வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் முக்கவசம் அணிய வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம்  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு கட்டப்பாடு விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சேகர்பாபு, முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் … Read more

கலைஞர் நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம் வெளியீடு..!!

சென்னை: கலைஞர் நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. பேனா நினைவுச்சின்னத்தின் கீழ் கலைஞர் கருணாநிதியின் கருத்துகள் அடங்கிய கல்வெட்டு அமைகிறது. கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடல் அலை வடிவத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.

“விமானங்களில் தொடரும் சண்டை''… பயணிகளிடையே கைகலப்பு|வைரல் வீடியோ!

இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த விமான நிலையத்தில், பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட விவாதம் சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து விமானங்களில் இந்தியர்கள் தேவையில்லாத வம்படி சண்டைகளில் ஈடுபடுவதாகக் கருத்துகள் கிளம்பின.  இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தகராறு தற்போது பேங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்குச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், முதலில் வாக்குவாதம் ஆரம்பித்து, சண்டை சூடு பிடிக்கிறது. நண்பர்களாக வந்த … Read more

மக்கள் 999 இலக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டாம்: பிரித்தானியா முழுக்க ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்

பிரித்தானியா முழுவதும் மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதால், மக்கள் 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியில் NHS சேவை அவசர சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சில நோயாளிகள் படுக்கை வசதிக்காக 40 மணி நேரம் வரையில் காத்திருக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Credit: Alamy மேலும், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்துக்கிடப்பதாகவும், படுக்கைகளை காலி செய்து நெருக்கடியை சமாளிக்க NHS நிர்வாகம் கடுமையாக போராடி … Read more

2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்: காங்கிரஸ், விசிக எதிர்ப்பு…

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இந்தி தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான, செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம் தேதி காண்பிக்கப்படுகிறது.  இதை காண வருமான  அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.  ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்பட்டால், அது … Read more

திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் போராட்டம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க அனுமதிக்காத கோயில் துணை ஆணையர் விஜயாவை கண்டித்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி… தகனம் செய்யப்பட்டது ஹீராபென் மோடியின் உடல்!

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30/12/2022 ) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 99. இது தொடர்பாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது” எனத் தன்னுடைய தாய்க்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். இறுதிச்சடங்கில் மோடி முன்னதாக, பிரதமர் மோடி இன்று வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வில் … Read more

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி படுகாயம்! எரிந்து சாம்பலான கார்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். ரிஷப் பண்ட் படுகாயம் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்பவர் ரிஷப் பண்ட். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியில் ரிஷப் பண்ட் சென்ற கார் பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. அதன்படி கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பின்னர் தீப்பிடித்து எரிந்து கார் சாம்பலானது. Rishabh Pant has suffered a serious car accident … Read more

டிபிஐ வளாகத்தில் 4வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – 75க்கும் மேற்பட்டோர் மயக்கம்…

சென்னை: ஒரே பணி ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில்இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்  இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, இதுவரை   75க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறிய திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், உடனே நிறைவேற்ற வலியுறுத்தி,   கடந்த 27-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் குடும்பத்துடன் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ள பகுதி மக்களிடம் நடந்த விவரங்கள் குறித்து பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.