தலைப்பு செய்திகள்
பக்கத்து வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்ற சிறுமி பலாத்காரம்
மங்களூரு:- டி.வி. இல்லை தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் வீட்டிற்கு டி.வி. பார்ப்பதற்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பெல்தங்கடி தாலுகா கடிருத்யவாரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர். தொழிலாளி. இவரது வீட்டின் அருகே பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமி வீட்டில் டி.வி. இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவள் பக்கத்தில் உள்ள சுதிர் வீட்டிற்கு சென்று டி.வி. பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளாள். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் காலை … Read more
டெல்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல் 4 பயணிகள் கைது
புதுடெல்லி, தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் அவற்றை பயணிகள் கடத்தி வந்துள்ளனர். தண்ணீர் மோட்டாரில் செம்புச்சுருள் இருக்கும் இடத்தில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி … Read more
நாமக்கல்: `வயிற்றுவலி' எனச் சென்றவருக்கு ஊசி போட்ட ஹோமியோபதி டாக்டர்; மயங்கி விழுந்து இறந்த நபர்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காங்கமுத்து (39). இவர், அதே பகுதியிலுள்ள ஆவின் பாலக சொசைட்டியில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு, மஞ்சு என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே போல், சிங்கிலிகோம்பை அருகேயுள்ள வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவர், அதே பகுதியில் உள்ள வாழப்பாடி சாலையில் சக்தி ஹோமியோபதி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். காங்கமுத்து இன்று காலை சக்திவேலின் கிளினிக்குக்கு … Read more
அரசு பஸ்சை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்
சிக்கமகளூரு:- சிக்கமகளூரு மாவட்டம் சக்கராயப்பட்டணத்தில் இருந்து பானாவாராவிற்கு குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று பானாவாரா கிராமத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை முற்றுகையிட்ட … Read more
Daily Horoscope | Today Rasi Palan | January – 06 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் | 06.01.23
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
மோட்டாா் சைக்கிள் மோதி பள்ளி மாணவி படுகாயம்
மங்களூரு:- தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டல் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகள் பாத்திமா நிதா (வயது 10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் ஆட்டோவுக்காக அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது … Read more