அதிபயங்கர மாண்டஸ் புயல்… என்ன நடக்க போகிறது?தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை மாண்டஸ் புயல் அதிபயங்கரமாக தாக்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று வீசும் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் மாண்டஸ் புயலானது, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியுள்ளது. அதிதீவிர புயலாக உருவெடுத்து இருக்கும் இந்த மாண்டஸ் புயல் … Read more

சோனியாகாந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு  இன்று பிறந்தநாள். அதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிறந்தநாளை தனது மகன் ராகுல்காந்தியுடன் கொண்டாட சோனியா ராஜஸ்தான் சென்றுள்ளார். இதன் காரணமாக இன்று ராகுல் நடை பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  சோனியா காந்திக்கு பிரதமர் மோடி … Read more

சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார்.

14,000 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்… காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

தெலங்கானாவின் சைபராபாத் காவல்துறைக்கு, ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சைபராபாத் காவல்துறை, மற்ற சிறப்பு அதிரடி குழு மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனை வேட்டையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கினறன. அதில், செல்போன் அடிப்படையிலான அப்ளிகேஷன்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அணுகியுள்ளனர். அவர்களிடம், ஆன்லைன் மூலமே பணத்தை பெற்று, குறிப்பிட்ட பெண்ணிடம் நிர்வாண வீடியோ கால் செய்யத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், … Read more

தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால்,  செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோர மக்ககள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக … Read more

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை: தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, மதுரை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சேரன்மகாதேவியில் திட்டம் தொடங்கப்பட்டது.

நிச்சயத்திற்குப் பிறகு ஏற்பட்ட விபத்து; ரத்தான திருமணம்; அதே பெண்ணைக் காதலித்து மணம் செய்த இளைஞர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மகாவீர் சிங். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரீன்லபா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமண தேதியை முடிவு செய்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரீன்பலா தனது தோழிகளுடன் மரத்திற்கு கீழே விளையாடிக்கொண்டிருந்த போது மரம் ஒடிந்து விழுந்ததில் ரீன்பலா இடுப்புக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருமணம் என்னவாகுமோ … Read more

மாண்டஸ் புயல்: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்…

சென்னை: மாண்டல் புயல் காரணமாக  உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே  கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . தற்போது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரை … Read more

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.1.97 லட்சம் கள்ள நோட்டுடன் சர்வதேச கும்பல் புதுடில்லியில் கைது| Dinamalar

புதுடில்லி : நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு வினியோகத்தில் ஈடுபட்டு வந்த சர்வதேச மோசடி கும்பலை சேர்ந்த இருவரை புதுடில்லி சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். புதுடில்லியின் ஆன்ந்த் விஹார் ரயில் நிலையத்தில் வைத்து, மாபியா கதுான், 35, என்ற பெண்ணையும், முனிஷ் அகமது, 57, என்பவரையும் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 500 ரூபாய் … Read more