18 வயது இளைஞராக மாற ஆசை! ஆண்டுக்கு 2 மில்லியன் டொலர்கள் செலவழிக்கும் 45 வயது தொழிலதிபர்

அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் 18 வயது இளைஞர் போல மாற பல மில்லியன்களை செலவிட்டு வருகிறார். தலைமை செயல் அதிகாரி லாஸ் ஏஞ்செல்ஸை தளமாக கொண்ட நியூரோடெக்னாலஜி நிறுவனமான Kernel-லின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஜான்சன். 45 வயதாகும் இவர் 18 வயது இளைஞரைப் போல மாற முயற்சி செய்து வருகிறார். இவர் ‘Project Blueprint’ எனப்படும் தொடர்ச்சியான சோதனைகள் மூலம் தனது உடலை 5.1 ஆண்டுகளாக குறைத்ததாக கூறுகிறார். 30 மருத்துவர்கள் மற்றும் சுகாதார … Read more

Beginning Review: ஒரே திரையில் இரண்டு கதைகள்; ஈர்க்கிறதா இந்த வித்தியாசமான ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் சினிமா?

உலக அளவில் பல `ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்’ (Split Screen) திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஆசியாவின் முதல் ‘ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்’ திரைப்படம் என்ற பெருமையைத் தாங்கிய புது முயற்சியாக வெளிவந்திருக்கிறது `பிகினிங்’ (Beginning). இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற்றதா, இல்லை, பார்வையாளர்களுக்கு அயற்சியாக மட்டுமே முடிந்ததா? ஒரே திரையில் இரண்டு கதைகள் ஓடுகின்றன. இடதுபுறம், மன வளர்ச்சி குன்றிய இளைஞனான வினோத் கிஷனும் அவரது அம்மாவான ரோகிணியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். தன் மகனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து … Read more

2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம்

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதினை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் வென்றார். ஐசிசி விருதுகள் ஐசிசி 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதில் சிறந்த அணி, சிறந்த கேப்டன், சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களும், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகளும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் விருதை சூர்யகுமார் யாதவ் (இந்தியா) வென்றுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமீபியா … Read more

திருப்பூர்: இரு பிரிவினரிடையே மோதல்… தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்! – என்ன நடந்தது?

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்ற வாரத்துக்கு சுமார் 2,000 வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வருகின்றனர். தமிழகத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், பின்னலாடை நிறுவனங்களும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

மக்களிடம் நிதி திரட்டி மோசடி: திரிணமுல் காங்., பிரமுகர் கைது| Trinamool Cong, Prominent arrested

ஆமதாபாத்: பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி மோசடி செய்த வழக்கில் திரிணமுல் காங். செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேவை பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. குஜராத்தைச் சேர்ந்தவர் சாகேத் கோகலே. இவர் திரிணமுல் காங். கட்சியின் செய்தி தொடர்பாளர். ‘நமது ஜனநாயகம்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இதை தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 1700 பேரிடம் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி … Read more

ஒரே ஆணுடன் ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சிக்கும் இரட்டைச் சகோதரிகள்!

அவுஸ்திரேலியாவில் ஒரே மாதிரியான இரட்டைச் சகோதரிகள் ஒரே ஆணிடமிருந்து ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவுஸ்திரேலியாவில், ஒரே மாதிரியான ஆடைகளை அணிவது முதல் ஒரே நேரத்தில் குளியலறைக்குச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகச் செய்வதாக அறியப்படும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே மாதிரி தோற்றத்தைக் கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள், ஒரே ஆணை திருமணம் செய்து, ஒரே நேரத்தில் கர்ப்பமாக திட்டமிட்டுள்ளனர். அன்னா மற்றும் லூசி சகோதரிகள் பெர்த் நகரத்தைச் சேர்ந்த 37 வயதாகும் அன்னா … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மாநிலங்களின் பன்முகத்தன்மை: குடியரசு தின அணிவகுப்பில் தெரிந்த உண்மை| The Republic Day parade showcased the diversity of the states

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் கடமைப்பாதையில் நடக்கும் அணிவகுப்பில் மாநிங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் என 23 ஊர்திகள் கலந்து கொண்டன. இவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் தேச பாதுகாப்பை ஊக்கப்படுத்துவதாக இருந்தன. குடியரசு தின விழாவில், மகளிர் சக்தியை குறிக்கும் … Read more