"மோடி, அமித் ஷாவைப் போல் அனைத்து கிராமங்களுக்கும் செல்லுங்கள்!" – காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை

இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற ஏழு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் பாஜக-வும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் மார்ச்சில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு, மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவரானார். மல்லிகார்ஜுன கார்கே அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த இமாச்சல், … Read more

மாணடஸ் புயல் சென்னையில் 140 டன் கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல

சென்னை: மாணடஸ் புயல் சென்னையில் 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டஸ் புயல் சென்னையில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலினால் சென்னை முழுவதும் கழிவுகள் அதிகமானது. தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி உழியர்கள் இரவோடு இரவாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். 1 முதல் 8 மண்டலம் வரையுள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவரக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரை 893.42 மெட்ரிக் … Read more

பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

சேலம்: பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்துள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் பெரிய மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதியார் பிறந்த நாள்; காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை| Dinamalar

லக்னோ: பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் – லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய … Read more

BANvIND: இஷானிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்; இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா!

திரில்லர் போட்டிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டுவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுமோ அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. வங்கதேசம், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து என்று வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இறங்கு முகத்தில் இருந்த இந்திய அணி அதிகாரப்பூர்வமாக தற்போது தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. கடைசி வரை போய் போராடி ஜெயிப்பது, கடைசி பந்து போடும் வரை யார் வெற்றி பெறுவார் என்றே தெரியாமல் இருப்பது போன்ற … Read more

உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.57 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.88 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மகாராஷ்டிரா: நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 6-வது வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் டெல்லி- வாரணாசி வழித்தடங்களுக்கு இந்த  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

`அம்பேத்கர் மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி நடத்தினார்'-சர்ச்சையாகப் பேசியதாக அமைச்சர் மீது மை வீச்சு

மகாராஷ்டிரா உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசும்போது பாபாசாஹேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். “அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் பள்ளி தொடங்கியபோது அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் மக்களிடம் சென்று `நான் பள்ளி தொடங்குகிறேன், தயவு செய்து பணம் கொடுங்கள்’ என்று பிச்சை எடுத்து பள்ளியை நடத்தினர்” என்று தெரிவித்திருந்தார். சந்திரகாந்த் பாட்டீல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழ்நாட்டில் நிலவு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தின் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.