23.10.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 23 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் 'எல்விஎம்-3' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை. வர்த்தகரீதியாக முதல் முறையாக இந்திய ராக்கெட் அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. குறைந்த உயர … Read more

Doctor Vikatan: குளிர்ச்சியான இடத்துக்குச் சென்றால் தலைவலி; விசித்திரமான பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகிவிடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாகத் தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா? – Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து… பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன். … Read more

தீபாவளிக்கு ருசியான அதிரசம் செய்வது எப்படி? டிப்ஸ் தரும் கரூர் ஸ்பெஷல் அதிரசக் கடைக்காரர்!

தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு குழப்பத்தில் இருப்பாங்க நம்ம குடும்பத் தலைவிகள். வீட்டுல முறுக்கு, லட்டு, மிக்சர்னு செஞ்சாலும், தீபாவளிக்குன்னு ஸ்பெஷலா கடைகள்ல வாங்குற ஸ்வீட்டுகளுக்குத் தனி மரியாதைதான்! இந்தச் சூழலில், கரூரில் கோவை சாலை, வடிவேல் நகர் பேருந்து நிறுத்தத்தில் 10 வருடங்களாக இயங்கிவரும் `கரூர் ஸ்பெஷல் அதிரசம் கடை’க்கு ஒரு பகல் பொழுதில் சென்றிருந்தோம். இந்தக் கடையை நடத்திவரும் ஜெகதீசன், வாடிக்கையாளர்களை கவனிப்பதில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த சில நிமிட இடைவேளையில் நம்முடன் … Read more

சென்னை மாநகராட்சி சொத்து வரி… Advance ஆக மாறிவிட்டது…

சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நம்ம சென்னை ஆப், பேடிஎம், QR code என பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது. 2022 – 23 இரண்டாம் அரையாண்டுக்கான (அக்டோபர் ’22 – மார்ச் ’23) சொத்து வரி நவம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் அதற்குப் பின் கட்டுபவர்கள் 2 சதவீதம் அபராதத்துடன் கட்ட நேரிடும் என்று அறிவித்துள்ளது. முதல் அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30 க்குள் கட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது … Read more

டெங்கு நோயாளிக்கு ஜூஸ் நரம்பில் செலுத்தியதால் மரணம்| Dinamalar

லக்னோ உத்தர பிரதேசத்தில் ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை நரம்பு வழியாக செலுத்தியதால் அவர் மரணம் அடைந்தார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் நகரில் பிரதீப் பாண்டே, 32, என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பாண்டேவுக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, … Read more

"பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஊழல் வேண்டாமே !" முதல்வருக்கு கோரிக்கை!

“2023 – பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களைக்  கொள்முதல் செய்திட அரசாணை வெளியிட வலியுறுத்தியும், வெளிமாநில வணிகக் கொள்முதலை கைவிட கோரியும், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார் விவசாயிகள் சங்க தலைவரான சுவாமிமலை விமலநாதன். சுவாமிமலை விமலநாதன் இதுபற்றி சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம். “தமிழ்நாட்டிலுள்ள சுமார் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ‘பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு’ இலவச வேட்டி மற்றும் புடவைகள் கொள்முதல் செய்திட தமிழ்நாடு துணி … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! 5 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 24 ஆம் தேதி புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று … Read more

அக்னி பிரைம் ஏவுகணை 3வது சோதனை வெற்றி| Dinamalar

புதுடில்லி, அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, மேம்படுத்தப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணையின் மூன்றாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அக்னி ஏவுகணையில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 1,000 – 2,000 கி.மீ., துாரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி பிரைம் ஏவுகணையின் முதல் சோதனை, கடந்தாண்டு ஜூனில் நடந்தது. … Read more

வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி, பாதுகாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. காப்புக் காடுகள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி உள்ளே நுழையும் நபர்கள் மது அருந்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற வனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது. காடு தேனியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு… ஓ.பி.எஸ் மகனுக்கு வனத்துறை சம்மன்! இந்த நிலையில், ஊட்டி எச்.பி.எஃப் அருகில் உள்ள காப்புக் … Read more