19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

துபாய்: 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை 2024ம் ஆண்டு இலங்கையிலும், 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே & நமிபியா நாட்டில் நடக்கின்றன. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை 2025ம் ஆண்டு மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்கதேசம் & நேபாளில் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி,மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைக்கிறது; மெகபூபா முப்தி

ஸ்ரீநகர், நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கிராம் பகுதியில் செய்தியாளா்கள் சந்தித்த மெகபூபா முப்தி கூறியதாவது; தோ்தல் ஆணையம் பாஜகவின் பிரிவாக மாறியுள்ளது. நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனப் பெருமை உடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்குப் பாஜகவால் சீா்குலைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாஜக சட்டத்தை மீறினாலும், … Read more

மன்னர் மீது முட்டை வீசியவருக்கு நூதன தண்டனை|Ouija Board விளையாடிய குழந்தைகள் மயங்கி விழுந்தனரா?

24 மணி நேரத்தில் 78 (Pubs) பப்களுக்குச் சென்று, ஆஸ்திரேலிய இளைஞர் டி-வில்லியர்ஸ் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் நாதன் 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 67 பப்களுக்குச் சென்றிருந்தார். கொலம்பியாவில் Ouija Board விளையாடிய 11 குழந்தைகள் பள்ளியில் மயங்கி விழுந்தனர். இருப்பினும், இது Food Poison காரணமாகத்தான் என்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. குளிர்பான பிராண்டான பெப்சி-யின் பெயரில் ட்விட்டரில் இருந்த ஃபேக் அக்கவுன்ட்டில், `கோக் சிறந்தது’ எனப் பதிவிடப்பட்டது … Read more

எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயார் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் … Read more

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 138 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயத்துள்ளது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

திருமணம் நடந்த கையோடு மனைவியை வேறொருவருக்கு விற்ற கணவர் கைது!

புவனேஷ்வர், ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (வயது 25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்தவுடன் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு நபருக்கு கீரா பெருக் பூர்ணிமாவை கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் பணத்திற்காக விற்றுள்ளார். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். நவம்பர் … Read more

கொட்டும் மழையில் பிரசவ வலி – பழங்குடிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகிய பெண் குழந்தை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள சீலியூர் நீலாம்பதி என்கிற பழங்குடி  கிராமத்தைச் சேர்ந்தவர் மருதன் (30). மழை திருமணம் செய்ய குருவாயூருக்கு 150 கி.மீ. சைக்கிள் பயணம்; வைரலான கோவை ஐ.டி இளைஞர்! கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஏற்கெனவே ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தை … Read more

மழைவெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விடிய, விடிய பெய்த கனமழையின் காரணமாக சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் … Read more

வெள்ளப்பெருக்கு காரணமாக குளம் மற்றும் அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல்: வெள்ளப்பெருக்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆறுகளைக் கடக்க வேண்டாம். குளம் மற்றும் அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் விசாகன் வேண்டுகோள் விடுத்தார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும்.