பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணாதிலகாவுக்கு ஜாமின்

கொழும்பு : பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர், தனுஷ்க குணாதிலகாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டியின்போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. பாலியல் வழக்கில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி தனுஷ்க குணாதிலகா கைது செய்யப்பட்டார்.

எம்.பி.சி., உள் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவை அரசு முடிவெடுக்குமா?| Dinamalar

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து, நிர்வாக சீர்த்திருத்த துறை அடுத்தடுத்து வேலைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில், பல பணியிடங்களுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடுபட்டுள்ளது புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக ‘குரூப்-பி’ அரசிதழ் பதிவு பெறாத பணிகளுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடப்பட்டுள்ளது. இதைனைக் கண்டித்து அரசியல் கட்சிகள், போராட்டத்தினை அறிவித்துள்ளன. புதுச்சேரி இட ஒதுக்கீடு தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதில், … Read more

`டிக்கெட் எடு!’ – கண்டிப்பு காட்டிய நடத்துனர்… மனம் குமுறிய மாற்றுத்திறனாளி- அதிகாரிகள் நடவடிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ஃபாசில் (20). இவருக்கு பிறவியிலிருந்தே பார்வைக்குறைபாடு இருந்திருக்கிறது. அத்துடன் இரண்டு கண்களும் தெரியாது. ஆனாலும், வீட்டிலேயே முடங்கிப் போகாமல், படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் முக்கணாமலைப்பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் (16-ம் தேதி) வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். பின்னர் கல்லூரி முடித்து மதியம் … Read more

தவறான சிகிச்சையால் வீராங்கனை மரணம்! மருத்துவர்கள் தலைமறைவு?

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை மரணமடைந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். காலில் அறுவைசிகிச்சை அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை … Read more

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உயர்ந்து உள்ளது. இந்த தகவலை அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது. இளைய சமுதாயத்தினர் மட்டுமின்றி பெற்றோரிடமும் அரசு வேலை என்பது ஒரு கனவாகவே உள்ளது. ஆனால், இந்த கனவு பெரும்பாலோருக்கு நிறைவேறுவது இல்லை. இருந்தாலும், உயர்படிப்பு முடிந்ததும், தங்களது கல்வி விவரங்களை அரசு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்து, … Read more

அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி அவதூறு கருத்து பதிய பாஜக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை..!!

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி அவதூறு கருத்து பதிய பாஜக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மதுபான கொள்முதல், விற்பனை பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து நிர்மல்குமார் அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். தன்னை பற்றி அவதூறு கருத்து வெளியிட நிர்மல்குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வங்கக்கடலில் உருவானது காற்றுழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடில்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், நாளை … Read more

`நோ ஜி.எஸ்.டி' – மம்தா மிரட்டலுக்கு அடிபணியுமா மத்திய அரசு?

இந்தியாவில் அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க என எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், டெல்லிக்கு எதிராக ஆவேசமாக குரல் எழுப்புபவராகவும் அவர் இருந்துவருகிறார். 2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்றது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது, மேற்கு வங்கத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மிகவும் ஆவேசமடைந்தார் மம்தா பானர்ஜி. மன்மோகன் … Read more

இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர்: மொத்தமாக அம்பலப்படுத்தும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி

இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர் எனவும், தாம் செய்வது எல்லாம் சரியே என்ற மன நிலையில் வாழ்பவர் எனவும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். இளவரசர் வில்லியம் இதுவரை இளவரசர் ஹரி- மேகன் தம்பதி தொடர்பிலேயே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியின் வாழ்க்கை இனி அமெரிக்காவில் தான், அவர் பிரித்தானிய ராஜகுடும்பத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும், @getty முன்னாள் நடிகை மேகன் மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவர் மொத்தமாக மாறிவிட்டார், அல்லது … Read more

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்! மீன்வளத்துறை எச்சரிக்கை…

சென்னை:  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு … Read more