நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ‘போதுமான அளவு சக்தி இல்லை’ நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் மறுதேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், பிப்ரவரி தொடக்கத்தில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழன் அன்று நடந்த கட்சியின் வருடாந்திர காக்கஸ் கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று கூறினார். Getty Images “நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், … Read more

வைர வியாபாரியின் 9 வயது மகள் துறவறம் | Dhuruvaram, the 9-year-old daughter of a diamond merchant

சூரத், ஜன குஜராத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியின், ௯ வயது மகள் நேற்று துறவறம் பூண்டார். குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் நகரைச் சேர்ந்த தனேஷ் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் தேவன்ஷி, ௯, குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். இந்நிலையில், தேவன்ஷி நேற்று ஜைன மத … Read more

குஜராத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – ஒருவர் கைது

போடாட், குஜராத்தின் போடாட் நகருக்கு அருகே பகவான்பரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சிறுமியின் உறவினர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து 39 வயதான ராஜு தேவ்சாக் பாய் சவுகான் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் … Read more

ஜனவரி -19: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

முறைகேடாக பாக்., சென்ற தாவூத் இப்ராஹிம் கும்பல் | The gang of Dawood Ibrahim who illegally went to Pakistan

புதுடில்லி, நம் நாட்டில் வசிக்கும் சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர்கள், பாக்., நாட்டு கராச்சி விமான நிலையத்துக்கு அடிக்கடி முறைகேடாக சென்று வந்தது, தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் பிறந்து வளர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, தற்போது தலைமறைவாக உள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, … Read more

உத்தரபிரதேசத்தில் முன்விரோதம் காரணமாக விவசாயி சுட்டுக்கொலை

பரேலி, உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பர்மானந்த் (வயது 40). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போத்தி ராமுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பர்மானந்த் சென்றார். அங்கு போத்தி ராம் தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்படவே போத்தி ராம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பர்மானந்தை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பர்மானந்த் உயிரிழந்தார். தினத்தந்தி Related Tags … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,734,854 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,734,854 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 672,102,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 643,533,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,066 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது: பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

ஷில்லாங், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும். இளைஞர்கள், ெபண்கள், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் கனவுகளை திரிணாமுல் காங்கிரஸ்தான் நனவாக்கி வருகிறது. மேகாலயாவில், மக்களுக்காக, … Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பொருளாளராக நியமனம்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் 48-வது பொருளாளராக இந்திய வம்சாவளியினரான விவேக் மாலேக் (Vivek Malek) கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் வெள்ளையர் அல்லாத முதல் பொருளாளர் இவர்தான். இந்திய வம்சாவளி கடந்த மாதம் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பொருளாளராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வழக்கறிஞர் விவேக் மாலேக் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் மாவட்டத்தில் புது தில்லிக்கு வடமேற்கே 60 மைல் தொலைவில் பிறந்த மாலெக், மிசோரி மாநிலத்தின் … Read more

வரும் ஆண்டுகளில் விலைவாசியுடன் அதிகம் போராட வேண்டியிருக்கும் | We will have to struggle more with prices in the coming years

தாவோஸ்,:பணவீக்கம் கடந்த ஆண்டே அதன் உச்சத்தை கடந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு முடிவே இல்லை என தோன்றுவதாகபொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்களில் பலர், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ளவர்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக விலைவாசியுடன் போராட வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளனர். பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு நெருக்கடியுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், நீண்ட கால அளவில் செலவு … Read more