தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை; தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகற்புற பகுதிகளி உள்பட கிராமப்புறங்களில் அரசு நூலகங்கள் செயல்பட்ட வருகின்றன. சுமார்   4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் பல ஆண்டுகள் பழமையானது மட்டுமின்றி  பழுதடைந்து காணப்படுகிறது. இதை பழுதுபார்த்து புதுப்பிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம்

சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அலட்சிய போக்கினால் வீராங்கனை இறந்துள்ளார் என்று அறிக்கை அளிக்குமாறு கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.92,198 விலையில் பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் பைக் அறிமுகம்

பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொடக்க நிலை பல்சர் 125 பைக்கில் கார்பன் ஃபைபர் எடிசன் என்ற பெயரில் சிறிய அளவில் கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பல்சர் 125 கார்பன் எடிசன் பைக் மாடல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரண்டிலும் கிடைக்கிறது. மேலும் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. சிங்கிள் சீட் மாடல் விலை ரூ.92,198 … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெயரில் போலி வெப்சைட்; தனி கால்சென்டர் – 1,000 பேரிடம் மோசடி செய்த கும்பல்!

நாடு முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிற நிலையில், ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால் அந்த ஸ்கூட்டர் அடிக்கடி தீப்பிடித்து எரிவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மக்களிடம் மோகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மோகத்தை பயன்படுத்தி பொதுமக்களை ஒரு கும்பல் ஏமாற்றி இருக்கிறது. பீகாரை சேர்ந்த … Read more

ஒரே ஆண்டில் தாய், தந்தை மரணம்! கதறி அழும் பிரபல நடிகரின் குடும்பத்தினர்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 80. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா, இவரது மகன் மகேஷ் பாபு. நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவரது மரணம் மகேஷ்பாபு குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. … Read more

ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு! பிரதமர் மோடி

பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு என வலியுறுத்தினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றார்.அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.  மேலும், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் … Read more

கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : பெரிய கண்மாய், ஆர்.எஸ். மங்கலம் கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

"வீட்டுமனைதான் கேட்டேன், புது வீடே கிடைச்சுட்டு!"- கணவரை இழந்த பெண்ணை நெகிழ வைத்த கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள மேலமுனையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் மறைந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்திவரும் சித்ராவுக்கு, ஆதரவு தர யாரும் இல்லை. குடியிருக்கச் சொந்தமாக வீடும் இல்லை. இதனால் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள ஏதுவாக, அரசு இலவச வீட்டுமனை கேட்டு கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். இந்நிலையில், அவரது நிலைமையை உணர்ந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சித்ராவுக்கு இலவசமாக வீடு வழங்க … Read more

புடினின் மன்னிக்க முடியாத குற்றம் இது: ஐரோப்பிய ஒன்றியம் ஆத்திரம்

மில்லியன் கணக்கான மக்களை பட்டினிக்கு தள்ளும் விளாடிமிர் புடினின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என ஐரோப்பிய ஒன்றியம் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. போர் குற்றங்கள் உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியிருந்தாலும், 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்களை விளாடிமிர் புடினின் படைகள் நிகழ்த்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது. @reuters ஐரோப்பிய ஆணையம் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூர போர் 9 மாதங்களாக நீடிக்கும் நிலையில், உலகளாவிய … Read more

தமிழகஅரசு ‘வாகன பெர்மிட்’ கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு! ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் உயரும் அபாயம்…

சென்னை: தமிழகஅரசு வாகன பெர்மிட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ கட்டணங்கள்  மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகஅரசு வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே சொத்து வரி, கழிநீர் குடிநீர் வரி, மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகனப்பதிவு உள்பட பல்வேறு வரிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுக்கு வருமானம் உயர்ந்துள்ளது. … Read more