பல்கலை., செயல்பாட்டின் அரசு தலையீடு அதிகம்: கேரள கவர்னர்| Dinamalar

புதுடில்லி: பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டின் அரசாங்கம் அதிகமாக தலையிடுகிறது. அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறினார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகள் இன்று(நவ.,15) திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. இந்நிலையில், … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன?

T20 உலகக்கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான  போட்டியில் இந்தியா தோல்வியுற்றது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்குப் … Read more

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை:  அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில்  ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவரிடம் இந்த காசோலை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அசாமில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு உல்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கவுகாத்தி, அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று காலை ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, நேற்று காலை பயங்கரவாதிகள் பெங்கேரி-திக்பாய் சாலையில் (வனஞ்சல்) ராணுவ வாகனங்களை தாக்குதல் நடத்தினர். ராணுவ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ வீரர்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினர், அதன் பிறகு பயங்கரவாதிகள் சுற்றியுள்ள காடுகளில் பதுங்கியிருந்தனர். இருப்பினும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளது. தேடுதல் பணி இன்னும் … Read more

இந்திய மணமகனின் திருமணம்… புடவையில் வந்த நண்பர்கள்; வைரலாகும் வீடியோ!

திருமணங்களில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கவனத்தைப் பெறுவதில்லை. மாறாக மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றன. Marriage திருமணத்திற்குப் பின் கறாராக அக்ரிமென்ட் போட்டு வித்தியாசமான கண்டிஷன்களோடு திருமணங்கள் நடைபெறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிகாகோ மிச்சிகன் அவென்யூவில் நடைபெற்ற இந்திய ஜோடியின் திருமணத்தில், உடை சார்ந்த பாகுபாடுகளை உடைத்து அவர்களின் நண்பர்கள் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.   திருமணத்தின்போது, மணமகன் காத்திருக்க, அவரின் அந்நாட்டு நண்பர்கள் சேலை … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: நவம்பர் 15, 2022

இலங்கை மத்திய வங்கி இன்று (15-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,    அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 96 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 75 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபா 18 சதம் – விற்பனை பெறுமதி 438 ரூபா 85 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 97 சதம் – விற்பனை பெறுமதி 385 ரூபா … Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 1000 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கட்டுமான … Read more

பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் பேட்டி

சென்னை: பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரவேண்டும்; அல்லது உரிய இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தினார்.