சிக்ஸர் விளாசி இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்! ருத்ர தாண்டவத்தால் அதிர்ந்த மைதானம்

இந்திய வீரர் சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார். ருத்ர தாண்டவ ஆட்டம் ஐதராபாத்தில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். சதம் அடித்த பின்னர் அதிரடியில் இறங்கிய அவர் 182 ஓட்டங்களில் இருந்தபோது இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். 194 ஓட்டங்களில் இருந்த கில் எதிர்பாராத விதமாக ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை எட்டினார். @ICC … Read more

ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்! சென்னை மெட்ரோ ரயில் சாதனை….

சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதல் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில், 2.66 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமும் ஜரூராக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 ஆண்டுக்குள் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் மக்களிடம் வரவேற்பை பெறாத மெட்ரோ ரயில், தற்போது சென்னைவாசிகளின் … Read more

எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணியாற்றி இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தனக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

`குடிகாரர்கள் இல்லாத தமிழ்நாடாக மாற்ற வேண்டும்!‘ –  Coffee With Collector நிகழ்ச்சியில் பள்ளி மாணவன்

பள்ளி மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக சமீபத்தில் விழுப்புரம் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் `காஃபி வித் கலெக்டர் (Coffee With Collector)’ நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 25 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். Coffee With Collector நிகழ்ச்சி நீலகிரி: அரசுப் பள்ளி சத்துணவில் `மோட்டா ரக’ அரிசி… சிரமத்தில் மாணவர்கள்! மாணவர்கள், தங்களின் மன எண்ணங்களையும், குடும்ப சூழலையும், எதிர்கால ஆசையையும் மாவட்ட ஆட்சியருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், ஆட்சியர் அவர்களை உற்சாகப்படுத்தும் … Read more

திரைப்பட சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு விவகாரம்: லஞ்ச ஒழிப்புதுறையில் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்…

சென்னை: பொங்கலுக்கு வெளியிடப்பட்ட  திரைப்படங்களின்  சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு பார்த்து உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து,  பிரபல பத்திரிகையாளர்  சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமா வெளியீட்டாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச்செயலாளர் பனிந்திர ரெட்டி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறையில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரிசனின் ஜிஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து … Read more

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சேகுவாரா மகள் அலெய்டா குவாரா உரை..!!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சேகுவாரா மகள் அலெய்டா குவாரா உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் அலெய்டா குவாரா கலந்துரையாடி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ,விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கடத்திக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள்; போலீஸில் சிக்கிய கசாப்புக் கடைக்காரர்!

ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகள் கட்டிவைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸார் இன்று தெரிவித்திருக்கின்றனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, கடந்த திங்கள்கிழமை மாலை, 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாட்டியா ரயில் நிலையத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றிருக்கின்றனர். அதோடு சிறுமிகளை ரயில்வே மேம்பாலத்துக்கு அழைத்துச்சென்ற இளைஞர்கள், அவர்களைக் … Read more

100வது நாளில் பணப்பையுடன் வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் போட்டியாளர் கதிரவன் 100வது நாளில் பணப்பையுடன் வெளியேறினார். அவசரப்பட்ட கதிரவன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதி பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சி 100வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் மீதமுள்ள 6 போட்டியாளர்களில் ஒருவர் விருப்பப்பட்டால் பணத்துடன் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டு பணப்பை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் ஒரு லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், நேற்று … Read more

Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும், வாரம் ஒன்றாக மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். சென்ற வார அத்தியாயத்தில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி … Read more