வார ராசிபலனும் பரிகாரமும்| Weekly horoscope and remedy

வெள்ளி முதல் வியாழன் வரை (20.01.2023 – 26.01.2023 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம் சூரியன், சந்திரன் நன்மை வழங்குவர். சூரியவழிபாடு நன்மை அளிக்கும். அசுவினி: கடந்த வார சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையில் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பரணி: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் … Read more

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக-வில் உட்கட்சி பூசல்… இடைத்தேர்தல் அறிவிப்பும் தொடரும் சிக்கலும்!

ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக இருப்பவர் வி.சி. வேதானந்தம். இவர் 2 மாதங்களுக்கு முன் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து பல்வேறு நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் 22-ம் தேதி சென்னிமலை வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் பா.ஜ.க- பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறி மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் … Read more

வார ராசிபலன்:  20.01.2022  முதல் 26.01.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் நீண்ட நாள் மனசை வருத்திக்கிட்டிருந்த கடன் பிரச்சினை சற்றே  முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவி செய்து நெகிழ வைப்பீங்க. அது பிற்காலத்தில் பலனளிக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த நியூஸ் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75 புள்ளிகள் குறைந்து 60,782 ஆக வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75 புள்ளிகள் குறைந்து 60,782 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 18,091 ஆக வர்த்தகமாகி வருகிறது.

திருப்பூர்: கிராமத்தில் வீடு எடுத்து கள்ள நோட்டு அச்சடிப்பு – வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தனது வங்கிக் கணக்கில் செலுத்த முயன்றுள்ளார். கள்ள நோட்டு என்பதால், அந்தப் பணத்தை இயந்திரம் எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது. மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் கனிராஜ் செலுத்த முயன்றது தொடர்பான தகவலை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டுஅறைக்குத் தெரிவித்துள்ளது. கள்ளநோட்டு இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் … Read more

தனியார் பால் விலை உயர்வு… லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னை: இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி , இருமுறை Double Toned Milk லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், Toned Milk பழைய லிட்டர் … Read more

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ஜனவரி 30 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் – எழுத்தாளர் பெருமாள் முருகன்

சென்னையில் 46-வது புத்தகத் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கவிருக்கிறோம். இதோ அவர் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்… 1. உ.வே.சா கடிதக் கருவூலம் – ஆ.இரா.வேங்கடாசலபதி – டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் தமிழ் இலக்கியத்தில் கடித இலக்கியம் என்று ஒரு வகை உண்டு. எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுக்கு எழுதி கொண்டது, எழுத்தாளர்கள் உறவினர்களுக்கு எழுதிக்கொண்டது என்று இந்த இலக்கியம் … Read more

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் சர்ச்சை வீடியோ: பொலிஸார் தீவிர விசாரணை

பிரித்தானிய பிரதமர் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதமரின் வீடியோ கிளிப் பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ கிளிப் ஒன்று சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருந்த நிலையில் அது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டு இருந்த விளக்கத்தில், இது … Read more

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இனிமேல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் … Read more