கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்… கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம்

உக்ரைன் போர் இன்னமும் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது. ஒருபக்கம் நாடுகளின் தலைவர்கள் போரை நிறுத்துவது குறித்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள், ஆனால், உருப்படியாக எதுவும் நடந்ததுபோல் இல்லை. அதே நேரத்தில் இன்னொருபக்கம், சக மனிதர்கள் கொல்லப்படுவதையும், குடும்ப உறுப்பினர்களை இழந்து அவர்கள் தவிப்பதையும் பார்க்க சகிக்காமல், எதையாவது செய்யவேண்டும் என துடிக்கும் சில நல்ல மனிதர்கள், சாதாரண மக்கள், நடைமுறையில் களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகளும் கோரமாக கொல்லப்பட்ட கணவனும் உக்ரைன் மீது … Read more

குட்கா வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் அவகாசம்..

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இநத் வழக்கில் இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்க மத்திய, மாநிலஅரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, 2015ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த  தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை … Read more

ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் அளித்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் அளித்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல். 1996-ல் எல்.சி. ஜெயின், 97-ல் கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

6 ஆயிரம் நபர்கள்; 6 மணி நேரம்… 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு! திண்டுக்கல்லில் சாதனை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இடையகோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள்கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 117 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் மரகன்றுகளை நட உள்ளனர். இதற்காக, 6 ஆயிரம் பேரைக் கொண்டு 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான சாதனை முயற்சி … Read more

கத்தாரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் அசம்பாவிதம்

கத்தாரில் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்திலிருந்து விழுந்து பாதுகாப்பு காவலர் ஒருவர் உயிரிழந்ததார். சனிக்கிழமையன்று லுசைல் மைதானத்தில் ஜான் ஜாவ் கிபு (John Njau Kibue) எனும் பாதுகாப்பு காவலர் கீழே விழுந்ததாக கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை போட்டிகளை ஒருங்கிணைக்கும் உச்சக் குழு (Supreme Committee) தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார், ஆனால் செவ்வாய்க்கிழமை இறந்தார் என்று உச்சக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்தது. … Read more

அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை:  தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள  நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக … Read more

1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: 1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 1982ல் கன்னியாகுமரி மண்டைக்காடு மத கலவரத்தை போல் இனி நடக்காமல் இருக்க அரசாணை வெளியிடப்பட்டது.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா-வில் காரசார விவாதம்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொந்தளித்தது ஏன்?!

உலக அரங்கில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதையும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதையும் பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்தக் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னையை ‘பாகிஸ்தான் எழுப்பியது. அப்போது, ‘ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது’ என்று இந்தியா குற்றம்சாட்டியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பும் … Read more

மெட்ரோ ரயில் பணி: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, அதே பகுதியில்  15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதன்படி, கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை  அருகே மெட்ரோ ரயில் நிலையம், … Read more

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் 86 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் அஸ்வின் 58, ரிஷப் பண்ட் 46, குல்தீப் யாதவ் 40 ரன்களை எடுத்தனர்.