`இவுக வடிவேலு அம்மா'னு சொல்றப்போ சந்தோஷப்படுதே, அதுதான் நான் அதுக்கு குடுத்த சொத்து'- வடிவேலு

தமிழ் திரையுலகில்  தவிர்க்க முடியாத நகைச்சுவை  நடிகராக வளம் வருபவர் நடிகர்  வடிவேலு. காமெடி நடிகராக அறிமுமான இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் நடிக்காமல், திரையுலகில் இருந்து விலகியிருந்த வடிவேலு சமீபத்தில்  ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மூலம் கம்பேக் கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து  வருகிறார்.    நடிகர் வடிவேலுடன் அவரது தாயார் இந்நிலையில் மதுரையில்  வசித்து … Read more

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் 108 பக்தி நூல்களை வெளியிட்டு, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் பலி ஆகியுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில் பலர் உள்ளே சிக்கியுள்ளனர். 

“காற்று மாசு கிடக்கட்டும்…காசு வருதுல்ல?” – அதிர வைக்கும் பிஎஸ் 4 வாகனப் பதிவு மோசடி!

பி.எஸ் – 4 வாகனங்களுக்கு தடை: உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது. அதுவே பாரத் ஸ்டேஜ்(BS). வாகனங்களில் இருந்து வரும் புகையின் மாசை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த விதிப்படி, BS6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. அதையெல்லாம் … Read more

உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு! ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு என்று கூறிய  வழக்கறிஞர் புகழேந்தி, தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளவர்கள், காவல்துறையினரின் கொடுமையான தாக்குதலை தொடர்ந்தே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை மீது குற்றம் சாட்டி உள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் … Read more

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார்.

மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது| 10 lakh bank employees call for strike on January 30-31

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக இந்த ஜனவரி மாத கடைசியில் 4 நாட்கள் வங்கிகள் செயல்டாது என்பதால் வங்கி பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. தேசிய ஊதிய உயர்வு , பதவி உயர்வு, ஓய்வூதிய குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர்சங்கத்தினர் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக … Read more

காலமானார் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் காசியண்ணன்: தலைவர்கள் இரங்கல் !

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியுமான காசியண்ணன் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் உள்ள அவரது ஏ.இ.டி. பள்ளியில் உள்ள அவரது இருப்பிடத்தில் நேற்று காலமானார். காசியண்ணன் பி.எம் கிசான் திட்டம்: ரூ.8000 கிடைக்குமா? விவசாயிகள் அவசியம் செய்ய வேண்டியது இதுதான்! விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காசியண்ணனுக்கு திருமணமாகவில்லை. அனைத்துக் கட்சி நிர்வாகிகளாலும் மதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக திகழ்ந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், … Read more

பதவி விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பிரதமர்.. ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமான பதிவு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், கனேடிய பிரதமர் ட்ரூடோ அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஜெசிந்த ஆர்டெர்ன் பதவி விலகல் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். உலகின் இளம் பெண் தலைவராக தெரிவான ஜெசிந்தாவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. கோவிட் 19 உட்பட பல்வேறு பிரச்சனைகளை நியூசிலாந்து எதிர்கொண்டபோது ஜெசிந்தா அதனை சிறப்பாக கையாண்டார். The Canadian … Read more