சொத்து குவிப்பு வழக்கு: திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்  தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்த திமுக எம்.பி. ராஜா, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2015ஆம் ஆண்டில்  வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சில முறை ரெய்டு நடைபெற்ற … Read more

புதுச்சேரியில் நள்ளிரவு 1.30 மணி திரைப்பட காட்சிக்கு அனுமதி: புதுச்சேரி ஆட்சியர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவு 1.30 மணி திரைப்பட காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளனர். இரவு 1.30 காட்சி ரத்து என அறிவித்த நிலையில் 3 திரையரங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அனுமதிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் தகவல் தெரிவித்துள்ளனர். 

“ஆளுநர் ரவி மோடி, அமித் ஷாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்!” – நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்து மக்களையும் தலைகுனிய செய்யும் நிகழ்வாகும். தமிழகத்துக்கு ஆளுநராக வந்ததிலிருந்து மாநில அரசுக்கு எதிர்மறையான கருத்துகளைக் கூறி வருகிறார் ஆர்.என்.ரவி அவர்கள். அதுமட்டுமல்ல மாநில அரசின் திட்டங்களை வெளிப்படையாக பொதுமேடைகளில் விமர்சனம் செய்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் நேற்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள். தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆளுநர் உரை கோப்பை அனுப்பி, … Read more

ரொனால்டோவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தாய்! காதலி ஜார்ஜினா பணத்தாசை பிடித்தவரா?

கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திருமணத்திற்கு அவரது தாயே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) தாயார், டோலோரஸ் அவிரோ (Dolores Aveiro), தனது மகன் தற்போதைய காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை (Georgina Rodriguez) திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. காதலி, குழந்தைகளுடன் சவுதி சென்ற ரொனால்டோ கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, டிசம்பரில் சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்புடனான இரண்டு வருடங்களுக்கான 400 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் … Read more

12-ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுகிறது! வானிலை மையம் தகவல்…

சென்னை: ஜனவரி 12ந்தேதி (நாளை மறுநாள்) உடன் வடகிழக்கு பருவமழை  விலகுகிறது என  வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. வரும் 12-ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என  தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 14-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் … Read more

கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என்று உத்தரவு அளித்துள்ளனர். சுரங்கத்துறை ஆணையர் வழக்கில் தாமாக முன் வந்து எதிர்மனு தாரராக சேர்ந்த உயர்நீதிமன்றம் ஜனவரி 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு அளித்துள்ளது.

“தேர்தல் எங்கள் உரிமை; ஆனால் அந்த உரிமைக்காக நாங்கள் யாசகம் செய்யமாட்டோம்!" – உமர் அப்துல்லா

பா.ஜ.க-வின் இந்த 8 ஆண்டுக்கால ஆட்சியில் மிக முக்கியமான, மற்றும் கடும் எதிர்ப்புக்குள்ளான முடிவு என்றால், எல்லோரும் கூறுவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுதான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரையில் இன்னும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. ஜம்மு – காஷ்மீர் இந்தாண்டு தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படியிருக்க, தேர்தல் நடத்த பா.ஜ.க அஞ்சுகிறது என ஏற்கெனவே … Read more

எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார்: ஹரியால் குற்றம் சாட்டப்படும் நபர்

அவரை எங்கள் தாய் அன்பு நண்பர் என்று அழைத்தார். ஆனால், அவர் எங்கள் தாயின் மரணத்தை வைத்து பணம்பார்க்கிறார் என ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் இளவரசர் ஹரி. அவரை நாங்கள் நம்பினோம்… அவரை எங்கள் தாய் நம்பினார், நாங்களும் அவரை நம்பினோம். ஆனால், அவர் எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டார் என இளவரசர் ஹரியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், Paul Burrell. இந்த Paul Burrell, இளவரசி டயானாவின் பட்லராக இருந்தவர் ஆவார். … Read more

அஜித், விஜய் திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி…

சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள, விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி கிடையாது( என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வாரிசு, துணிபு படங்களுக்கான போஸ்டர்கள், விளம்பர போர்டுகள், கட்அவுட்டுகள் மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.  இந்த நிலையில்,சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள … Read more