இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு எதிராக மல்யுத்தத்தில் இறங்கிய வீரர்கள்… பாலியல் வன்கொடுமை காரணமாக ஜந்தர் மந்தரில் போராட்டம்…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை தருவதாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறலில் ஈடுபட்டவர்களை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர் வினேஷ் போகத்-தும் களத்தில் குதித்துள்ளார். பயிற்சிக்கு … Read more

மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு..!!

சென்னை: மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு நடைபெற உள்ளது. தற்காலிகமாக தேர்வான 30 பேருக்கு ஜனவரி.25-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணக்கு அலுவலர் நிலை – III காலிப் பணியிடங்களுக்கு கடந்தாண்டு அக்டோபர்.8-ம் தேதி கணினி வழி தேர்வு நடைபெற்றது.

`போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும்': சேகுவேராவின் மகள்

கியூபா, பொலிவியா நாடுகளின் விடுதலைக்காகப் போராடியவர் சேகுவேரா. பிறந்தது அர்ஜென்டினாவாக இருந்தாலும் எல்லை கடந்து போராடியவர். உலக கம்யூனிஸ்டுகள் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் தோழராக இன்று வரை சே திகழ்கிறார். சேகுவராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா மார்ச் மற்றும் சேகுவெராவின் பேத்தி பேராசிரியர் எஸ்டெஃபானி குவேரா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். சிபிஐ நிகழ்ச்சியில் அலெடய்டா குவேரா அலெய்டா கியூபாவின் மனித உரிமை வழக்கறிஞர், மருத்துவர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். Chavez, Venezuela And New Latin … Read more

மழலையர் பாடசாலைக்கு அருகில் நடந்த கொடூர நிகழ்வு! மனமுடைந்து பதிவிட்ட மேக்ரான்

உக்ரைனில் நடந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். கீவில் நடந்த விபத்து உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானது. இதில் உள்விவகார அமைச்சர் Denys Monastyrsky உட்பட 16 பேர் பலியாகினர். குறித்த ஹெலிகொப்டர் ப்ரோவெரி என்ற பகுதிக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால், அங்கிருந்த மழலையர் பாடசாலை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. @Sergei Supinsky/Agence France-Presse/Getty Images  மேக்ரானின் இரங்கல் இந்த நிலையில் … Read more

இண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம்… பாஜக எம்.பி. மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு…

சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்தது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA – டி.ஜி.சி.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 10 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ மற்றும் டி.ஜி.சி.ஏ. ஆகியவற்றிடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் தமிழக ஊடகங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பான … Read more

முதலாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு 349 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. பின்னர் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்து … Read more

“ஆட்குறைப்பை தொடங்குகிறதா மைக்ரோசாப்ட்''… ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?

பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது. மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு வேலையைச் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை இன்று (ஜனவரி 18 புதன்கிழமை) நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  மைக்ரோசாப்ட் தென்னிந்திய காலை உணவு பிரியாணி… மைக்ரோசாஃப்டின் சத்யா நாதெல்லா சுட்டிக்காட்டிய பிழை! அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான … Read more

பல கோடி சொத்துக்களை வேண்டாம் எனக்கூறி துறவியான 9 வயது சிறுமி!

இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வைர வியாபாரியின் மகள் உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் தனேஷ் சங்வி. இவருக்கு 9 வயதில் தேவன்ஷி சங்வி என்ற மகளும், 4 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தேவன்ஷி குறைந்த வயதிலேயே துறவறத்தில் ஈடுபாடு கொண்டதால், அவரது பெற்றோர் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல்!

டெல்லி: திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் தெரிவித்து உள்ளார். 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட … Read more