வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியா: பிரதமர் பெருமிதம்| Dinamalar

பெங்களூரு: வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 25வது தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று (நவ.,16) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது: கடந்த 2015ல் உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2021ம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் … Read more

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு: அப்தாப் பிடிபட்டது எப்படி? பரபரப்பு தகவல்

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது26). இவர் மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்து வந்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற வாலிபருடன் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஷ்ரத்தா பெற்றோரை பிரிந்து வசாய் பகுதியில் காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர் டெல்லி சென்று … Read more

கனமழையால் சீர்குலைந்த சீர்காழி; நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கிய எடப்பாடி பழனிசாமி!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கனமழையால்  பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (16.11.2022) பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உப்பனாறு, புதுமண்ணியாறு போன்றவற்றில் ஏற்பட்ட கரைகள் உடைப்பால் , ஏராளமான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் … Read more

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ட்ரம்ப்: அவரை எதிர்த்து போட்டியிடும் சொந்த கட்சியில் 8 பேர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக சொந்த கட்சியில் 8 பேர் களமிறங்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் 2024ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாக இன்னும் மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தாம் மீண்டும் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். @AP சிறப்பு விருந்தினர்கள், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் … Read more

60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை அமைய இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்த நிலையில், அதை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்,  தமிழகத்தின் ஓசூர் அருகில் பிரம்மாண்ட ஆலை அமையவுள்ள தாகவும், இதன் மூலம் 60,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், இது தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம் என … Read more

 கடலோர பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலோர பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் நெட்டுக்குப்பம் -எர்ணாவூர் வரையுள்ள கடலோரப் பகுதிகளில் ஏராளமான உயிரிழப்புகள் ஏறுபடுவதாக சமூக ஆர்வலர் கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துளளார். அதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் மாயம்: பாஜக கடத்தி விட்டதாக மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு

காந்திநகர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், சூரத் (கிழக்கு) தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு இருந்த கஞ்சல் ஜரிவாலை பாஜக கடத்தி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வேட்பு மனுவை … Read more

சம்பா பயிர்க் கடன் வழங்குவதில் தாமதம்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கான பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு தேவையான நடைமுறை செலவுகளை சமாளிக்க, வங்கிகளில் பயிர் கடன் பெறுவதில் தாமதம் நிலவுவதாக இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். பயிர் கடன் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்காக விவசாயிகள், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை தஞ்சாவூரில் … Read more

உங்களுக்கு தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாய்படுத்துதா? இதனை நொடியில் போக்க சில டிப்ஸ் இதோ!

பொதுவாக காலநிலை மாற்றத்தால் பலருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஏற்படுவது வழக்கம். மழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வோட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றது. அதிலும் தொண்டையில் சளி கட்டிக்கொண்டால் இது நம்மை பாடாய்படுத்தும். இதனை ஒரு சில எளியவழிகள் மூலம் போக்க முடியும் தற்போது அவற்றை பார்ப்போம்.   ஒரு கிளாஸ் தண்ணீரை 5 நிமிடங்கள் சூடாக்கி … Read more

ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

சென்னை: ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில வன உயிரின வாரியம் கூட்டத்தில் உரையாற்றிய  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாநில வன உயிரின வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.16ம்) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காடுகள் இன்றி நீர்வளம் சிறக்காது! நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது! எனவே, வளமான எதிர்காலத்திற்கு காடுகள் … Read more