மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது.
சென்னை: தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பள்ளி மாணவி கர்ப்பம் 2 வாலிபர்கள் கைது உத்தர கன்னடா : பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய இரண்டு வாலிபர்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். உத்தர கன்னடா, கும்டா அருகே உள்ள கோனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகில், 21, இவரது நண்பர், ஹள்ளி கொப்பாவை சேர்ந்த முக்ரி, 20. இருவரும் கும்டாவில் தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சில மாதங்களுக்கு முன், ஆட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு … Read more
அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பிக்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடை விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 36,691 … Read more
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம் துவக்கப்பட்டுள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/11/f79vOLjziC9GrrDs.mp4 மைத்தில், உறவினர்களுடன் பேசும் போது, சிறை கம்பிகளுக்கு இருபக்கமும் பேசுவது ஒரே சத்தமாக இருப்பதால். தமிழகம் முழுவதும் தமிழக சிறைத்துறை சார்பில் இண்டர்காம் போன் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னை: கோவை, திருப்பூர், தேனி,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கானாவில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர், சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ‘வீடியோ’ எடுத்த புகாரில், போலீசார் அவர்களை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தெலுங்கானா, ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் ஒரு மாணவி நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கு சென்ற மாணவர்கள், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தை வீடியோ … Read more
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூப்பர் 16 சுற்றில் செனகல் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பிரித்தானிய நாடுகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் … Read more
ஜெனீவா: உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.38 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.52 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.