"உலகக்கோப்பையை இப்படி வென்றால், கால்பந்திலிருந்து ஓய்வுபெற்று விடுவேன்!"- கிறிஸ்டியானோ ரொனால்டோ

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் ‘Golden Foot’ விருதை 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ கத்தாரில் நாளை (20.11.2022) நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “அதிகபட்சமாக இரண்டு … Read more

கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே தொடரை கைப்பற்றிய வீரர்!

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றியை பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளார். 28வது கேப்டன்  அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்தது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை வகித்த நிலையில், டெஸ்ட் தொடருக்காக அவருக்கு ஓய்வு தேவை என்பதால் இரண்டாவது ஒருநாள் … Read more

`ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாமா?'- வாக்கெடுப்பு நடத்தும் எலான் மஸ்க்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப்பை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் ஒன்பது கோடிப் பேரால் பின்தொடரப்பட்டு வந்த … Read more

தேசிய அளவிலான நாய் கண்காட்சி:பெங்களூரில் அசத்திய 57 இனங்கள்| Dinamalar

பெங்களூரு:பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான நாய் கண்காட்சியில், 57 இனங்களின் 573 நாய்கள் இடம் பெற்றிருந்தன. 5,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்று ரசித்தனர். செல்ல பிராணியான நாய்களை தங்கள் பிள்ளைகள் போன்று பலர் வளர்க்கின்றனர். பால், மாமிசம் என வித விதமான உணவு வழங்கி பராமரிக்கின்றனர். நாய்களும் நன்றியுடன், வளர்ப்பவர் பின்னால் வாலாட்டி செல்லும். சிலர் தங்கள் நாய்களுக்கு பல்வேறு விதமான யுத்திகளை சொல்லி கொடுத்து, பழகு வைத்திருப்பர். இந்த வகையில் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் சாலையில் … Read more

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!'- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்பு வரை சிறப்பாக விளையாடிய இந்தியா, இங்கிலாந்துடனான அரையிறுதியில் தோல்வியுற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்குப் பின் பி.சி.சி.ஐ நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பிசிசிஐ டி20 உலகக்கோப்பைப் போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு … Read more

இந்தியர்களை புகைப்படம் எடுக்கமுடியாது! அவுஸ்திரேலியாவில் இப்படியும் ஒரு இனவெறி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் இப்படியும் இனவெறி தாக்குதல் நடத்தமுடியும் என இந்தியர்களை புண்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இனவெறி போஸ்டர் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தில், Rundle மாலில் உள்ள அவுஸ்திரேலிய தபால் நிலையத்திற்கு வெளியே இனவெறி கொண்டதாகத் தோன்றும் போஸ்டர் ஒன்று சர்ச்சையைத் தூண்டியது மற்றும் இந்திய சமூகத்திலிருந்து பின்னடைவை ஏற்படுத்தியது. இது குறித்து பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா போஸ்ட் மன்னிப்புக் கேட்டு, விரைவில் அந்த போஸ்டரை அகற்றுவதாக தெரிவித்தது. இந்திய புகைப்படங்களை எடுக்க முடியாது சர்ச்சைக்குரிய … Read more

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை: எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேப்பேரியில் உள்ள எஸ்.எம்.புஹாரி என்பவர் வீட்டில் இருந்து 11 பென்டிரைவர்கள், 7 செல்போன்கள் உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

"வயதில் சிறியவர்கள், ஆனால் அனுபவத்தில் அல்ல!"- தற்போதைய இந்திய அணி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா

டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி நேற்று வெலிங்டனில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை கேப்டனாக ஹர்திக் பாண்டியா வழிநடத்திச் செல்கிறார்.   இந்திய அணி இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால பொதுச்செயலாளரான  இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், எடப்பாடி தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் … Read more

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி

காசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை  பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழக பார்ப்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். காசி மற்றும் தமிழ்நாடு இடையேயான தொடர்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது