தலைப்பு செய்திகள்
CBF 2023: "வாசிப்பு பழக்கம் குறையவில்லை. அதற்கு ஆர்வம் மட்டுமே பிரதானம்!"- கவிஞர் மனுஷ்ய புத்திரன்
46-வது சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சிறிய நேர்காணல். மின்னூல்களின் வளர்ச்சியால் அச்சு நூல்கள் மீதான வாசகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டதாகப் பதிப்பாளர்கள் கருதுகிறார்களே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “தொழில்நுட்பம் வளர்ச்சியடைவதற்கு முன்பாக புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனையானதா என்ன? எந்தக் காலத்தில் நம் வாசிப்பு பழக்கம் மிக அதிக அளவிலிருந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். 1-2 சதவிகித மக்கள் புத்தகங்கள் வாசித்தாலே பெரிய விஷயம். இருப்பினும், சமூக ஊடகங்களின் வரவுக்குப் பின்னால் நம் வாசிப்பில் … Read more
மேகன் நடித்த ஆபாசக் காட்சிகளை இணையத்தில் தேடிய இளவரசர் ஹரி: அரண்மனை எடுத்த நடவடிக்கை
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தனது Spare என்னும் புத்தகத்தில், தனது மனைவி மேகன் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஆபாசக் காட்சிகளை தான் கூகுளில் தேடியதாக தெரிவித்துள்ளார். மேகன் சக நடிகருடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் இளவரசர் ஹரியைத் திருமணம் செய்யும் முன்பு, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மேகன். அந்த தொடரில், தன்னுடன் பணியாற்றும் ஒருவருடன் நெருக்கமாக பழகுவார் மேகன். ஆகவே, அந்தத் தொடரில் அவரும் அவரது சக நடிகர் ஒருவரும் நெருக்கமாக … Read more
சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்! விமானத்தில் வீடியோ எடுத்து வெளியிட்ட தயாநிதி மாறன்
சென்னை: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள் என, விமான பயனத்தின்போது திமுக எம்.பி. தயாநிதி மாறன், வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பாஜக உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா அண்மையில் தனது விமான பயணத்தின் போது, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அவசர கால கதவை (Emergency Exit Door) திறந்தது சர்ச்சையானது. இதனால், விமானம் சுமார் 2 மணி … Read more
நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது..!!
சென்னை: நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.29 கோடிக்கான காசோலை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. ரூ.1.29 கோடி காசோலையை முதலமைச்சரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் வழங்கினர். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பேறுக்காக மனித எலும்புத் தூளை சாப்பிட நிர்பந்தம்: குடும்பத்தினர் மீது பெண் புகார்| Pune Woman Forced To Eat Powdered Human Bones To Conceive Child, 7 Charged
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், மந்திரவாதியின் பேச்சை கேட்டு , குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை மனிதனின் எலும்புத்தூளை சாப்பிட கட்டாயப்படுத்திய கணவன், மாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் பல புகார்களை அளித்தார். அதில், முதலில் திருமணத்திற்கு பிறகு, கணவன், மாமியார் உள்ளிட்டவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக … Read more
புதுச்சேரி: “மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்" – நாராயணசாமி காட்டம்
புதுச்சேரியில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மாநில அந்தஸ்து கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால் மாநில அந்தஸ்து பெற நீதிபகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதலமைச்சர் கூறியுள்ளது புரியாத புதிர். நீதிபதிகள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைதான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு எந்த கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார். அதேநேரத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக … Read more
குழந்தை பெற சாமியார் கூறிய அறிவுரை! பெண்ணை அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்த கணவர்,மாமியார்.. அதிர வைத்த சம்பவம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் குழந்தை பெறுவதற்காக பெண்ணொருவரை சாமியாரின் அறிவுரையின் பேரில் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர்-மாமியார் செய்த கொடுமை புனேவின் சிங்காட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கு குழந்தை இல்லாததால், மாமியார் வீட்டில் மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், குழந்தை … Read more
நான் போட்டியிடவில்லை; ஆனால் என் மகனுக்கு கேட்டிருக்கிறேன்! ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நான் போட்டியிட வில்லை, ஆனால் எனது மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா எம்எல்ஏ மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால், மீண்டும் அந்த தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்குவதாக திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து … Read more
சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
சென்னை: சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. துணைத்தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.