650 புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஏழு ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஹொட்டல்களில் வழங்கப்படும் உணவு அந்த புலம்பெயர்ந்தோருக்கு உகந்ததாக இல்லை என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றில் இயக்குநரான Maria Wilby. ஆகவே, தங்கள் பகுதியில் எங்கெல்லாம் உணவு வங்கிகள் இருக்கின்றனவோ, அவற்றைத் தேடி புலம்பெயர்ந்தோர் … Read more

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி ஷரிக்குக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த கோவை நபர் விடுவிப்பு…

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளயின ஷரிக்குக்கு கோவையில் சிம்கார்டு வாங்கி கொடுத்து உதவிய  சுரேந்தர் சுமார் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பின்போது, அந்த ஆட்டோவில்  பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் … Read more

லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைக்கப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.  ரூ.15 லட்சம் செலவில் 9.5 அடி உயரமும், 850 கிலோ எடையிலும் லால்பகதூர் சாஸ்திரி சிலை அமைக்கப்பட்டுள்ளது.