சூட்கேசில் மனைவி உடலை வைத்துச் சென்றவர் கைது| Dinamalar

குருகிராம் : மனைவியை கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து தெருவில் வீசிச் சென்றவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘இப்கோ சவுக்’ என்ற இடத்தில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் இருந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோவில் வந்த ஒருவர், இந்த சூட்கேசை வீசிச் சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் நடத்திய … Read more

Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியமா?

Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டியதன் அவசியம் என்ன? அவசியம் தடவ வேண்டும் என்றால் எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். கீதா அஷோக் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது என்பது அவசியமானதுதான். அந்தக் காலத்தில் தலை முதல், பாதம் வரை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பார்கள். நல்லெண்ணெய் சன் ஸ்கிரீனாகவும் வேலை செய்யும். வாரம் முழுவதும் வெயிலில் அலைவதால் சூரியக் கதிர்கள் நம் சருமத்திலும் கூந்தலிலும் பாதிப்புகளை … Read more

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும்  11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 மணி நிலவரம்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக … Read more

தீபாவளி நன்னாளில் தரிசிக்கவேண்டிய கோயில்கள்; நடைபெறும் பூஜைகள்!

தீபாவளி என்றதுமே காசியும் கங்கையும்தான் நம் நினைவுக்கு வரும். காசிப் புண்ணியத்தைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் கோயில்கள் நம் தமிழகத்திலும் உண்டு. மகாலட்சுமிக்குச் சீர்வரிசை, குபேர யோகம் தரும் சிவாலயம், கங்கைக்கு அருளிய தட்சிணா மூர்த்தி தரிசனம், கேதார நோன்பு தரிசனம் என தீபாவளியில் சிறப்புப் பெறும் ஆலயங்கள் அவை. தீபாவளி ரங்கநாதருக்கு ஜாலி அலங்காரம்! திருவரங்கம் ரங்கநாதப் பெருமாள் தீபாவளித் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். தீபாவளி அன்று பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, … Read more

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

மயிலாடுதுறை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நிற்காமல் சென்றதால் சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் மயிலாடுதுறை மீனவர் படுகாயம் அடைந்தார்.

“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது" – டி.டி.வி.தினகரன் காட்டம்

“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போன்று உள்ளது. இதனை சி.பி.ஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இதில் அரசியல் இருக்கிறது” என தஞ்சாவூரில் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் டி.டி,.வி.தினகரன் அ.ம.மு.க-வின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ராஜ்மோகன் மறைவையொட்டி தஞ்சாவூரில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், “சட்டமன்றத்தில் எதையும் முடிவு செய்கிற அதிகாரம் … Read more

கருத்துக்கணிப்புகளில் மீண்டும் முந்தும் ரிஷி சுனக்: பிரதமர் கனவு நிறைவேறுமா?

தவறான பொருளாதார கொள்கைகளுக்கு லிஸ் ட்ரஸ் மன்னிப்புக் கோரியதுடன் ராஜினாமா முடிவையும் அறிவித்துள்ளார்.   நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் புதிய பிரதமராக தெரிவு பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் கருத்துக்கணிப்புகளில் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 44 நாட்கள் மட்டுமே பிரதமராக பொறுப்பு வகித்த லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய நிதிநிலை அறிக்கையில் … Read more

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழந்தனர். நிவேதா என்பவரை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. நிவேதா, அவரது வயிற்றில் இருந்த சிசு, உடன் சென்றா தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு கிடங்கில் விபத்து ம.பி.,யில் 4 பேர் பலி| Dinamalar

போபால் :மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொரினா மாவட்டத்தில் உள்ள பான்மோரில் பட்டாசு சேமிப்பு கிடங்கு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், இங்கு ஏராளமான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இங்கு நேற்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த … Read more

நட்சத்திரப் பலன்கள்: அக்டோபர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link