குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளி விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோவில் பண்டிகையை முன்னிட்டு (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஏகலைவா பள்ளிகளுக்கு மத்திய அரசின் உதவி நிறுத்தம்?| Dinamalar

தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி, விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளை மத்திய அரசு 1997 – 98ல் உருவாக்கியது.இத்திட்டத்தின்படி, 50 சதவீத்துக்கும் அதிகமாகவோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா பள்ளிகள் … Read more

டிசம்பர் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 207-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 207-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சபரிமலையில் தொடரும் நெரிசல்| Dinamalar

சபரிமலை :கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சன்னிதானத்தில் ஏற்படும் நெரிசலையும், காத்திருப்பையும் குறைக்க, நேற்று முன்தினம் இரவிலிருந்து, பக்தர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். எருமேலி பாதையிலும் இதே நிலை உள்ளது. இதனால், பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை சாலையோரங்களில் காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்புக்குப்பின், பக்தர்கள் சன்னிதானம் வந்தால், இங்கும் எட்டு மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் பக்தர்களின் … Read more

உறைந்த ஏரியில் உயிருக்கு போராடிய சிறுவர்கள்… சிறுமி ஒருவரின் துணிச்சல்: வெளிவரும் புதிய பின்னணி

பர்மிங்காமில் உறைந்த ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவர்களை காப்பாற்ற பாடசாலை மாணவி ஒருவர் மரக்கிளையால் முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமி துணிச்சலுடன் அவர்களை காப்பாற்ற பர்மிங்காமில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியானது வெப்பநிலை சரிவடைந்ததையடுத்து உறைந்தது. குறித்த ஏரியில் விளையாடிய சிறார்கள் தவறிவிழுந்து விபத்தில் சிக்கியதில் நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். @getty இதில் மூவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 6 வயதுடைய சிறுவன் தற்போதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,661,188 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,661,188 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 654,613,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 629,780,761 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,580 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரவிந்தரின் சக்தியை இளைஞர்கள் உணர வேண்டும்| Dinamalar

புதுச்சேரி: ”அரவிந்தரின் யோக சக்தி, ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாக உருவாகும்,” என, பிரதமர் மோடி பேசினார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அரவிந்தரின் பிறந்த நாள் விழாவில், காணொலியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரவிந்தர் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி மண்ணில் அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை … Read more

ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் தடைப்பட்ட உணவு தானிய ஏற்றுமதி: பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனைகளை தொடர்ந்து உணவு தானிய ஏற்றுமதி இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் மீண்டும் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் துறைமுகங்களை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது. இடைநிறுத்தப்பட்ட தானிய ஏற்றுமதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக … Read more

அறங்காவலர் நியமனம்: அரசுக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி :கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஆனால், இந்தக் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில், மாநில அரசு அக்கறை காட்டவில்லை’ என கூறியிருந்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நேற்று இந்த மனு மீது விசாரணை … Read more

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் விடுதலை!

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து ஸ்பெயின் நீதிமன்றம் விடுவிதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு கடந்த 2009-2013 காலகட்டத்தில் பிரேசிலின் கிளப் அணியான சண்டோசில் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடினார். அதன் பின்னர் பார்சிலோனா அணிக்கு மாறிய நெய்மர், 2017ஆம் ஆண்டு முதல் பாரிஸ் சையிண்ட் ஜேர்மைன் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். அவர் சாண்டோஸ் அணியில் இருந்தபோது அவரது விளையாட்டு உரிமைகளில் 40 சதவீதத்தை, பிரேசிலிய விளையாட்டு முதலீட்டு நிறுவனமான டிஐஎஸ் வைத்திருந்தது. … Read more