தூத்துக்குடி: `50 வருஷமா இதே நிலைமைதான்!' – கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலை தூக்கிச் சென்று தகனம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையே நம்பி உள்ளனர்.  இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானம், இதே கிராமத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு அக்கரையில் உள்ளது. மயானத்திற்குச் செல்ல என தனிப்பாதை எதுவும் இல்லாததால், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவரின் உடலை வாய்காலைக் கடந்துதான் தூக்கிச் செல்ல வேண்டும். தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள் … Read more

நாட்டின் ஒட்டுமொத்த துயரத்தையம் மறக்கடித்த FIFA உலகக்கோப்பை! மெஸ்ஸியின் அணியிடமிருந்து அதிர்ஷ்டத்தை நம்பும் மக்கள்

FIFA உலகக் கோப்பை கொண்டாட்டம் அர்ஜென்டினாவின் பணவீக்க துயரத்தை தற்காலிகமாக மறக்கடித்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. துயரத்தை மறந்து மக்கள் உற்சாகம் அர்ஜென்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அதன் கால்பந்து அணி வெற்றி பெற்றதன் விளைவாக ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக உள்ளது. அர்ஜென்டினாவின் மூன்றாவது உலக சாம்பியன் பட்டத்தை 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் கனவுடன் இருக்கும் நாட்டு மக்கள், குறைந்த பட்சம் இப்போதைக்கு அவர்கள் … Read more

செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி 43 கோடி ரூபாய் மோசடி… பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் போலீசில் புகார்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு வி.ஆர்.எஸ். பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் தீபாவளி பண்ட் பிடிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து வந்தது. தவணை முடிந்தும் பணம் வழங்காததை அடுத்து பணம் வசூலித்து தரும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்தவர்கள் அக்டோபர் மாத இறுதியில் இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் 10 ம் தேதி அனைவரின் வங்கிக்கணக்கிலும் … Read more

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கைது

விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ரூ. 9 லட்சம் பெற்று ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர், செயலாளர் மீது அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே மோசடி புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்து சேர்ந்தது கடைசி ரபேல் விமானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து பல கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் பெறப்பட்டு வந்தது. அந்த வகையில் ஒப்பந்தத்தின்படி கடைசி மற்றும் 36வது ரபேல் விமானம் இந்தியா வந்து சேர்ந்தது. பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ என்ற நிறுவனத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. கடந்த 2020 ஜூலையில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியா வந்தன. அவை, … Read more

ஆந்திரா டு நெல்லை; லாரியில் ரகசிய அறை… 100 கிலோ கஞ்சா போலீஸில் சிக்கியது எப்படி?!

தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்க தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென் மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கர்க், கஞ்சா கடத்தல் கும்பலின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், சில இடங்களில் இன்னும் கஞ்சா விற்பனை தொடரவே செய்கிறது. கடத்தி வரப்பட்ட கஞ்சா நெல்லை மாவட்டத்துக்குள் வெளி மாநிலங்களிலிருந்து எல்லைப் பகுதிகள் வழியாக கஞ்சா கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. … Read more

நாங்கள் வெற்றியாளர்கள்! சிங்கங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்..அரையிறுதி தோல்விக்கு பின் கூறிய மொராக்கோ ரசிகர்கள்

உலகக்கோப்பை அரையிறுதியில் மொராக்கோ அணி தோல்வியடைந்தபோது அந்த அணியின் ரசிகர்கள் தங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தனர். மொராக்கோ தோல்வி கத்தார் உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ தோல்வியடைந்தது. மொராக்கோ அடுத்ததாக 17ஆம் திகதி நடக்கும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது. தோல்வியடைந்தாலும் மொராக்கோ ரசிகர்கள் தங்கள் அணியை விட்டுக் கொடுக்காமல், தங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறினர். @Sorin Furcoi/Al Jazeera பெருமைப்படும் ரசிகர்கள் லாமியா என்ற ரசிகை கூறுகையில், … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு  விசாரணையை மீண்டும்  ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற  விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், … Read more

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடி

திருவண்ணாமலை: வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடிசெய்தவர்  தலைமறைவு. சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தலைமறைவான சம்சு மொய்தீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் புகாரில் சம்சு மொய்தீன் உறவினர் நிஷா என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்து சீல் வைத்தனர்.

அக்னி-5 ஏவுகணை சோதணை வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வரம்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை ,அணு ஆயுதங்களை சுமந்து 5,500 கி.மீ. தொலைவிற்கு சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இன்று ( டிச.15) ஒடிசாவில் … Read more