“தண்ணி வரல, பஸ் வரலன்னாலும் என்னிடம் கேட்கிறார்கள்…” – சீரியஸாகச் சொல்லும் கார்த்தி சிதம்பரம்

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடை எப்படி பார்க்கிறீர்கள்?” “ரொம்ப தப்பு… சட்டமன்ற மரபை மீறி அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார் ஆளுநர். ரவி மேற்கொண்ட நாகாலாந்து அமைதி பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்விதான். அதற்கு பின் தான் தமிழ்நாடு அனுப்பப்பட்டு இருக்கிறார். மாநில சுயாட்சி, சமூகநீதி, அரசியலமைப்பு, ஒருங்கிணைந்த தேசியம் போன்ற கொள்கைக்கு முரணாக இருப்பதால்தான், அதற்கான தலைவர்களின் பெயரைச் சொல்லாமல் மறுத்திருக்கிறார். அவரின் பின்னணியை பார்த்தால், இதில் ஒன்றும் விசித்திரம் … Read more

126வது நாள்: ரெயின்கோட் அணிந்து காஷ்மீரில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி…

காஷ்மீர்; காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங்குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ரெயின் கோட் அணிந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று 126-வது நாளாக அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாட்கள் பாத யாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ம் … Read more

உக்ரைன் போரில் ஜேர்மனியின் முடிவால் உருவாகியுள்ள பிரச்சினை…

இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. பின்வாங்க உக்ரைனும் தயாரில்லை, ஒரு முடிவுகாணும்வரை போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் தயாரில்லை. ஆக, போர் தொடர்ந்துகொண்டே செல்கிறது. அப்பாவி உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கின்றன… ஜேர்மனியின் முடிவால் உருவாகியுள்ள பிரச்சினை போரில் உக்ரைனுக்கு உதவ பல்வேறு நாடுகள் தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவற்றில் ஒன்று, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது. ஆனால், ஜேர்மனி மட்டும் ஆரம்பத்திலிருந்தே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் … Read more

சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றவாளியை கண்டறிந்ததும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிப்பு: ஆர்டிஓ உறுதி

புதுக்கோட்டை: சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றவாளியை கண்டறிந்ததும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்துள்ளது. வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI அமைப்பினரிடம் பொறுப்பு கோட்டாட்சியர் மாரி உறுதி அளித்தார்.

“40 வருஷமா மூணு சக்கர வண்டி ஓட்டுறேன்!’’ – 70 வயது எனர்ஜி டானிக் கண்ணம்மா

“சாத்திரம் வீழ்த்தி கண்ணம்மா… மார்தட்டும் அளவிற்கு சரித்திரம் பேசுகிறாய்!” என்று முரசு கொட்டலாம், கண்ணம்மா என்கிற ரத்தினாம்பாளின் மூன்று சக்கர வண்டியுடனான 40 வருட பயணத்தை பார்க்கும்போது. தன்னுடைய 30 வயதில் கணவரின் உதவியோடு அந்த வண்டியை ஓட்டத் தொடங்கிய கண்ணம்மாவுக்கு இப்போது வயது 70. செஞ்சியில் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா. இப்போது பெரியகரம் பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பம் விவசாயப் பின்னணியை கொண்டது. இளம் பருவத்தில் கழனி கூலிவேலை செய்து வந்தார். … Read more

இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை ஒப்பந்தம் செய்யும் முன்னணி கால்பந்து கிளப்? பரவும் தகவல்கள்

இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹரி கேன், டோட்டன்ஹாம் அணியில் இருந்து மான்செஸ்டர் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என்ற செய்தி பரவி வருகிறது. ஹரி கேன் 29 வயதாகும் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான ஹரி கேன், தற்போது டோட்டன்ஹாம் கிளப் அணியின் இறுதி ஆண்டில் இருக்கிறார். எனவே அவர் இந்த கோடையில் வேறு அணிக்கு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியர் லீக் போட்டிகளில் இந்த சீசனில் ஹரி கேன் 20 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து மிரட்டியிருக்கிறார். … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் களமிறங்குகிறார் ஈவிகேஎஸ் மகன் இளைய மகன் சஞ்சய்!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற  இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்  போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திடீர் மரணத்தை தொடர்ந்து காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று … Read more

இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: பாஜகவுக்கு நெருக்கடி

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவின் ஆதரவை கோர திட்டமிட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளை இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இரு அணியும் ஆதரவு கேட்பதால், ஒரு தரப்பை ஆதரிக்குமா அல்லது பாஜக தனித்து களம் இறங்குமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் பட்டம் இதழ் மெகா வினாடி வினா இறுதி போட்டி: கவர்னர் பங்கேற்பு| Dinamalar Degree Magazine Mega Quiz Final : Governor Participation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி : ‘தினமலர் பட்டம்’ இதழ் நடத்தும் மெகா வினாடி வினா இறுதி போட்டி இன்று புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது. இதில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார். நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், ‘தினமலர்’ நாளிதழ், ‘பட்டம்’ எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாக … Read more