பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாள் டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடி?

சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாள் விடுமுறையில் டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலம், கடந்த 3 நாளில் மட்டும்  மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தமிழன் குடிகாரனமாக மாறி வருவது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவது உறுதியாகி உள்ளது. … Read more

ஜன.29 முதல் அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ரயில் சேவை தொடங்கம்..!!

நாகை: வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ஜனவரி.29 முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதைகள் வரும் 29ம் தேதி முதல் ரயில்  இயக்கபடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 37 கி.மீ தூரத்திற்கு ரூ. 288 கோடி செலவில் நடத்த ரயில்பாதை பணிகள் முடிந்து அக்டோபரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மூலத்துக்கு நவீன லேசர் சிகிச்சை…வழிகாட்டுகிறார் டாக்டர்!

கிராமங்களைவிட நகரங்களில் உள்ளவர்களுக்கு மூலநோய் அதிகளவில் வருகிறது. ஆசனவாயில் வலியற்ற ரத்தப்போக்கு, அரிப்பு, எரிச்சல், வீக்கம் மற்றும் வலி போன்றவை மூலநோய்க்கான அறிகுறிகள். மூலம் ஏற்பட காரணம்? ஆசனவாயில் உள்ள ரத்த நாளத்தில் அழுத்தம் ஏற்படுவதால் மூலம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணங்களாவன: மலச்சிக்கல், நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்து இருத்தல், குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு உண்ணுதல், உடல்பருமன், நீண்ட நாள் வயிற்றுப்போக்கு, கர்ப்ப காலம், கல்லீரல் அழற்சி நோய்(Cirrhosis) மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற … Read more

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! இனி விடவே மாட்டீங்க

காலையில் தூங்கி எழுந்ததும் காபி அல்லது டீ பழக்கம் பலருக்கும் இருக்கும். காபி, டீ குடிப்பது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். இதற்கு அதில் உள்ள காப்ஃபைனை காரணமாக கூறுகிறார்கள். ஆனால் அது அளவுக்கு அதிகமாக குடித்தால் தான்..! ஒரு கப் காபி குடிப்பதால் அல்ல. காலை உணவிற்கு முன் ஒரு கப் காபியைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? காபியில் உள்ள இயற்கை உட்பொருட்கள், சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது சரும பொலிவை அதிகரிக்கும். economictimes … Read more

பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அடாவடி…

சென்னை: பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுவாக விடுமுறை தினங்கள், டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி, வங்கி போன்ற பணிக்கான தேர்வுகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பருவத்தேர்வு தேதியை அறிவித்துள்ளது. கடந்த 15ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (பொங்கலன்று)  வங்கி தேர்வுதேதி அறிவிக்கப்பட்டதற்கே, தமிழக எம்.பி.க்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் … Read more

புதுக்கோட்டை அருகே விதிகளை மீறி ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

புதுக்கோட்டை: வடமலாப்பூரில் விதிகளை மீறி ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட காளைகளை ஏற்றி சரக்கு வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. திருவரங்குளம் அருகே பேருந்து மோதி வேனில் இருந்த 3 காளைகள் உயிரிழந்ததையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“ஆளுநர் ஒன்றும் தலைமை ஆசிரியரல்ல; இவர்களால் தான் நாடு பின்தங்கி இருக்கிறது" – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபையில் மூன்று நாள் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று டெல்லி ஆளுநர் வி.கே சக்சேனா அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அடிஷி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நமது தலைமீது அமர்ந்துள்ள ஆளுநர் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனது வீட்டு பாடங்களை எனது ஆசிரியர்கள் கூட இந்த அளவு ஆய்வு செய்ததில்லை. … Read more

ராணி கமிலா குறித்து இளவரசர் ஹரி சொன்ன ஒரு வார்த்தை! கோபத்திலும், ஆத்திரத்திலும் மன்னர் சார்லஸ்

இளவரசர் ஹரியின் Spare புத்தகத்தில் ராணி கமிலா குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மன்னர் சார்லஸுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தானவர் தனது நினைவு குறிப்பான Spare-ல், தனது தந்தை சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலாவை “ஆபத்தானவர்” என ஹரி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சொந்த தகுதியை அதிகப்படுத்தி கொள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் பற்றி கதைகளை கமிலா பல முறை விதைத்தாக தெரிவித்திருக்கிறார். இதோடு கமிலா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஒருவேளை அவர் … Read more

செல்பி எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர் ரயில் பெட்டிக்குள் சிக்கி 150 கி.மீ. பயணம்… வீடியோ…

விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை புதிதாக துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஏறியவர் தானியங்கி கதவு மூடியதால் ரயில் பெட்டியில் சிக்கி 150 கி.மீ. பயணம் செய்தார். சதாப்தி, ராஜதானி, ஃகட்டிமான், தேஜஸ், டூரான்டோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மற்ற ரயில்களை விட வேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால் புதிதாக துவக்கப்படும் அனைத்து வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி … Read more