காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் படுகொலைகாதலனுடன் சேர்ந்து மகள் வெறிச்செயல்

குவாலியர், மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் ஹசிரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடியாபுரா பகுதியில் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பெண்ணின் வீடு பூட்டிக்கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று கதவை உடைத்து பார்த்தபோது, அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணின் 17 … Read more

பேரழிவு பனிப்புயல் தாக்கியதில் ஆபத்தான நிலைக்கு சென்ற பிரபல நடிகர்! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்

ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயலின் போது விபத்தில் சிக்கியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்வெல் சூப்பர் ஹீரோ மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் Hawkeye எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரென்னர். 51 வயதாகும் ஜெர்மி, தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. @Jim Ruymen/UPI | License Photo ஜெர்மியை தாக்கிய … Read more

ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு| Opening of the Vaikunda gate in the Eyumalayan temple

திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசிக்காக, ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக செல்ல, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்திற்கு மறுநாள் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதால், தரிசனம் செய்ய பக்தர்கள் … Read more

சபரிமலை அய்யப்பன் கோவில் வெடி வழிபாட்டு மையத்தில் தீ விபத்து – 3 பேர் காயம்

சபரிமலை, கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் திடீரென … Read more

எங்களை அவர்கள் வில்லன்களாக வைத்திருக்க நினைத்தால்.. நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரியின் பேச்சு

தனக்கு தேவை ஒரு குடும்பம் தான் என்றும், நிறுவனம் அல்ல என்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணலில் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரி திங்களன்று வெளியிடப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணல் பகுதியில், இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் பல குறித்து பேசினார். அப்போது அவர், ‘எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், ஒரு நிறுவனம் அல்ல’ எனக் குறிப்பிட்டார். மேலும் பேசிய ஹரி, ‘எங்களை எப்படியாவது வில்லன்களாக வைத்திருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்தால், அவர்களை … Read more

புதுடில்லி கொடூர சாலை விபத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க முதல்வர் கோரிக்கை | Chief Minister demands severe punishment for the culprits of the horrific road accident in New Delhi

புதுடில்லி, :புதுடில்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் உடல், 12 கி.மீ., துாரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க ஆவன செய்யுமாறு, கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதுடில்லி போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளது. புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், … Read more

டெல்லி இளம்பெண் மரண விவகாரம்; போலீசிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி, டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி அதிகாலை 3.24 மணியளவில் கஞ்சவாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. இதனையடுத்து, ரோகிணி … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 03 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் | 03.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்: புது வருடம் குறித்து கனேடிய பிரதமரின் பதிவு

நல்லிணக்கத்தை முன்னெடுப்பது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். புது வருடம் 2023ஆம் ஆண்டு நேற்று பிறந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கனடாவில் புத்தாண்டு முதல் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை என்ற அறிவிப்பு வெளியானது. @Tijana Martin/The Canadian Press எனினும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிமக்கள் அல்லாத நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக … Read more