வானத்திலிருந்து பார்த்தால் தெரியும் மெஸ்ஸியின் முகம்! உலகக்கோப்பையை வென்ற ஜாம்பவானுக்கு கலைவடிவ அஞ்சலி

அர்ஜென்டினாவில் உலகக்கோப்பையை வென்று கொடுத்த லியோனல் மெஸ்ஸிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சோள வயல் ஒன்றில் அவரது முக அமைப்பிலேயே பயிரடப்பட்டுள்ளது. இப்போது மெஸ்ஸியின் முகத்தை வானத்திலிருந்தும் காணலாம். 2022 FIFA உலகக்கோப்பை கத்தாரில் 2022-ல் நடைபெற்ற 22-வது FIFA கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது. அர்ஜென்டினா தேசிய அணி கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் அர்ஜென்டினா தேசிய அணியை வழிநடத்திய ஜாம்பவான் லியோனல் … Read more

உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.34 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.35 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை காசிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் தேவா(17) என்பவர் உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்ற சக்தி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அஜய் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி சுட்டுக் கொலை| Farmer shot dead

பைரேலி, உத்தர பிரதேசத்தில் சாலையில் ஏற்பட்ட தகராறில், விவசாயி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹபீஸ்கஞ்ச் அருகே உள்ள நவுநாகலா கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்த், 40. விவசாயியான இவர், கரும்பை அறுவடை செய்து மாட்டு வண்டியில் ஏற்றி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர், வழி விடுமாறு கூறி பரமானந்திடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய … Read more

டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு: பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை

புதுடெல்லி, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. குடியரசு தின விழா நமது நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த … Read more

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ‘போதுமான அளவு சக்தி இல்லை’ நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் மறுதேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், பிப்ரவரி தொடக்கத்தில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழன் அன்று நடந்த கட்சியின் வருடாந்திர காக்கஸ் கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று கூறினார். Getty Images “நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், … Read more

வைர வியாபாரியின் 9 வயது மகள் துறவறம் | Dhuruvaram, the 9-year-old daughter of a diamond merchant

சூரத், ஜன குஜராத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியின், ௯ வயது மகள் நேற்று துறவறம் பூண்டார். குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் நகரைச் சேர்ந்த தனேஷ் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் தேவன்ஷி, ௯, குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். இந்நிலையில், தேவன்ஷி நேற்று ஜைன மத … Read more

குஜராத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – ஒருவர் கைது

போடாட், குஜராத்தின் போடாட் நகருக்கு அருகே பகவான்பரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சிறுமியின் உறவினர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து 39 வயதான ராஜு தேவ்சாக் பாய் சவுகான் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் … Read more

ஜனவரி -19: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.