கார், பைக்கை பரிசா தந்தா தானே இளவட்டம் விரும்புவாங்க… கம்பெனிகளிடம், ஸ்பான்சர் வாங்க முடியும்?| Speech, interview, report

திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை: ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக, கார் வழங்குகின்றனர். வழங்கப்படும் பரிசுகளை பற்றி அரசு சிந்திக்க வேண்டியுள்ளது… கடந்த ஆண்டுகளில் கார் பரிசு பெற்ற வீரர்கள், எந்த அளவு வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றனர்; எந்த மாதிரியான வாழ்க்கையை, தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் தந்து, வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்திதந்தால், கூடுதல் மகிழ்ச்சி … Read more

ராமநாதபுரம்: அரசு அதிகாரியை காட்டுக்குள் கடத்திச் சென்று வழிப்பறி – நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணிபுரியும் ஒருவர், கடந்த 14-ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் பேராவூருக்கு சென்றுவிட்டு ஈ.சி.ஆர் சாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில், லிஃப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை எடுத்து அதிகாரி கழுத்தில் வைத்து தான் … Read more

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமானார். வடிவேலுவின் தாய் தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் அனைவரும் மதுரையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 87 வயதான அவர் நேற்று இரவு காலமானார். தாயின் பிரிவால் நடிகர் வடிவேலு கதறி அழுதார். திரையுலகினர் பலரும் வடிவேலுவை நேரில் சந்தித்து … Read more

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்…

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா காலமானார். மதுரை மாவட்டம் வீரகனூரில் வசித்து வந்த வைத்தீஸ்வரி வயது முதிர்வு காரணமாக காலமானார், அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான வீரகனூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீம் கிரியேட்டர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் மரணத்தை அறிந்த திரைத்துறையினர் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் கடந்த ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் தனது … Read more

சென்னை அடையாற்றில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார்

சென்னை: சென்னை அடையாற்றில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அடையாறு காந்திநகர் பகுதியில் வசிக்கும் முகிலன் என்பவர் வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. முகிலன் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற நிலையில், குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இலங்கையில் இருந்து திரும்பிய முகிலன், வீட்டுக்கு வந்து பார்த்த போது 140 சவரன் காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

பாக்., ட்ரோனில் வந்த சீன ஆயுதங்கள் பறிமுதல் | பாக்., ‘ட்ரோனில்’ வந்த சீன ஆயு

சண்டிகர், பஞ்சாப் எல்லை அருகே, பாகிஸ்தானிலிருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக கடத்தி வரப்பட்ட சீன ஆயுதங்களை, நம் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், இந்திய – பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள உன்ச்சா தகலா என்ற கிராமப் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து, ட்ரோன் பறந்து வரும் ஒலி கேட்டது. ஆனால், கடும் பனிமூட்டம் காரணமாக அதை காண … Read more

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமிருக்குமா? நான் கடந்த ஆறு மாதங்களில் 6 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அதனால் எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. இது சாதாரணமானதுதானா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் எடையைக் குறைக்க நீங்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியம். முறையான ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் செய்கிறீர்களா, ஃபிட்னெஸ் நிபுணரின் ஆலோசனை … Read more

சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகரக் காவல் ஆணையர்கள், கலந்து கொள்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைக குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கொலை, கொள்ளை, … Read more

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டர் பங்கேற்க உள்ளனர்.

புதுச்சேரியில் தெற்கு பக்கமும் செயற்கை கடற்கரை: செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு| Artificial Beach on South Side at Puducherry: Submission of Action Plan Report

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையின் தெற்கு பக்கமும் செயற்கை கடற்கரை அமைப்பதற்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை தேசிய கடலோர ஆய்வு மையம் சமர்ப்பித்துள்ளது. புதுச்சேரி கடற்கரையில் கடந்த 25 ஆண்டிற்கு முன் பரந்து விரிந்த இயற்கை மணல் பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை இருந்தது. மணல் பரப்பில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். கடலரிப்பால் இயற்கை மணல் பரப்பு மறைந்து தற்போது வெறும் கருங்கற்கள் தான் காட்சித் தருகின்றன. கடற்கரை மணலில் கால் பதித்து கடல் அலையோடு விளையாடுவதை … Read more