அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த வீரர்! எனக்காக எப்போதும் இருக்கிறீர்கள் என டிவில்லியர்ஸ் உருக்கமான பதிவு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் ஹசிம் ஆம்லா அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மூத்த வீரர் 39 வயதாகும் ஹசிம் ஆம்லா, டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் 18,672 ஓட்டங்கள் குவித்துள்ளார். டெஸ்டில் 28 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 27 சதங்களும் விளாசியுள்ள ஆம்லா, அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் 311 ஓட்டங்கள் எடுத்துள்ளார். @AP இந்த நிலையில் தான் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக … Read more

அனு ஜார்ஜ் விடுமுறை: உதயசந்திரன் உள்பட 3 அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

சென்னை: முதலமைச்சரின் 4 செயலாளர்களில் ஒருவரான அனு ஜார்ஜ் விடுமுறையில் செல்வதை முன்னிட்டு,உதயசந்திரன் உள்பட 3 செயலாளர்களுக்கு அவரது துறைகள் பிரித்து ஒதுக்கீட்டு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனு ஜார்ஜிடம் இருந்த 12 துறை களும் மற்ற செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக … Read more

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு தடை: ஐகோர்ட் கிளை

மதுரை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மீதான வழக்கில் மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உயர்நிதிமன்ற கிளை ஆணை விதித்துள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மீதான வழக்கை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. வழக்கு தொடர்பாக நகர திட்டமிடல் இயக்குநர், தீயணைப்பு துறை சார்பில் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப்பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை சூப்பர்  சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட தடைகோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

சென்னை: கால் டாக்ஸியில் பயணித்த இளம்பெண்ணிடம் அநாகரிக பேச்சு… டிரைவரை கைதுசெய்த போலீஸ்!

சென்னை, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கடந்த 18.1.2023-ம் தேதி ஆவடி செல்வதற்காக கால் டாக்ஸியை முன்பதிவு செய்திருக்கிறார். பின்னர் கால் டாக்ஸியில் கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து ஆவடியை நோக்கி செல்வி பயணித்திருக்கிறார். அப்போது கால் டாக்ஸி டிரைவர், ஆவடிக்கு வேறுபாதையில் சென்றதாகத் தெரிகிறது. அதை கவனித்த செல்வி, `ஏன் இந்த வழியில் செல்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால் டாக்ஸி டிரைவர், `எனக்கு வழி தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள்’ … Read more

விரைவில் தொப்பை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சியை மறக்கமால் செய்தாலே போதும்

தொப்பையை குறைக்க இன்றைய காலத்தில் பல வழிகள் உள்ளது. அதில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். ஒரு சில உடற்பயிற்சிகள் விரைவாக தொப்பை குறைக்க உதவுகின்றது. அதுமட்டுமின்றி தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. அந்தவகையில் தொப்பை இலகுவில் குறைக்க கூடிய ஒரு சூப்பரான உடற்பயிற்சி ஒன்றை இங்கே பார்ப்போம்.    செய்முறை  முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக … Read more

புதுவையில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்…

புதுச்சேரி: புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும் என கூறிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அதற்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.  இந்த வளாகத்தில்,  ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்க 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை முன்னிலையில் நடைபெற்ற  இந்த … Read more

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில்களில் பயணிக்க நாளை முதல் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பிற்பகல் 1.10க்கு புறப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் பிப்ரவரி 4, 11, 18, 25ம் தேதிகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.40க்கு புறப்படும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. … Read more

டில்லி மகளிர் ஆணைய தலைவரிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது| Car driver arrested for violating Delhi Womens Commission chief

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் டில்லி போலீசார் கைது செய்தனர். மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். டில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று(ஜன.,19) எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது குடிபோதையில் இருந்த … Read more

`தனியாளா சடைபாண்டிய களத்துல இறக்குறேன்!’ – ஜல்லிக்கட்டில் அசரவைக்கும் மாரியம்மாள்

புதுக்கோட்டை அருகே வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர், சடைபாண்டி என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனி ஆளாகவே கலந்துகொண்டு தனது சடைபாண்டி காளையை அவிழ்த்துவிடுகிறார். ஜல்லிக்கட்டுக் களத்தில் ஆக்ரோஷம் காட்டும் சடைபாண்டி, ஜல்லிக்கட்டு களங்களில் பிடிபடாத காளையாகவும் வலம் வருகிறது. சடைபாண்டி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், மாரியம்மாளிடம் ஆட்டுக்குட்டிபோல பணிந்து நிற்கிறது. வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் … Read more

ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:  ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மண்திட்டு, ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு … Read more