குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் – பட்டியலின தலைவர்கள் கொடியேற்ற வேண்டும்! இறையன்பு

சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி,  தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம்  நடத்தப்பட வேண்டும், அன்றைய தினம், பட்டியலின தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில், அவர்கள்  கொடியேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலாளர்  இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் … Read more

சென்னை மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்பு; 6 பேர் கைது..!!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில் 3 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ஜெயராமன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், திவாகர், ஸ்டீபன் ராஜ், பாலாஜி, ஹேமநாதன், தினேஷ் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

கோவை: `சோதனை என்ற பெயரில் பாகுபாடு’ – நடிகை சனம் ஷெட்டி புகாருக்கு விமான நிலைய இயக்குநரின் பதிலென்ன?

நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், “கோவை – சென்னை ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தேன். கோவை விமான நிலையத்தில் ஒரு வருத்தமான விஷயம் நடந்தது. செக்யூரிட்டி என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னுடைய பேக் மற்றும் இரண்டு இஸ்லாமியர்களின் பேக்கை மட்டும் சோதனை நடத்தினர். சனம் ஷெட்டி அந்த விமானத்தில் 190 பயணிகள் பயணித்தனர். என்னுடைய பெயர் மற்றும் அந்த … Read more

சுற்றுலா சென்ற 51 பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் தாக்குதல்: வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை

ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு சுற்றுலா சென்ற 51 பிரித்தானிய பெண்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதால், அந்நாட்டுக்குச் செல்வது தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த நாடு துருக்கி துருக்கி பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. ஆனால், சென்ற ஆண்டு துருக்கிக்கு சுற்றுலா சென்ற 51 பெண்கள் வன்புணர்வு உட்பட பல்வேறு ரீதியில் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் பிரித்தானியர்கள் சென்று தங்கும் கடற்கரையோர சுற்றுலாத்தலங்கள் மற்றும் ரிசார்ட்டுகளில்தான் அதிக … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை! ஜி.கே.வாசன் திடீர் அறிவிப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது பின்வாங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது  மறைவையடுத்து  காலியாக  உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என … Read more

கனியமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் தர தாயாருக்கு விழுப்புரம் கோர்ட் அறிவுரை..!!

விழுப்புரம்: கனியமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் தர தாயாருக்கு விழுப்புரம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிபிசிஐடியிடம் ஒப்படைக்குமாறு மாணவியின் தாயாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் நரியை வைத்து ஜல்லிக்கட்டு… இரு கிராமங்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு!

பொங்கல் என்றாலே வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு எல்லோருக்கும் நினைவில் வரும். ஜல்லிக்கட்டுனா எப்போதும் காளைய அடக்குவதைதான் நாம பார்த்திருப்போம். ஆனா சேலத்தில் ஒரு சில குறிப்பிட்ட கிராமத்தில் வங்கா நரியை பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது, `சேலம்னாலே வங்காநரி ஜல்லிக்கட்டு தான் பேமஸ்’ என்கின்றனர் சேலத்தை சேர்ந்த மக்கள். அப்படி சமீபத்தில் நடந்து முடிந்த பொங்கல் விழாவை முன்னிட்டு சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடைப்பெற்றுள்ளதாம். `நரி … Read more

நடமாடும் தகன மேடைகளை வாங்கிக் குவிக்கும் விளாடிமிர் புடின்: கசிந்த அதிர்ச்சி பின்னணி

சீனாவிடம் இருந்து 21 நடமாடும் தகன மேடைகள் வாங்க ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரில் அந்த நாட்டின் இறப்பு எண்ணிக்கை மிக விரைவில் 220,000 கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இழப்புகளை மூடிமறைக்க குறித்த தகன அறைகளை துருப்புகளுடன் சேர்ந்து அனுப்பி வைக்கவும், இதனால் பொதுமக்களிடமிருந்து ரஷ்யாவின் போர் இழப்புகளை மூடிமறைக்கும் முயற்சியில் புடின் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. credit: east2west news உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், களத்திலேயே … Read more

மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை… போராட்டத்தை தொடரும் மல்யுத்த வீரர்கள்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் துவங்கிய இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து பயிற்சிக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக பிரிஜ் பூஷன் சரண் … Read more

ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம் – மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்..!!

சென்னை: ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம் – மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள் பிப்ரவரி 1ம் தேதி செங்கல்பட்டுக்கு வருகை தருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க ஒன்றிய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.