`ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ஹக் ஜாக்மேன்- காரணம் இதுதான்!

ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான  நடிகர் ஹக் ஜாக்மேன். எக்ஸ் மென், தி பிரஸ்டீஜ்’, தி  வோல்வரின் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். அவர் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக நிறைய சர்வதேச அங்கீகாரத்தையும்  பெற்றுள்ளார். தற்போது அவரது நடிப்பில் `டெட்பூல் 3’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில்  `ஜேம்ஸ் பாண்ட்’  கதாபாத்திரத்தில்  நடிக்க வந்த வாய்ப்பை தான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் தற்போது எக்ஸ்-மென் படங்களில் வோல்வரின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஹக் ஜாக்மேன் … Read more

நீ விரும்பினால் இளவரசியான பிறகும் சினிமாவில் நடிக்கலாம் என்று மேகனிடம் கூறிய ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்…

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் மொத்த ராஜகுடும்பத்தையும் அவமதித்தார். ஆனால், ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் ஒருவர், நீ விரும்பினால் இளவரசியான பிறகும் நடிக்கலாம் என்று கூட மேகனிடம் கூறினாராம். அந்த உறுப்பினர் வேறு யாருமில்லை, சாட்சாத் மகாராணியாரேதான்! ராஜ குடும்பம் குறித்து வெளிவரும் புதிய தகவல்கள் Gyles Brandreth, Elizabeth: An Intimate Portrait என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. … Read more

சென்னையில் 2 கட்டங்களாக நடைபெற்ற 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாமில் 66ஆயிரம் பேர் விண்ணப்பம்…

சென்னை: நவம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்ற 4 நாட்கள் வாக்காளர் முகாமில், சுமார் 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. புதிதாக பெயர்களை சேர்க்க கோரி மட்டும் 42,707 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே  வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிதாக வாக்காளர் … Read more

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். விஷவாயு தாக்கியதில் மணிகண்டன் (35), ஐயப்பன் (36) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கேரளா: வளர்ப்பு நாயின் கண்களைப் பறித்த மர்ம நபர்கள்… கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு!

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி முதுதலையைச் சேர்ந்தவர் துர்கா மாலதி. ஆசிரியராகவும், ஓவியராகவும் இருக்கும் துர்கா மாலதி தன்னுடைய வீட்டில் `நக்கு’ என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். அந்த நாயின் இரண்டு கண்களையும் யாரோ சிலர் நோண்டி எடுத்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், கண் தெரியாமல் அவஸ்தைப்படும் நாய்க்கு துர்கா மாலதி சிகிச்சை அளித்துவருகிறார். துர்கா மாலதி, தன்னுடைய செல்ல பிராணிக்கு கொடுஞ்செயல் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

மனைவியின் முகத்தில் திராவகத்தை வீசிய கணவன்! பின்னர் நேர்ந்த சோகம்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு தகராறு ஏற்பட்டதில், மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது. வரதட்சணை கேட்டு தகராறு ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் கான். இவர் தனது மனைவி ஹினா பர்வீனுடன் அதேபகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தனக்கு இருசக்கர வாகனம் தேவை என மனைவியிடம் கூறிய அமீர் கான், அதற்காக 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனாரிடம் இருந்து வாங்கி வரும்படி கேட்டுள்ளார். ஆனால் … Read more

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத் இ-இஸ்லாமியின் ரூ.90 கோடி சொத்து பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 முக்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில் தடை செய்யப்பட்ட குழு ஜமாத்-இ-இஸ்லாமி மீது,  மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஜமாத்தின் சுமார் 200 சொத்துக்களை அடையாளம் காணப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ₹ 90 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. … Read more

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

“உதயநிதி அமைச்சரானால், தமிழ்நாட்டை சிங்கப்பூராக மாற்றிடுவார்!" – சீமான்

கடந்த 2017-ம் ஆண்டு சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அவரின் பேச்சு இருந்ததால், அவர்மீது அஸ்தம்பட்டி காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருந்தனர். இந்த வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு முடியும் நிலையில் இருப்பதால், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சேலம் நீதிமன்றத்தில் … Read more

நடிகர் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமாவுக்கு இனிதே நடைபெற்ற திருமணம்! புகைப்படங்கள்

நடிகர் கெளதம் கார்த்திகும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் மூத்த தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்த நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள் காதல் ஏற்பட்டது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என சமீபத்தில் அறிவித்தனர். Happy married life @mohan_manjima and … Read more