ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு! பிரதமர் மோடி

பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு என வலியுறுத்தினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றார்.அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.  மேலும், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் … Read more

ஒரே ஆண்டில் தாய், தந்தை மரணம்! கதறி அழும் பிரபல நடிகரின் குடும்பத்தினர்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 80. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா, இவரது மகன் மகேஷ் பாபு. நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவரது மரணம் மகேஷ்பாபு குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. … Read more

கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : பெரிய கண்மாய், ஆர்.எஸ். மங்கலம் கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

"வீட்டுமனைதான் கேட்டேன், புது வீடே கிடைச்சுட்டு!"- கணவரை இழந்த பெண்ணை நெகிழ வைத்த கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள மேலமுனையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் மறைந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்திவரும் சித்ராவுக்கு, ஆதரவு தர யாரும் இல்லை. குடியிருக்கச் சொந்தமாக வீடும் இல்லை. இதனால் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள ஏதுவாக, அரசு இலவச வீட்டுமனை கேட்டு கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். இந்நிலையில், அவரது நிலைமையை உணர்ந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சித்ராவுக்கு இலவசமாக வீடு வழங்க … Read more

புடினின் மன்னிக்க முடியாத குற்றம் இது: ஐரோப்பிய ஒன்றியம் ஆத்திரம்

மில்லியன் கணக்கான மக்களை பட்டினிக்கு தள்ளும் விளாடிமிர் புடினின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என ஐரோப்பிய ஒன்றியம் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. போர் குற்றங்கள் உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியிருந்தாலும், 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்களை விளாடிமிர் புடினின் படைகள் நிகழ்த்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது. @reuters ஐரோப்பிய ஆணையம் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூர போர் 9 மாதங்களாக நீடிக்கும் நிலையில், உலகளாவிய … Read more

தமிழகஅரசு ‘வாகன பெர்மிட்’ கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு! ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் உயரும் அபாயம்…

சென்னை: தமிழகஅரசு வாகன பெர்மிட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ கட்டணங்கள்  மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகஅரசு வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே சொத்து வரி, கழிநீர் குடிநீர் வரி, மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகனப்பதிவு உள்பட பல்வேறு வரிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுக்கு வருமானம் உயர்ந்துள்ளது. … Read more

மழை கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி : மழை கால நிவாரணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மீண்டும் சைக்கிள், லேப்டாப்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு| Dinamalar

புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என குழந்தைகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி கூறினார். பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா நேற்று இ.சி.ஆர்.,ரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. தொடக்ககல்வி துணை இயக்குனர் பூபதி வரவேற்றார். செல்வகணபதி எம்.பி., வாழ்த்துரை வழங்கினார்.குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: … Read more

நெல்லை: கொலையானவர் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக தொடரும் போராட்டம்… பதற்றத்தில் மக்கள்!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார். அங்குள்ள சுடலைமாடசாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக மற்றொரு சமூகத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயில் பூசாரி சிதம்பரம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் மாயாண்டி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் … Read more

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா; பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது…

டெல்லி: மத்தியஅரசு, தேசிய விளையாட்டு விருதுகள் பெறுவோர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில்,  தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செஸ் வீரர் பிரக்ஞானந்தா, வில்வித்தை வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டு விளையாட்டு விரர்கள் 25 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. … Read more