திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த், சூரியூர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்திருந்த நிலையில் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு வகைகள்… பாஜக செயற்குழு கூட்டத்துக்காக தயாரான மெனு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா.ஜ.க தொடங்கிவிட்டது. அதற்கான முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கர்நாடக சட்டசபை தேர்தல் உட்பட வரும் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விருப்பமான பல உணவுகளும், இந்திய இனிப்பு வகைகளும் மெனுவில் இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். … Read more

என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்: கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியக் குடும்பத்தின் உறவினர்கள்…

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் மூன்று நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish Baldevbhai Patel, 39), அவரது மனைவி வைஷாலி (Vaishaliben Jagdishkumar Patel, 37) பிள்ளைகள் விஹாங்கி (Vihangi Jagdishkumar Patel, 13) மற்றும் தார்மிக் (Dharmik … Read more

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட்..

சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்” என  திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இன்று திருவள்ளுவர் தினம் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். … Read more

சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஹேமலதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

“கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்" – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம்

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, இடம் மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், சுயேச்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. … Read more

பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: இன்று எப்படி இருக்கிறான் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டுச் சிறுவன் ஒருவன் தனக்கு ஆறு வயது இருக்கும்போது, லண்டனிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து தூக்கிவீசப்பட்டான். 100 அடி உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட ஆறு வயது சிறுவன் 2019ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், லண்டனிலுள்ள Tate Modern art gallery என்னும் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து Jonty Bravery என்னும் ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஒருவர், அந்த ஆறு வயது சிறுவனைத் தூக்கிக் கீழே வீசினார். யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் Jonty Bravery … Read more

பள்ளிகளுக்கு 18 விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்…

சென்னை: வருகிற புதன்கிழமை(ஜன. 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  இதன காரணமாக 18ந்தேதி விடுமுறை என வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14ந்தேதி முதல்  ஜனவரி 17 ஆம் தேதி வரை  பள்ளி கல்லூரிகளுக்கு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  நிலையில், வெளியூர் சென்றவர்கள், சொந்த இடங்களுக்கு திரும்பும் வகையில், வரும் … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதி

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடு முட்டியதில் அரவிந்த் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த எலக்ட்ரீஷியனுக்கு நள்ளிரவில் நடந்த சோகம்!

சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள கடை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் ஜேம்ஸ் வேதஜார்ஜ். இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப்பார்த்து வந்தார். இவரின் மகள் சூளைமேட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி அங்கு செல்லும் ஜேம்ஸ் வேதஜார்ஜ், மற்ற வேளைகளில் … Read more