பெங்களூரு: முதியவரை இருசக்கர வாகனத்தில் தரதரவென ஒரு கி.மீ இழுத்துச்சென்ற வாலிபர் – அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நேற்று மதியம், மகாதி ரோட்டிலுள்ள டோல் கேட்டிலிருந்து ஹாசஹல்லி மெட்ரோ ஸ்டேஷன் வரையில், முதியவர் ஒருவரை, ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் ஸ்கூட்டரில் வாலிபர் இழுத்துச்சென்றுள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டுநர்கள், அவரை தடுத்து நிறுத்தி, காயமடைந்திருந்த அந்த முதியவரை மீட்டு, அந்த வாலிபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தோம், ‘‘ஸ்கூட்டர் ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த சாஹில் (25), … Read more

கனடாவில் கோடிகளில் இந்தியருக்கு கிடைத்த பணம்! நம்ப மாட்டேன் என அடம் பிடித்த மனைவி

கனடாவில் இந்திய இளைஞருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடா லொட்டரியில் இந்தியருக்கு அதிர்ஷ்டம் பிராம்டனில் வசிப்பவர் சிரக் பருச்சா (33). லொட்டரியில் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்து அறிவிப்பு வெளியானால் அதில் தவறாமல் கலந்து கொள்வார். இந்த நிலையில் தான் லொட்டோ மேக்ஸில் சிரக்குக்கு $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.2,75,43,490.96) பரிசு விழுந்துள்ளது. அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் மற்றும் பணம் குறித்து என் மனைவியிடம் சொன்ன போது, இது உண்மை கிடையாது, நான் … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணமாகியுள்ளார். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா, சுலாவேசி பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியா, சுலாவேசி பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக முதல் மம்தா வரை – அமர்த்தியா சென்னின் 2024 மக்களவைத் தேர்தல் கணிப்புகள் என்னென்ன?!

நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார மேதை அமர்த்தியா சென், `இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது’ என்று கூறியிருப்பது தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. `2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் பங்கு மிக முக்கியமானது’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அமர்த்தியா சென் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தார். அதில் குறிப்பாக, “இந்திய நாட்டின் தன்மையை பா.ஜ.க சுருக்கிவிட்டது. இந்தியா என்றால் `இந்து இந்தியா’, `இந்தி பேசும் இந்தியா’ … Read more

தோனியிடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பளீச் பதில்

கேப்டன்சி குறித்து என்னுடைய பல கேள்விகளுக்கு பதிலளித்தது மகேந்திர சிங் தோனி தான் என்று சார்ஜா வாரியர்ஸ் அணியின் தலைவர் மொயின் அலி தெரிவித்துள்ளார். சார்ஜா வாரியர்ஸ்   ஐக்கிய அரபு எமிரேட்சில் உலகளாவிய வீரர்களை உள்ளடக்கிய டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அவற்றில் சார்ஜா வாரியர்ஸ் என்ற அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் … Read more

உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.33 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.32 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்

டெல்லி: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு பெண்கள் தீ விபத்தில் பலி | Two women died in the fire

தானே, மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 70 வயது மூதாட்டி உட்பட இரு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவில், தானே மாவட்டத்தின் கல்யான் நகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின் நடந்த மீட்புப் பணியின் போது, புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்ட 70 … Read more

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு

திருவனந்தபுரம், சபரிமலையில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு அய்யப்ப சாமி பவனி நடைபெற்றது. நடப்பு சீசனின் கடைசி நெய்அபிஷேகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் அய்யப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள். இதனால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர். தரிசனம் நேரம் குறைப்பு … Read more