உக்ரைன் போர் முடிவுக்கு வரும்…. மிக மோசமான நெருக்கடி மேற்கத்திய நாடுகளை உலுக்கும்: பிரபலம் ஒருவரின் ஆருடம்

ரஷ்யாவின் புதிய ரஸ்புடின் என அழைக்கப்படும் நபர் உக்ரைன் போர் தொடர்பிலும் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகள் தொடர்பிலும் பீதியை ஏற்படுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு என்ன நடக்கும் ரஷ்யாவின் சமகால ரஸ்புடின் என அழைக்கப்படும் Ziraddin Rzayev என்பவர் துணிச்சலான பல கணிப்புகளை வெளியிட்டு வருபவர். அவர் தற்போது 2023ல் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஆருடம் வெளியிட்டுள்ளார். Image: Reqsane Ismayilova Vlog உக்ரைன் போர் தொடர்பில் குறிப்பிட்ட அவர், … Read more

14.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 14 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |

Daily Astro predictions for Mesham to Meenam by Srirangam Karthikeyan. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஐபிஎல் ஏலத்தில் 405 வீரர்கள்

2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் டிச.23ல் நடைபெற உள்ளது. 87 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 273 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 132 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்டோக்ஸ், கிரீன் உள்பட 19 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் முதல் தொழில்முறை நிலவு பயணம்|ஆப்கனில் நடந்த துப்பாக்கிச்சூடு – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ஊழல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதால் ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் ஈவா கைலியின் (Eva Kaili) அனைத்து சொத்துகளையும் கிரேக்க அதிகாரிகள் முடக்கினர். இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாக பிரிட்டன் வரவேற்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறினார். ஆப்கானிஸ்தானின் காபூலின் பிரபலமான ஷார்-இ-நாவ் பகுதியில் ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். கோவிட் தொற்றுக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தைக் … Read more

பிரித்தானியாவை அடுத்து…. சிறார் இறப்பு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு 16 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது இதன் தாக்கம் பல ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுவதாக பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 16 சிறார்கள் பிரான்சில் Strep A பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுவதாக முதன்முறையாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை 16 சிறார்கள் Strep A பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார … Read more

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு  நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.  வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்து 62.533 புள்ளிகளானது. வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் அதிகரித்து 18,608 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

அர்செனல் கால்பந்து கிளப்பை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி..?

புதுடெல்லி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி. இவர் இங்கிலாந்தின் ,உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக அண்மையில் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிள்ப்புகளில் ஒன்றான அர்செனல் (Arsenal) கிளப்பை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல கால்பந்து கிளப்பான லிவர்பூல் எஃப்சியை வாங்க … Read more

கோல்டு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்; எலான் மஸ்க்கின் திட்டம்தான் என்ன?

எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் ப்ளு டிக் சந்தா முறை பரபரப்பைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது ‘கோல்டு’, ‘கிரே’ கலர்களில் வெரிஃபை டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். இதில் ‘கோல்டு டிக்’ தனியார் நிறுவனங்களுக்கும், ‘கிரே டிக்’ அரசின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கும், ‘ப்ளு டிக்’ ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோல்டு, ப்ளு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்குகள் இந்தப் புதிய … Read more

இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்று உள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே … Read more