சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்,  புயல் நிலவரங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

மனதை கல்லாக்கி மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்…! காரணம் என்ன?

கோலார், கர்நாடக மாநிலம் முலபாகிலு நகரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் குடும்பத் தகராறில் தனது இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ராமசமுத்திரத்தில் உள்ள குருபனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஜோதி. இந்த நிலையில் ஜோதி நேற்று காலை குடும்பத் தகராறில் தனது மகள்களுடன் அஞ்சனாத்ரி மலை உச்சிக்கு வந்துள்ளார். தனது மகள்கள் மீது தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொள்ள … Read more

“அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்!" – செல்லூர் ராஜு

தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டணம், விலைவாசியை தி.மு.க அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை, மின்கட்டணம் உயர்ந்துள்ளது. அனைத்து விலைவாசியும் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க அரசு கொண்டு வந்ததுபோல் ஒரு திட்டத்தைக்கூட தி.மு.க அரசு கொண்டுவரவில்லை. குஜராத்தை பொறுத்தவரை அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் சொந்த … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இன்று 25 விமான சேவைகள் ரத்து…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலிங்ன மேற்கு வடமேற்கு திசையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டு உள்ள நிலையில், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் … Read more

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர்

சென்னை: மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கும். மாமல்லம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருகிறது.

மாண்டஸ் புயல் எதிரொலி – திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை – பக்தர்கள் கடும் அவதி

‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. . புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை … Read more

“அட்டூழியம், அக்கிரமம், அநியாயம்… இதுதான் திமுக-வின் ஆட்சி!" – ராஜேந்திர பாலாஜி காட்டம்

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்‌ அறிவிப்பின்படி விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி சேத்தூர் பேரூர் கழகம் சார்பில் தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின்கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான … Read more

இந்தியாவை மடக்க Secret வெப்பன்ஸ்?

இந்தியா – சீனா பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகின்றது.  இந்தியாவின் ஒரு முழு மாநிலத்தையை சீனா தன்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றது.   இந்தியாவுடன் கிட்டத்தட்ட 3500 கிலோமிட்டர் நீளாமான எல்லையை கொண்டுள்ளதும் நாளாந்தம் ஏதாவது ஒரு எல்லையில் இந்தியாவுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் சீனா எந்த எல்லைக்கும் சென்று இந்தியாவை சிதைப்பதற்கான சதியை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதுவும் 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவிற்கு சொந்தமான … Read more

எட்டு முறை விம்பிள்டன் வென்ற பெடரர்… யார் என்று தெரியாததால் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி

‘தி டெய்லி ஷோ’ டி.வி. நிகழ்ச்சியில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்றார். அவரிடம் சமீபத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ட்ரெவர் நோவ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரோஜர் பெடரர் இரு வாரங்களுக்கு முன்பு தான் தற்செயலாக லண்டன் செல்லவேண்டி இருந்ததாகவும் பொழுதை கழிக்க விம்பிள்டன் டென்னிஸ் கிளப்பிற்கு செல்ல நினைத்ததாகவும் கூறினார். எந்த வித திட்டமிடலும் இன்றி லண்டன் வந்ததால் தன்னிடம் உறுப்பினர் அட்டை கொண்டுவரவில்லை இருந்தபோதும் விம்பிள்டன் போட்டியில் … Read more

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர் (தொகுதி 4) பதவி நியமனத்துக்கான நாளை நடைபெறும் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.