3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பெண்ணையாறு நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் – கர்நாடகா இடையே நிலவி வரும் பிரச்னையை தீர்த்து வைக்க பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மூன்று மாதத்தில் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகம் வழியே சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆற்றுக்கு தென்பெண்ணை ஆறு என்று பெயர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தி ஆகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, … Read more

ஸ்ரீசூக்த ஹோமம்: வைகுண்ட ஏகாதசியில் திருமகளைப் போற்றும் மாபெரும் வேள்வி! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள் வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் கருணை கொண்டவள் திருமகள். இவளை சரண் அடைந்தவருக்கு துன்பமே இல்லை. செந்தாமரையில் அமர்ந்து சங்கு சக்கரம் ஏந்திய … Read more

கவலைப்படாதே சகோதரா, நீ வரலாறு படைத்திருக்கிறாய்! உலகக்கோப்பை தோல்வியால் கதறிய எதிரணி வீரருக்கு Kylian Mbappe-வின் ஆறுதல்

கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்த மொராக்கோ வீரருக்கு, பிரான்ஸ் நட்சத்திர வீரர் Kylian Mbappe ஆறுதல் கூறி ட்வீட் செய்துள்ளார். பிரான்ஸ் வெற்றி AL Bayt மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. சாம்பியன் அணிகளை தோற்கடித்துவிட்டு அரையிறுதிக்கு வந்த மொராக்கோ, கோல் ஏதும் அடிக்காமல் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் வீரர்கள் மனமுடைந்தனர். கதறி அழுத ஹகிமி குறிப்பாக, மொராக்கோவின் நட்சத்திர வீரர் … Read more

சென்னை சேப்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 11 புதிய மின்பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  சேப்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 11 புதிய மின்பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மின் பகிர்மான கோட்ட அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்  திறந்து வைத்தார். அதன்படி சென்னையில் சேப்பாக்கம் மற்றும் பல்லாவரம் பகுதியில் கட்டப்பட்ட கோட்ட அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி,  உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலை அடுத்து இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க 90 சதவீத பணிகள் காந்தி சிலை … Read more

குமரி: செயலிழந்த கால்கள்; 80 வயது தாயை தனியாகத் தவிக்கவிட்ட மகன்… அறிவுரை வழங்கிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே 80-வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்திருக்கிறார். இது குறித்து திங்கர்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் காங்கிரஸ் நிர்வாகியான லாரன்ஸ் மற்றும் இளைஞர்களுடன் அங்கு சென்று மூதாட்டியை மீட்டு முதலுதவி செய்திருக்கின்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததுடன் இரணியல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். … Read more

305 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.8.38 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் 305 பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.8.38 கோடி நிதிஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் வெளியிட்டசெய்திக்குறிப்பில்,  சட்டப்பேரவையில், மானிய கோரிக்கையின் போது ‘‘ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணவர்கள் வசதியாக கல்விபயிலும் வகையில் 99 நடுநிலைப்பள்ளிகள் 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு … Read more

ஈரோட்டில் உரிய விலை கிடைக்காததால் 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேக்கம்

ஈரோடு : உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் பல ஆண்டுகளாக 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. உரிய விலையை எதிர்பார்த்த விவசாயிகள் 5 லட்சம் மூட்டைகளை இருப்பு வைத்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகரங்களை மதிப்பீடு செய்ய இணைய வழி கணக்கெடுப்பு| Dinamalar

புதுச்சேரி : இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களை மதிப்பீடு செய்வதற்கான இணைய வழி கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் எந்த அளவிற்கு உகந்தாக உள்ளது என்பதை மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நகர மக்களிடம் கேட்க முடிவு செய்து, அதற்கான கணக்கெடுப்பை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான இணைய வழி கணக்கெடுப்பு கடந்த 9 ம் தேதி … Read more