அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி:இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ‘அக்னி – 5’ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில் ஊடுருவ முயன்றனர். அவர்களை நம் வீரர்கள் தீரத்துடன் போராடி விரட்டி அடித்தனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின், டி.ஆர்.டி.ஓ., … Read more

மும்பை: சொத்துப் பிரச்னை: அம்மாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்த மகன் கைது!

மும்பை அந்தேரி ஜுகுவில் கல்பதரு என்ற கட்டடத்தில் வசித்தவர் வீணா கபூர் (74). இவர் தன்னுடைய இரண்டாவது மகன் சச்சினுடன் வசித்துவந்தார். சச்சினுக்குத் திருமணமாகவில்லை. அவர்கள் வசிக்கும் வீடு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்னை இருந்துவந்தது. இருவரும் அடிக்கடி சின்னச் சின்னப் பிரச்னைகளுக்காகச் சண்டையிட்டுக்கொள்வதுண்டு என்று கூறப்படுகிறது. வீணாவின் மற்றொரு மகன் நவீன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் தினமும் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து பேசுவது வழக்கம். வழக்கம்போல் அவர் … Read more

சனி உருவாக்கும் அசுப யோகம்! இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்.. நாளைய ராசிப்பலன்

டிசம்பர் 16 ஆம் திகதி தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த தனுசு ராசியில் ஜனவரி 14 வரை இருப்பார். இக்காலத்தில் சனி மகர ராசியில் பயணித்து வருவார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கிரக வரிசையில் இரண்டு மற்றும் 12 நிலையில் வருகிறார்கள். இதனால் அசுபயோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தவகையில் தற்போது நாளைய நாள் அசுப யோகப்பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே … Read more

சரத் பவாரை மிரட்டியவர் வாக்குமூலம் மனைவி ஓடிப்போனதே காரணமாம்!| Dinamalar

மும்பை,:தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டருடன் தன் மனைவி ஓடிப்போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்கட்சி தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்சரத்பவார் வீட்டை தொலைபேசி வாயிலாகதொடர்பு கொண்ட ஒருவர், அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தொலைபேசி அழைப்பு பீஹாரில் இருந்து வந்ததை கண்டுபிடித்த போலீசார், 46 வயது நபரை பாட்னாவில் கைது செய்தனர். … Read more

16.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 16 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தனது மகள் ஐஸ்வர்யா-வுடன் சென்று சுப்ரபாத தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் பிற்பகல் 11:45 மணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் சென்ற ரஜினிகாந்த்-தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்தார். இருவரும் அங்குள்ள அமீன் பீர் தர்கா-வுக்கு சென்று வழிபட்டனர். இதனை முடித்துக் … Read more

சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் 96-வது மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இசை திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெறுகிறது. மார்கழி இசை விழாவை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்கீத கலாநிதி விருதுகளையும் வழங்கினார்.

சிலிண்டர் வெடித்து குழந்தை பலி| Dinamalar

ஆக்ரா, உ.பி.,யின் ஆக்ரா அருகே உள்ள பெலோத் கிராமத்தில், ஒரு வீட்டின் சமையலறையில் காஸ் சிலிண்டரில் நேற்று முன் தினம் கசிவு ஏற்பட்டது. இதை அறியாமல், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்தார். அடுத்த வினாடியே சிலிண்டர் வெடித்து வீடு முழுதும் தீப்பற்றியது. வீட்டில் இருந்த அனைவரும் தப்பித்து வெளியே ஓடினர். ஆனால், உள்ளே ஒரு அறையில் ஆறு மாத பெண் குழந்தை தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தது. இதை மீட்க அந்தக் … Read more

மதுராந்தகம்: சேதமடைந்த அதிமுக கொடியை மாற்றும் முயற்சி; கொடிக்கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில்… சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அ.தி.மு.க-வின் 108 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். தற்போது, மாண்டஸ் புயலின் காரணமாக அந்த கம்பத்தில் இருந்த அ.தி.மு.க கொடி சேதமடைந்து காணப்பட்டுள்ளது.  மதுராந்தகத்தில் உள்ள அதிமுக கொடிக்கம்பம் `சாலையில் சரிந்த அ.தி.மு.க கொடிக்கம்பம்; தொடர்ந்து வந்த லாரி’ – … Read more

மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுராந்தகத்தில் 100 உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார்.