இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பெட்ரோல் உள்ளிட்டவை பறிமுதல்

மண்டபம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான 850 கிலோ மஞ்சள், 200 லி. பெட்ரோல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மனைவியை அடித்து, உதைத்து வீடியோ வெளியிட்டவர் கைது| Dinamalar

திருவனந்தபுரம் :வேலைக்கு போகக் கூடாது எனக் கூறி, மனைவியை கடுமையாக தாக்கி, அதை ‘வீடியோ’ எடுத்து வெளியிட்டவரை, கேரள போலீசார் கைது செய்தனர். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்திலீப், 27. இவர், தன் இளம் மனைவியை முகத்தில் ரத்தம் வடியும் வகையில் கடுமையாக தாக்கி, அதை வீடியோ எடுத்து, தன் நண்பர்களுக்கு பகிர்ந்தார். அந்த வீடியோவில் திலீப் கூறியிருந்ததாவது: என் மனைவியின் முகத்தில் ரத்தம் வடிவதற்கு காரணம் நான் தான். வேலைக்கு செல்ல வேண்டாம் என பலமுறை கூறியும், … Read more

நான்கு முறை திவால்… பீனிக்ஸ் பறவை போல மீண்டுவந்து வெற்றி கண்ட பிசினஸ்மேன்… #திருப்புமுனை – 34

அரசு வேலை பெறவேண்டும் எனில் இப்போதும் போட்டி நடக்கத்தான் செய்கிறது. ஆனால், 1962-ம் ஆண்டில் அம்மா சொன்னார் என்பதற்காக அரசு வேலையை விட்டுவிட்டு, தொழிலுக்கு வந்தார் பவர்லால் ஜெயின். ஜெயின் இரிகேஷன் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, எப்படி இவ்வளவு பெரிய சாம்ராயத்தை உருவாக்கினார் என்று பார்ப்போம். பவர்லால் ஜெயின் முகேஷ் அம்பானிக்கே கடும் போட்டியைத் தந்த கில்லாடி பிசினஸ்மேன்…! திருப்புமுனை-32 மகாராஷ்டிராவில் ஜெயின் சமூகத்தில் பிறந்த இவர்களின் பூர்வீகம் ராஜஸ்தான். அங்கிருந்து 1800-களின் இறுதியில் இவர்களின் குடும்பம் … Read more

லிஸ் ட்ரஸை கேலி செய்த ஐரிஷ் விமான நிறுவனம்!

அயர்லாந்தின் Ryanair விமான நிறுவனம் லிஸ் ட்ரஸை கடுமையாக கேலி செய்துள்ளது. 45 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் மிகக் குறுகிய கால பிரதமர் ஆனார். பிரதமர் பதிவிலிருந்து ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸை அயர்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவனம் ஓன்று கடுமையாக கேலி செய்துள்ளது. பிரித்தானியாவின் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததை அடுத்து, நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஐரிஷ் விமான நிறுவனமான Ryanair, அவரது … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.  

வழக்கு போட்டவரின் மனு டிஸ்மிஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலகத்தின் குழப்பமான பிரச்னையை தீர்க்க என்னால் முடியும். எனவே, என்னை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது போன்ற மனுக்களை எதிர்காலத்தில் அனுமதிக்க வேண்டாம் என பதிவாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட என்னை அனுமதிக்கவில்லை. தான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், … Read more

பணப் பரிவர்த்தனையில் சென்னை சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு ஆர்.பி.ஐ அங்கீகாரம்…!

சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் செலுத்த உதவும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் தந்திருக்கிறது. ஸ்டார்ட் அப்… `புதிய ஐடியாக்களுக்கு ₹10 லட்சம் ஆதார நிதி!’- ஸ்டார்ட் அப் எண்ணிக்கையை உயர்த்துமா அரசு திட்டங்கள்? சென்னையைச் சார்ந்த ‘பேசிஸ்பே’ என்ற தொழில் நிறுவனத்தின்கீழ் உள்ள ‘டைக்கி சொலுஷன்ஸ் (பி) லிட்’ செப்டம்பர் 22 முதல் ‘கட்டணம் திரட்டுவோராக பணிபுரியும்’ அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. … Read more

விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் நேரில் சந்திப்பார்கள்: துருக்கி தலைவர் தகவல்

ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும். உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நீடிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் … Read more

சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை

சென்னை: சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மந்தைவெளியில் இருந்து ஆர்.கே. மடம் சாலையை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

புவனேஸ்வர்: நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் ஏவு தளத்தில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை தாக்கி அழித்தது. அக்னி ஏவுகணை வரிசையில் இந்த அக்னி – பிரைம் ஏவுகணை புதிய தலைமுறையை சேர்ந்ததுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆயிரம் முதல் 2 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.இதே போன்று அக்னி பிரைம் … Read more