வனப்பகுதியில் தேனுக்கு ஆசைப்பட்டு பாறை இடுக்கில் சிக்கிய நபர்: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

ஐதாரபாத், தெலுங்கானா மாநிலம் ரெட்டிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ இவர் கடந்த 13-ம் தேதி வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தேனை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பாறை இடுக்கில் அவரது செல்போன் தவறி விழுந்துள்ளது. அப்போது செல்போனை எடுக்க முயன்றபோது அவரும் பாறைக்குள் தவறி விழுந்தார். வெளியே வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. பாறை இடுக்கில் அவர் வசமாக சிக்கிக்கொண்டார். தாம் சிக்கிக்கொண்டது குறித்து … Read more

`தனியா இருந்தா சீக்கிரமே வயசாகிடும். புகைப்பிடிப்பதை விட ஆபத்தானது தனிமை' – ஆய்வு முடிவு

`இந்த வெறுமை விடாதா, ஒரு சிறகு விழாதா’ என தன்னுடைய தனிமையின் ஏக்கங்களில் களைத்து, துணையின் நிழலைத் தேடாதவர்கள் இல்லை. தனிமையை விரும்பி ஏற்றுக் கொண்டால் வரம்; தள்ளப்பட்டால் சாபம். இந்த சாபத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு சுகந்த உறவுகள் ஏற்படுமா என்பதெல்லாம் தெரியாது; ஆனால், விரைவாகவே வயதாகும் என்கிறது ஆய்வு. RESEARCH (Representational Image) அதுவும், தினசரி புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் வயது அதிகரிப்பை விட தனிமையிலும், சோகமாகவும் இருப்பவர்களுக்கு விரைவிலேயே வயது மூப்பு ஆகும் என்கிறது ஆய்வு … Read more

இனிப்பு வழங்கிய மாணவன்… கடவுளுக்கு எதிரான போர் என கூறி மரண தண்டனைக்கு விதித்த நாடு

ஈரானில் பெண் உரிமைகளுக்காக போராடி வரும் மக்களுக்கு இனிப்பு வழங்கி ஆதரித்த மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்பு வழங்கியதற்காக மரண தண்டனை குறித்த நபர் கடவுளுக்கு எதிராக போர் மூட்டியதாக கூறியே, ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தலைநகர் தெஹ்ரானின் மேற்கே கஸ்வின் நகரில் வசிக்கும் 21 வயதான முகமது நசிரி என்ற இளைஞரே, கடவுளுக்கு எதிராக போர் தொடுத்ததாக கூறி கைதானவர். கடந்த மாதம் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் … Read more

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. ஜனவரி 14 சனிக்கிழமை போகி பண்டிகை, 15 பெரும் பொங்கல், 16 மாட்டுப் பொங்கல், 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 12 ம் தேதியே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாக இருப்பதால் ஜனவரி 12, 13 … Read more

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். அத்திபாளையம் பேருந்துநிலையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

"நாட்டில் உள்ள அணு உலைகள் கதிர்வீச்சு, சுனாமி அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன" – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் விளக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயங்களில் இருந்தும் நம் நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அணுக்கழிவு வெளியேற்றுதலில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக … Read more

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்;என் மகன் என்னைக் கொலைசெய்யவில்லை!" – நடிகை வீணா கபூர் விளக்கம்

மும்பையில் வீணா கபூர் என்ற 74 வயது பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் மகனால் படுகொலைசெய்யப்பட்டார். வீணாவின் உடல் மாதேரன் மலைப்பகுதியில் வீசப்பட்டது. போலீஸார் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டை நடத்தி வீணா கபூர் உடலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அவரின் மகன் சச்சின் கைதுசெய்யப்பட்டார். சொத்துப் பிரச்னையில் இப்படுகொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. வீணாவின் மற்றொரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் தன தாயாருக்கு போன் செய்து பார்த்த போது போன் … Read more

மாதவிடாய் என கெஞ்சியும் மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர்: வெளியான பரபரப்பு ஆடியோ

தமிழகத்தில் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாவட்டத் தலைவரின் நர்சிங் கல்லூரி தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த நர்சிங் கல்லூரியில், நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் உடற்கூறியல் … Read more

அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெறும் 28வது சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோளை வைத்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அமிதாப்பச்சனுக்கு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு சார்பாக இல்லாமல் மேற்கு வங்க மக்கள் சார்பாக … Read more

2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.