உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு! அமைச்சர் பொன்முடி

சென்னை:  உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று கூறினார். … Read more

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பணிகளுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பணிகளுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தனியார் செயலி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் பணிகளுக்காக வசூலித்த ரூ.30 லட்சத்தை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. யூடிபர் கார்த்தி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஷ்ரத்தா தலையை எரித்தாரா அப்தாப்? புதிய தகவலால் போலீசார் கடும் குழப்பம்!| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை தொடர்பான வழக்கில் வெளியாகும் புதுப்புது தகவல்களால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். ஷ்ரத்தாவின் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, அவரது தலையை, காதலன் அப்தாப் எரிந்து விட்டதாக புது தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப் அமீன் புனேவாலா, 28. இவர், மும்பையில் பணியாற்றியபோது ஷ்ரத்தா, 26, என்ற பெண்ணை காதலித்தார்; ஷ்ரத்தாவும் அவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷ்ரத்தாவும், அப்தாபும் … Read more

விகடன் செய்தி எதிரொலி: உதவிய வாசகர்கள்; நனவானது சொந்த வீடு கனவு – நெகிழும் விழிச்சவால் வீராங்கனை!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வெள்ளிவாயல்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (26). விழிச்சவால் மாற்றுத்திறனாளியான இவர், தமிழகத்தின் முன்னணி `பாரா ஜூடோ’ வீராங்கனைகளுள் ஒருவர். மகேஸ்வரியின் தாய், தந்தை, தங்கை என அவர் குடும்பத்தில் அனைவருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள்தான். ரயிலில் தட்டுதடுமாறியபடி கடலை மிட்டாய் விற்றுவரும் மகேஸ்வரியின் தந்தை முருகனும், அவர் மனைவி சாமந்தியும், போராட்டக்களமான தங்கள் வாழ்க்கையில் இரு மகள்களையும் மூச்சைப் பிடித்தாவது கரையேற்றிவிடவேண்டும் என்பதில் மிகவும் தீர்க்கமாய் இருந்தனர். உடல்நலக் குறைபாடுகளும், பொருளாதார பின்னணியும் … Read more

ட்ரக் சாரதிகள் முதலான 16 வகை பணியாளர்களுக்கு கனடா வெளியிட்டுள்ள பெருமகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி

கனடா அரசு, இதற்கு முன் இருந்தது தவிர்த்து, மேலும் 16 புதிய வகை பணிகள் செய்வோர் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவதாக அறிவித்துள்ள விடயம் பலதரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கனடாவில் தொடர்ந்து சில துறைகளில் நிலவும் பணியாளர் தட்டுப்பாடு கனடாவில், மருத்துவத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்து முதலான துறைகளில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து திறமையுடைய பணியாளர்களை கனடாவுக்குக் கொண்டு வரும் வகையில், மேலும் 16 வகை பணியாளர்களை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி … Read more

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரிகள் உள்ளது. இந்த அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் கண்காணித்து வருகிறார். இந்த நிலையில், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான  கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் … Read more

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்படும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி தினகரனை சந்திப்பேன் எனவும் கூறினார்.

“தீவிரவாதத்தை வேரறுக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்" – டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி

டெல்லியில், இன்று மற்றும் நாளை என இரண்டு நாள்கள், `No Money for Terror’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. தீவிரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பிரதமர் மோடி மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்திய மோடி, “தீவிரவாதத்தின் இருண்ட முகத்தை இந்த உலகம் தீவிரமாகக் கவனிக்கும் முன்பே நம் நாடு சந்தித்துவிட்டது. தீவிரவாதம் என்பது, மனிதநேயம், சுதந்திரம் மற்றும் நாகரித்தின் மீதான தாக்குதல். … Read more

பிரித்தானிய மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை: யார் யார் தகுதியானவர்கள்?

விலைவாசி உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார். 900 பவுண்டுகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அவரது சிறப்பு அறிக்கையில் இந்த உதவித்தொகை தொடர்பில் விரிவான தகவலை குறிப்பிட்டிருந்தார். @Skynews விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு 650 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் … Read more