சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹார்டுவேர் கடை தீ விபத்து

சென்னை: சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹார்டுவேர் கடையில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள், இரும்பு கம்பிகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது… உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நம்பிக்கை

உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்பு உள்ளது, அது உரிய நேரத்தில் வெளிப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உலக அமைதிக்கான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மேக்ரான், உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்பு உள்ளது, அது உரிய … Read more

அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

அயோத்தி: அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தீப உற்சவ விழாவில் நேற்று 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு களித்தனர். அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த புதிய சாதனையை அடைய முக்கியப் பங்கு வகித்தனர். பிரதமர் மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 … Read more

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தயார் நிலையில் 6,700 தீயணைப்பு வீரர்கள்

சென்னை: தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய வார்டுகளில் கூடுதல் படுக்கைகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சீனாவை மொத்தமாக ஆளவிருக்கும் ஜி ஜின்பிங் மற்றும் அந்த 6 பேர்: வெளிவரும் முழு பின்னணி

ஜி ஜின்பிங் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், முறைப்படி ஜனாதிபதியாகவும் அறிவிக்கப்பட்டார். ஜி ஜின்பிங் தலைமையில் 6 பேர்கள் கொண்ட உயர்மட்ட அமைப்பு இனி சீனாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.  சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையும் தெரிவாகியுள்ள ஜி ஜின்பிங், தமது குழுவில் முக்கிய ஆறு நபர்களை தெரிவு செய்து அறிவித்துள்ளார். சீனாவின் எதிர்காலத்தை இந்த 7 பேர்கள் கொண்ட குழுவே இனி முடிவு செய்வதுடன், முன்னெடுத்து செல்லவும் உள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம் திகதி தொடங்கிய சீன … Read more

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, கடவுளை வழிபட்டு தங்களது பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம், தீபாவளிவரைவிடப்பட்டிருந்த விடுமுறை நாளையும் (செவ்வாய் கிழமை) நீடிக்குமா என்ற கேள்வியும், தீபாவளிக்கு மறுநாளே பள்ளிகள் திறந்தால் மாணவர், மாணவிகள் சிரமப்படுவார்கள். எனவே அன்றைய தினம் விடுமுறை … Read more

அக் -24 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானியாவில் மொத்த குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்… சிறுவனின் புகைப்படம் வெளியானது

மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் கேரேஜில் இருந்து மதில் சுவற் மொத்தமாக சரிந்து சிறுவன் மீதும் அவரது தந்தை மீதும் விழுந்ததில் பரிதாமாக கொல்லப்பட்டுள்ளார். கிளாக்டன் பகுதியிலேயே வெள்ளிக்கிழமை இரவு குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 12 வயதேயான Scott-Swaley Daniel Stevens என்ற சிறுவன் உடல் நசுங்கி பலியாகியுள்ளார். Image: Adam Gerrard  இந்த … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,582,759 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,582,759 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 632,888,728 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,703,505 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,528 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெருப்பு கோளமான ரஷ்ய விமானம்… தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்த திகில் நிமிடங்கள்

தலை கீழாக பாய்ந்து விபத்தில் சிக்குவதும், நெருப்பு கோளமாக மாறுவதும் மக்கள் பதிவு செய்துள்ளனர். 5.47 மணிக்கு புறப்பட்ட விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது ரஷ்ய போர் விமானம் ஒன்று, நடுவானில் நெருப்பு கோளமாக மாறி, தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த சம்பவத்தில் விமானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சோதனை ஓட்டம் முன்னெடுத்த இரு விமானிகளுக்கும் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Irkutsk நகரில் … Read more