இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை ஒப்பந்தம் செய்யும் முன்னணி கால்பந்து கிளப்? பரவும் தகவல்கள்

இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹரி கேன், டோட்டன்ஹாம் அணியில் இருந்து மான்செஸ்டர் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என்ற செய்தி பரவி வருகிறது. ஹரி கேன் 29 வயதாகும் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான ஹரி கேன், தற்போது டோட்டன்ஹாம் கிளப் அணியின் இறுதி ஆண்டில் இருக்கிறார். எனவே அவர் இந்த கோடையில் வேறு அணிக்கு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியர் லீக் போட்டிகளில் இந்த சீசனில் ஹரி கேன் 20 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து மிரட்டியிருக்கிறார். … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் களமிறங்குகிறார் ஈவிகேஎஸ் மகன் இளைய மகன் சஞ்சய்!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற  இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்  போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திடீர் மரணத்தை தொடர்ந்து காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று … Read more

இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: பாஜகவுக்கு நெருக்கடி

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவின் ஆதரவை கோர திட்டமிட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளை இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இரு அணியும் ஆதரவு கேட்பதால், ஒரு தரப்பை ஆதரிக்குமா அல்லது பாஜக தனித்து களம் இறங்குமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் பட்டம் இதழ் மெகா வினாடி வினா இறுதி போட்டி: கவர்னர் பங்கேற்பு| Dinamalar Degree Magazine Mega Quiz Final : Governor Participation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி : ‘தினமலர் பட்டம்’ இதழ் நடத்தும் மெகா வினாடி வினா இறுதி போட்டி இன்று புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது. இதில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார். நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், ‘தினமலர்’ நாளிதழ், ‘பட்டம்’ எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாக … Read more

தனியார் நிறுவனங்களின் பால் விலை 2 ரூபாய் உயர்வு… கட்டுப்படுத்துமா அரசு?

பல தனியார் பண்ணைகள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளதாகச் சென்னையில் உள்ள அதன் டீலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த 12 மாதங்களில் 5-வது முறையாகப் பால் விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து … Read more

மேற்கு ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 3,300 பேர்!

மேற்கு ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 3,300 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 500 கிலோ எடை வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியில் வீசப்பட்ட ஏராளமான குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதைந்துள்ளன. அவற்றில் பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மேற்கு ஜேர்மனியில் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. எசென் நகரில் புனரமைப்பு பணிகளுக்காக குழி தோண்டியபோது இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 3,300 பேர் வெளியேற்றம் அதனைத் … Read more

ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

சென்னை: த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பி.எஸ் தனது அணியினருடன் சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது அங்கு திருமகன் ஈவேரா மறைவு காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், தமாகா போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். முன்னதாக அவருடன் எடப்பாடி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வாசன், எடப்பாடிக்கு … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் சவால் நிறைந்த வழக்குதான்: திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் சாடல்

திருச்சி: வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் சவால் நிறைந்த வழக்குதான் என திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் தெரிவித்துள்ளார். நுட்பமாக, அறிவியல் பூர்வமாக சாட்சிகளின் அடிப்படையில் போலீஸ், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு எந்த அழுத்தமும் இல்லை என டிஐஜி சரவணன் கூறினார்.

கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Moscow-Goa Flight Diverted To Uzbekistan After Bomb Threat: Report

பனாஜி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது. மாஸ்கோவில் இருந்து, 240 பயணிகளுடன் கிளம்பிய ‘அஜூர் ஏர்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று(ஜன.,21) அதிகாலை 4:30 மணிக்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், நள்ளிரவு12:30 மணியளவில், அந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக, தபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு இமெயில் வந்தது. அந்த நேரத்தில் இந்திய … Read more

24 நாள்களாக கடலில் தத்தளிப்பு; உணவு? – 'Help' என்ற வார்த்தையால் உயிர் பிழைத்த மாலுமி – என்ன நடந்தது?

டோமினிக்காவைச் சேர்ந்தவர் எல்விஸ் ஃப்ரான்கொஸ் (Elvis Francois). மாலுமியான இவர், நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்டின்ஸ் தீவில் படகை பழுத்துப்பார்த்து கொண்டிருக்கும் போது, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் கரீபியன் கடலில் தத்தளித்து வந்திருக்கிறார். நண்பர்களை உதவிக்காக அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. இறுதியில் அவர் ‘Help’ எனும் ஆங்கில வார்த்தையைப் படகின் பக்கவாட்டில் எழுதிவைத்துக் காத்திருந்தார். ஒரு விமானம் அவரைக் கடந்தபோது, கண்ணாடி மூலம் ஒளியைப் பிரதிபலிக்கச் … Read more