17 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் மாருதி சுசூகி| Maruti Suzuki Recalls These Popular Car Models Over Airbag Issues

பெங்களூரு: ஏர் பேக்கில் உள்ள பிரச்னை காரணமாக 2022 டிச.,8 முதல் கடந்த 12 வரை தயாரிக்கப்பட்ட 17,362 வாகனங்களை திரும்ப பெற்று கொள்வதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்பேக் கன்ட்ரோல்லரில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும் அதனை மாற்றவும் இந்த வாகனங்களை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ளது. ஆல்டோ கே 10, எஸ்- பிரெசோ, எகோ, பிரெஜா, பலேனோ மற்றும் கிராண்ட் விதாரா ஆகிய மாடல்கள் அடங்கும் பெங்களூரு: ஏர் பேக்கில் உள்ள … Read more

ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நான்கு பேரின் கைகளை துண்டித்த தாலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் கைகள் மக்கள் முன்னிலையில் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. தாலிபான் ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டது. அதேபோல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தாலிபான் அரசு சமீபத்தில் அறிவித்தது. அதாவது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கசையடி, கை, கால்கள் வெட்டுதல், மரணம் என்றும் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

மத்தியஅரசின் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி …

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை, 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,   போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை மாநில கல்லூரியில் இன்று  தொடங்கி  வைத்தார். தமிழ்நாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.01.2023) சென்னை மாநிலக் கல்லூரியில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், நடைபெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு … Read more

விமானத்தில் அவசர கால கதவை திறந்த பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பகிரங்க மன்னிப்பு

சென்னை: விமானத்தில் அவசர கால கதவை திறந்த பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்டார். சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானம் புறப்படும் போது பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா கதவை திறந்தால் சர்ச்சை ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சரின் விளக்கம் மூலம் அவசர கால கதவை திறந்தது பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.

எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம்: விமான போக்குவரத்து அமைச்சர் விளக்கம்| Emergency Door Open Issue: Aviation Minister Explanation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தவறுதலாகவே எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதாகவும், இதற்காக கர்நாடகா பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த மாதம் 10ம் தேதி இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநில பா.ஜ., எம்.பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் ஓடு … Read more

"நான் பகிர்ந்த வீடியோ போலியானது. அவரிடம் மன்னிப்பு கேளுங்க!"- பாபர் அசாம் சர்ச்சையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், சக கிரிக்கெட் வீரர் ஒருவரின் காதலியுடன் மெசேஜ் செய்வதும், ஆபாசமாகப் பேசுவதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது பல இந்திய மீடியாக்களிலும் ஒளிபரப்பப்பட, இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வீடியோவில், “நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாகப் பேசிக் கொண்டு இருந்தால் உனது காதலனை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்” என்று அவர் கூறுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இவை இணையத்தில் வைரலாகி … Read more

தை அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு முக்கிய நாட்களில் மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கும். அந்த வகையில் தற்போது, தை மாதம் பிறந்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை அன்று பிரதோஷமும், வருகிற சனிக்கிழமை அன்று அமாவாசையும் நடைபெற உள்ளது. அதனால் நாளை … Read more

மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடுத்த முறை கூடுதல் நாட்கள் சர்வதேச புத்தக காட்சியை நடத்த ஏற்பாடு செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.