செல்பி எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர் ரயில் பெட்டிக்குள் சிக்கி 150 கி.மீ. பயணம்… வீடியோ…

விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை புதிதாக துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஏறியவர் தானியங்கி கதவு மூடியதால் ரயில் பெட்டியில் சிக்கி 150 கி.மீ. பயணம் செய்தார். சதாப்தி, ராஜதானி, ஃகட்டிமான், தேஜஸ், டூரான்டோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மற்ற ரயில்களை விட வேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால் புதிதாக துவக்கப்படும் அனைத்து வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி … Read more

கரூர் லாலாபேட்டை அருகே வஉசி உருவப்படத்திற்கு சாணி பூசி மர்மநபர் அவமதிப்பு

கரூர்: லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டியில் வஉசி உருவப்படத்திற்கு சாணி பூசி மர்மநபர் அவமரியாதை செய்தனர். வஉசி பேரவையைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் குவிந்துள்ள நிலையில் லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ., அமைச்சர் நிகழ்ச்சியில்  முஸ்லிம் பிரமுகர்கள் பண மழை| Muslim dignitaries shower money at BJP ministers event

பெங்களூரு : பா.ஜ., சிறு தொழில் துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் நடத்திய நிகழ்ச்சியில் முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்று பணமழை பொழிந்தனர். சிறுதொழில் துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், ஆண்டு தோறும் ஜனவரியில் முஸ்லிம்களுக்காக ‘கவ்வாலி’ எனும் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அது போல, இந்த ஆண்டும் தன் தொகுதியான ஹொஸ்கோட்டில் உள்ள சென்னபைரேகவுடா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி நடத்தினார். இதில் அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், அவரது மகன் நிதிஷ் புருஷோத்தம் பங்கேற்றனர். இருவரும் முஸ்லிம்கள் அணியும் தொப்பி … Read more

கர்நாடகா: `மக்கள் குரல் யாத்திரை; இலவச அறிவிப்புகள்' – எடுபடுமா காங்கிரஸ் தேர்தல் வியூகம்?!

கர்நாடாகாவில், பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 224 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் வரும்  மே மாதம் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடைசியாக, கடந்த 2013 – 2018 ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன்பிறகு கர்நாடக தேர்தலில் தனித்த  வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இந்த தேர்தலில் வெல்ல,  தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, `மக்கள் குரல்’ என்னும் யாத்திரையை … Read more

கதவைத் தட்டிய 10 வயது சிறுமி… கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெட்டவெளியில் சிக்கிய தாயாரும் இரு பிஞ்சு சிறார்களும் உடல் உறைந்து பலியான சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடல் உறைந்த நிலையில் குளிர் தாங்க முடியாமல் 10 வயது சிறுமி, குடியிருப்பு ஒன்றின் கதவைத் தட்டி உதவி கோரிய நிலையிலேயே மூவர் இறந்துள்ள சம்பவம் தெரிய வந்தது. 35 வயதான மோனிகா கன்னாடி இவரது மகன்களான கைல் மில்டன்(9), மற்றும் மாலிக் மில்டன்(3) ஆகியோரே போண்டியாக் பகுதியில் உடல் உறைந்த நிலையில் சடலமாக … Read more

ஒன் பை டூ

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“முதல்வர் உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். ஆட்சியைத் தக்கவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்திய அ.தி.மு.க-வினர், மக்களுக்கான எந்த நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அரசின் நிர்வாகத்தையும் சீர்குலைத்தனர். மாநில அரசின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றியிருக்கின்றனர். தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தளபதியின் சீர்மிகு நிர்வாகத்திறனால் குறுகியகாலத்திலேயே தமிழ்நாட்டின் பணவீக்கம் ஐந்து சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதற்கு தி.மு.க ஆட்சியில் சமூகநலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுதான் காரணம். மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டித் திட்டம், மகளிருக்கு … Read more

காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்னிவல் விழாவைமுன்னிட்டு காரைக்காலில் இன்று அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை

சென்னை: பொங்கல் முடிந்து தென் மாவட்டத்தில் இருந்து அதிக வாகனங்கள் சென்னைக்கு வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜன.15 முதல் ஜன.17 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு மீண்டும் வருகின்றனர்.

தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா எதிர்ப்பு| China opposes Dalai Lama’s planned visit to Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, 87 தன்னாட்சி அதிகாரம் கோரி சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இதையடுத்து, 1959ல் சீனாவில் இருந்து வெளியேறியவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது. அன்று முதல், ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்மிக பயணமாக விரைவில் இலங்கை செல்ல தலாய்லாமா திட்டமிட்டுள்ளார். பயண … Read more

பெங்களூரு: முதியவரை இருசக்கர வாகனத்தில் தரதரவென ஒரு கி.மீ இழுத்துச்சென்ற வாலிபர் – அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நேற்று மதியம், மகாதி ரோட்டிலுள்ள டோல் கேட்டிலிருந்து ஹாசஹல்லி மெட்ரோ ஸ்டேஷன் வரையில், முதியவர் ஒருவரை, ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் ஸ்கூட்டரில் வாலிபர் இழுத்துச்சென்றுள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டுநர்கள், அவரை தடுத்து நிறுத்தி, காயமடைந்திருந்த அந்த முதியவரை மீட்டு, அந்த வாலிபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தோம், ‘‘ஸ்கூட்டர் ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த சாஹில் (25), … Read more