“காற்று மாசு கிடக்கட்டும்…காசு வருதுல்ல?” – அதிர வைக்கும் பிஎஸ் 4 வாகனப் பதிவு மோசடி!

பி.எஸ் – 4 வாகனங்களுக்கு தடை: உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது. அதுவே பாரத் ஸ்டேஜ்(BS). வாகனங்களில் இருந்து வரும் புகையின் மாசை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த விதிப்படி, BS6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. அதையெல்லாம் … Read more

உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு! ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு என்று கூறிய  வழக்கறிஞர் புகழேந்தி, தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளவர்கள், காவல்துறையினரின் கொடுமையான தாக்குதலை தொடர்ந்தே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை மீது குற்றம் சாட்டி உள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் … Read more

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார்.

மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது| 10 lakh bank employees call for strike on January 30-31

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக இந்த ஜனவரி மாத கடைசியில் 4 நாட்கள் வங்கிகள் செயல்டாது என்பதால் வங்கி பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. தேசிய ஊதிய உயர்வு , பதவி உயர்வு, ஓய்வூதிய குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர்சங்கத்தினர் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக … Read more

காலமானார் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் காசியண்ணன்: தலைவர்கள் இரங்கல் !

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியுமான காசியண்ணன் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் உள்ள அவரது ஏ.இ.டி. பள்ளியில் உள்ள அவரது இருப்பிடத்தில் நேற்று காலமானார். காசியண்ணன் பி.எம் கிசான் திட்டம்: ரூ.8000 கிடைக்குமா? விவசாயிகள் அவசியம் செய்ய வேண்டியது இதுதான்! விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காசியண்ணனுக்கு திருமணமாகவில்லை. அனைத்துக் கட்சி நிர்வாகிகளாலும் மதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக திகழ்ந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், … Read more

பதவி விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பிரதமர்.. ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமான பதிவு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், கனேடிய பிரதமர் ட்ரூடோ அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஜெசிந்த ஆர்டெர்ன் பதவி விலகல் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். உலகின் இளம் பெண் தலைவராக தெரிவான ஜெசிந்தாவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. கோவிட் 19 உட்பட பல்வேறு பிரச்சனைகளை நியூசிலாந்து எதிர்கொண்டபோது ஜெசிந்தா அதனை சிறப்பாக கையாண்டார். The Canadian … Read more

தானியங்கி பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தானியங்கி பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருளை தல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடங்கி வைத்தார். இதன்மூலம்  அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்கி எளிதில் பட்டா மாறுதல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் தமிழ்நிலம் வலைதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கான பட்டா மாறுதலுக்கான புதிய மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் சரிந்து 60,896 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் சரிந்து 60,896 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 18,110 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கார், பைக்கை பரிசா தந்தா தானே இளவட்டம் விரும்புவாங்க… கம்பெனிகளிடம், ஸ்பான்சர் வாங்க முடியும்?| Speech, interview, report

திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை: ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக, கார் வழங்குகின்றனர். வழங்கப்படும் பரிசுகளை பற்றி அரசு சிந்திக்க வேண்டியுள்ளது… கடந்த ஆண்டுகளில் கார் பரிசு பெற்ற வீரர்கள், எந்த அளவு வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றனர்; எந்த மாதிரியான வாழ்க்கையை, தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் தந்து, வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்திதந்தால், கூடுதல் மகிழ்ச்சி … Read more

ராமநாதபுரம்: அரசு அதிகாரியை காட்டுக்குள் கடத்திச் சென்று வழிப்பறி – நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணிபுரியும் ஒருவர், கடந்த 14-ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் பேராவூருக்கு சென்றுவிட்டு ஈ.சி.ஆர் சாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில், லிஃப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை எடுத்து அதிகாரி கழுத்தில் வைத்து தான் … Read more