திருச்சி- சேலம் தேசிய நெடுசாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்

திருச்சி: பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளாது. திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

‛சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக மாறும்: நிதின் கட்கரி உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2024-ம் ஆண்டுக்குள் நமது சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சரக்குப் போக்குவரத்து சார்ந்த செலவுகள் தற்போது 16 சதவீதமாக உள்ளது. இது 2024ம் ஆண்டுக்குள் ஒற்றை இலக்காக எண்ணான, 9 சதவீதமாக குறையும். இதனால், ஏற்றுமதி செயல்பாடுகள் … Read more

“ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா…”- பேருந்தில் ஏறிய மூதாட்டியை திட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்

தஞ்சாவூரில், அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவரிடம் டிக்கெட் ஓசின்னா அடிக்கடி போயிட்டு போயிட்டு வருவியானு கேட்டு நடத்துனர் ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேருந்து தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து மெலட்டூர் வழியாக திருக்கருக்காவூர் கிராமத்திற்கு 34 ஏ என்ற எண் கொண்ட அரசு நகரப்பேருந்து சென்று வருகிறது. அதில் தஞ்சாவூர் அருகே உள்ள வீரமாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் நடத்துனராக … Read more

தம்பதி இடையே 12 வயது வித்தியாசம்! பிரித்தானியாவில் இந்திய பெண், 2 குழந்தைகள் கொலையில் புதிய தகவல்கள்

பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள தம்பதி Ketteringல் வியாழன் அன்று அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான சாஜு (52) தற்போது பொலிஸ் விசாரணை மற்றும் காவலில் உள்ளார். 2012ல் சாஜு மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. 2021 அக்டோபரில் … Read more

நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமத்தை தருகிறது! சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்ற விடுமுறை குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘தாமதமாகும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமம்’ என்பர். ஆனால் தற்காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. நமக்கு தெரிந்தவரையில், அதிமுக பொதுக்குழு வழக்கை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிமன்றமும், ஒவ்வொரு நீதிபதியும் … Read more

திருமழிசை அருகே அமையவுள்ள பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகள் வசதிக்காகவும் 24.8 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பில்  சென்னையின் 4வது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக்  குழுமத்தின் கீழ் திருமழிசை அருகே அமையவுள்ள பேருந்து நிலையம் 2023-க்குள் தயாராகும். 25 ஏக்கரில் ரூ.307 கோடி செலவில் அமையவிருக்கும் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம்!| Dinamalar

சபரிமலை : ”சபரிமலையில் ஒரு நிமிடத்தில் 80 பேர் படியேறி, ஒவ்வொருவரும் மூன்று வினாடிகள் அய்யப்பனை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அய்யப்பனை 20 லட்சம் பக்தர்கள் வணங்கிச் சென்றுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக பெருமழை, கொரோனா பரவல் ஆகியவற்றால் இப்பயணம் முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் … Read more

“உதயநிதி இல்லை… அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்" – அமைச்சர் கே.என். நேரு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான பொதுக்கூட்டம் நேற்று சேலம் கோட்டை மைதானப் பகுதியில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு., “என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பேராசிரியரை போன்று ஒருவரை நான் கண்டதில்லை. காரணம், தனக்கு கொடுக்கப்பட்ட பணியினை திறம்பட செய்து முடிப்பவர். அவர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியபோது … Read more

உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறை அறிவிப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறையை  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்து உள்ளார். மீண்டும் 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘டிச.17 முதல் ஜனவரி 1 வரை உச்சநீதிமன்றத்தின் எந்த அமா்வும் செயல்படாது’, இருவாரங்கள் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும்,  விடுமுறைக்குப் பின்னா், ஜனவரி 2-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது, அதிக … Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை கைது செய்துள்ளனர். பேருந்தை சீக்கிரமாக இயக்க கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நேற்று இரவு 5 பேர் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய திருவண்ணாமலை சேர்ந்த ஜாகிர், பிரகாஷ், பார்த்திபன், மணி, செல்வம் ஆகிய 5 பேரை காவல்துறை கைது விசாரணை செய்து வருகின்றனர்.