அச்சமற்ற, சுதந்திரமான என் மகளுக்கு பிறந்தநாள்! அந்த விடயம் மாறாது என நம்புகிறேன்..ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மகளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். Ella Grace கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மகள் Ella Grace Margaret இன்று தனது 14வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். @TheCanadianPress தன் மகளின் பிறந்தநாளையொட்டி அவர் விளையாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரூடோ பகிர்ந்துள்ளார். ட்ரூடோவின் வாழ்த்து அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘Ella Grace முதல் நாளில் இருந்தே ஆர்வம், அச்சமற்ற மற்றும் சுதந்திரமாக தான் … Read more

06. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 06 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது! விஜயகாந்த் ஆதங்கம்

டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பயிர்கள் சேதம் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். @HT Photo விஜயகாந்த் அறிக்கை விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி … Read more

6 பந்துகளில் 6 சிக்ஸர்! புதிய வரலாறு..வாணவேடிக்கை காட்டிய வீரரின் வீடியோ

பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். இஃப்திகார் அகமது பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. முதலில் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர் அணி 184 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் அல்ரவுண்டர் வீரர் இப்திகார் அகமது 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசினார். வாஹப் ரியாஸ் வீசிய ஓவரை சிதறடித்த அவர், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை … Read more

'3 பெண்களை திருப்திப்படுத்துவது பெரிய விஷயமே இல்லை' முப்பிறவி சகோதரிகளை திருமணம் செய்த நபர்!

கென்யாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான அக்கா தங்கைகள் மூன்று பேரை ஒரே ஆண் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒரே ஆண் முப்பிறவி சகோதரிகளுடன் திருமணம் பலதார மணம் (Polygamy) இன்றைய உலகில் கேள்விப்படாதது அல்ல. இருப்பினும், சகோதரிகள் ஒரே ஆணுடன் திருமணம் செய்துகொள்வது மிகவும் வித்தியாசமானது. கென்யாவில் நடந்த வினோதமான தொடர் நிகழ்வுகளில், Identical Triplets என்று சொல்லக்கூடிய ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான மூன்று சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்த வினோத … Read more

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு

சென்னை: சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 50 இடங்களில் 200 ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்த சென்னை காவல்துறை திட்டம் வகுத்துள்ளது. திருட்டு வாகனத்தின் எண் கேமராவில் பதிவானதும் போலீசுக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

"காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பேனா நினைவுச்சின்னத்தை விமர்சிக்கிறார்கள்!" – கே.எஸ்.அழகிரி தாக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தைப் பிரமாண்ட சிலையாகச் சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைவிடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. மெரினா கடலில் பேனா சிலை இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் … Read more

கருப்பை நீக்கினால் மட்டுமே பெண்கள் இனி அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்: மருத்துவர்கள் ஆலோசனை

கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, பெண்கள் கருப்பை நீக்க வேண்டும் என தற்போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை புற்றுநோய் கருப்பை நீக்கம் அல்லது salpingectomy என்பது பொதுவாக நிரந்தர கருத்தடையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது கருப்பை புற்றுநோய் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியானதில், பிள்ளைகள் இனி போதும் என்ற முடிவுக்கு வந்த தாய்மார்கள், கருப்பை நீக்கம் செய்து கொள்வது கருப்பை புற்றுநோய் என்ற ஆபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமையும் … Read more

பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்

டெல்லி: பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரான் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்தில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

“அவைத்தலைவரின் கடிதத்தைப் புறக்கணிக்கிறோம்; தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்!' – ஓபிஎஸ் அணி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரைத் தேர்வுசெய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள்கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார். ஓ.பி.எஸ் தரப்புக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி, அவைத்தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில், … Read more