மாயமான மலேஷிய விமானம் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது திட்டமிட்டு விமானி மூழ்கடித்ததாக சந்தேகம்| Dinamalar

கோலாலம்பூர் :எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் எம்.எச்., – ௩௭௦ விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ௨௦௧௪ மார்ச் ௮ம் தேதி கடல் பகுதிக்கு மேல் பறந்த போது மாயமானது. இதில், ௨௩௯ பேர் இருந்தனர்; பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.மாயமான விமானத்தை தேடும் … Read more

புதுச்சேரி: `விதிமுறைகளைத் தளர்த்துங்கள்…' – மத்திய அமைச்சர் முன்பு குமுறிய முதல்வர் ரங்கசாமி

மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று அண்ணா சாலை தனியார் விடுதியில் நடந்தது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “சுற்றுலாவை மேம்படுத்த புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்திருக்கிறது. மேலும் நிதி வழங்கவும் ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதுவை சுற்றுலாவை மேம்படுத்தவேண்டிய சிறிய மாநிலம். சுற்றுலா வளர்ச்சியில் புதுவை … Read more

ராணுவ பெண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு…சிறப்பு தேர்வுக்குழு !| Dinamalar

புதுடில்லி’ராணுவத்தில், 246 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு தேர்வுக்குழு அமைக்கப்படும்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நம் ராணுவத்தில் பெண் அதிகாரிகள், குறுகிய காலப் பணியில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்தனர். இதனால், அவர்கள் அடுத்தடுத்த உயர் பதவிகளுக்கு செல்ல முடியாமல் இருந்தது. தங்களை குறுகிய காலப் பணியில் இருந்து நிரந்தரப் பணிக்கு மாற்றக் கோரி, சில பெண் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். … Read more

"ஸ்டாலின் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதால் அனைத்து வரிகளையும் ரத்துசெய்ய வேண்டும்!" – செல்லூர் ராஜூ

சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கண்டித்து மதுரை மாநகர அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜூ, “பல்வேறு கோரிக்கைகளைக் கூறிவிட்ட, அவற்றை நிறைவேற்றாத அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில்தான் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் தி.மு.க-வினர். மகளிருக்கு ஆயிரம் ரூபாய், காஸ் மானியம், கல்விக் … Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வரும்…. மிக மோசமான நெருக்கடி மேற்கத்திய நாடுகளை உலுக்கும்: பிரபலம் ஒருவரின் ஆருடம்

ரஷ்யாவின் புதிய ரஸ்புடின் என அழைக்கப்படும் நபர் உக்ரைன் போர் தொடர்பிலும் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகள் தொடர்பிலும் பீதியை ஏற்படுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு என்ன நடக்கும் ரஷ்யாவின் சமகால ரஸ்புடின் என அழைக்கப்படும் Ziraddin Rzayev என்பவர் துணிச்சலான பல கணிப்புகளை வெளியிட்டு வருபவர். அவர் தற்போது 2023ல் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஆருடம் வெளியிட்டுள்ளார். Image: Reqsane Ismayilova Vlog உக்ரைன் போர் தொடர்பில் குறிப்பிட்ட அவர், … Read more

14.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 14 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |

Daily Astro predictions for Mesham to Meenam by Srirangam Karthikeyan. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஐபிஎல் ஏலத்தில் 405 வீரர்கள்

2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் டிச.23ல் நடைபெற உள்ளது. 87 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 273 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 132 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்டோக்ஸ், கிரீன் உள்பட 19 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் முதல் தொழில்முறை நிலவு பயணம்|ஆப்கனில் நடந்த துப்பாக்கிச்சூடு – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ஊழல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதால் ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் ஈவா கைலியின் (Eva Kaili) அனைத்து சொத்துகளையும் கிரேக்க அதிகாரிகள் முடக்கினர். இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாக பிரிட்டன் வரவேற்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறினார். ஆப்கானிஸ்தானின் காபூலின் பிரபலமான ஷார்-இ-நாவ் பகுதியில் ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். கோவிட் தொற்றுக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தைக் … Read more

பிரித்தானியாவை அடுத்து…. சிறார் இறப்பு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு 16 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது இதன் தாக்கம் பல ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுவதாக பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 16 சிறார்கள் பிரான்சில் Strep A பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுவதாக முதன்முறையாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை 16 சிறார்கள் Strep A பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார … Read more

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு  நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.  வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் … Read more