எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில்களில் பயணிக்க நாளை முதல் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பிற்பகல் 1.10க்கு புறப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் பிப்ரவரி 4, 11, 18, 25ம் தேதிகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.40க்கு புறப்படும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. … Read more

டில்லி மகளிர் ஆணைய தலைவரிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது| Car driver arrested for violating Delhi Womens Commission chief

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் டில்லி போலீசார் கைது செய்தனர். மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். டில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று(ஜன.,19) எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது குடிபோதையில் இருந்த … Read more

`தனியாளா சடைபாண்டிய களத்துல இறக்குறேன்!’ – ஜல்லிக்கட்டில் அசரவைக்கும் மாரியம்மாள்

புதுக்கோட்டை அருகே வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர், சடைபாண்டி என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனி ஆளாகவே கலந்துகொண்டு தனது சடைபாண்டி காளையை அவிழ்த்துவிடுகிறார். ஜல்லிக்கட்டுக் களத்தில் ஆக்ரோஷம் காட்டும் சடைபாண்டி, ஜல்லிக்கட்டு களங்களில் பிடிபடாத காளையாகவும் வலம் வருகிறது. சடைபாண்டி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், மாரியம்மாளிடம் ஆட்டுக்குட்டிபோல பணிந்து நிற்கிறது. வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் … Read more

ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:  ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மண்திட்டு, ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு … Read more

செங்கல்சூளைகள் இயங்க விதித்த தடையை நீடித்தது: ஐகோர்ட் கிளை

கோவை: கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளைகள் இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுள்ளது. அனுமதி தந்த சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீடித்து உள்ளது. சூளைகளில் உள்ள செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. யானைகள் வழித்தடங்களில் உள்ள செங்கல் சூளைகளை அகற்றக் கோரிய வழக்குகளில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை| Collegium recommends appointment of 8 judges of Madras High Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கொலீஜியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லட்சுமி நாராயணன், சந்திரா விக்டோரியா, ராமசாமி நீலகண்டன், ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகிய 5 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் படி, விரைவில் சென்னை உயர்நீதிமன்ற … Read more

காளைக்குப் பதில் கோழி: திருச்செங்கோடு பகுதியில் களைகட்டிய பெண்கள் கலந்துகொண்ட நவீன ஜல்லிக்கட்டு!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஒரு திடலில் வட்டம் வரைந்து, அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். கயிற்றின் மற்றொரு முனை, கோழி ஒன்றின் ஒரு காலில் கட்டப்படும். அதன்பிறகு, வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதே விதி. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதும், கோழியை பிடிக்கச் … Read more

ஒருவேளை புடின் அணுகுண்டு வீசினால் வீட்டில் எங்கு சென்று மறைந்துகொள்ளவேண்டும்?: நிபுணர்களின் ஆலோசனை

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே ரஷ்ய ஜனாதிபதி புடின் அணுகுண்டு வீசிவிடுவேன் என பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார். இன்னொருபக்கம், புடினுக்கு புற்றுநோய், அதனால் அவர் தான் சாகும்போதே மற்றவர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றுவிடவேண்டும் என்பதற்காக அணுகுண்டை பிரயோகிக்கலாம் என்னும் ரீதியில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. Image: BBC அணுகுண்டு வீசினால் வீட்டில் எங்கு சென்று மறைந்துகொள்ளவேண்டும்? அணுகுண்டு வெடிக்கும்போது அதிலிருந்து வரும் அதிவேக காற்று, ஒரு கட்டிடத்தின் திறப்புகள் வழியாகத்தான் உள்ளே நுழையும். அதாவது, ஜன்னல்கள் வழியாக. அத்துடன், குண்டு வெடிப்பதால் ஏற்படும் … Read more

ராகுல் காந்தி ‘ ஸ்மார்ட்’! ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ‘குட் சர்டிபிகேட்’…

டெல்லி: ராகுல் காந்தி ‘பப்பு’ அல்ல கெட்டிக்காரர், அவர் ஸ்மார்ட் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குட் சர்டிபிகேட் அளித்துள்ளார். பொருளாதார நிபுணரான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்தவர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் அவருக்கும் ஒத்துப்போகாத நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர்  மாதம், அவர் தனது … Read more

திண்டுக்கல், விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திண்டுக்கல், விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில்  உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.