ப்ரின்ஸ் விமர்சனம்: இங்கிலாந்து பொண்ணு – தமிழ்நாட்டுப் பையன் காதல்; ஆனா பிரச்னை என்னன்னா..?!

கடலூர் இளைஞன் இங்கிலாந்து பெண்ணைக் காதலிக்க, அதை ஊரே எதிர்க்க, சோதனைகளைக் கடந்து அந்த இளைஞன் `ப்ரின்ஸ்’ ஆனாரா என்பதே படத்தின் ஒன்லைன். பள்ளி வாத்தியாராக வந்தாலும், வழக்கம்போல பொறுப்பில்லாத இளைஞன் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். தான் வேலை பார்க்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வரும் மரியாவைப் பார்த்தவுடன் காதல். சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜுக்கு ஆங்கிலேயர்கள் என்றால் ஆகாது, அதேபோல, மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே ஆகாது. இதற்கு நடுவில் இவர்களின் காதலைப் பிரிக்க பிரேம்ஜி தலைமையில் ஊரே … Read more

3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் கனடா!

கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா இந்த நிதியாண்டில் அதாவது 2022-2023 ஆம் ஆண்டில் 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல்களின்படி, மார்ச் 31, 2023-க்குள் IRCC மொத்தம் 285,000 முடிவுகளையும் (decisions), 300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஆர்சிசியின் செயல்பாடுகள், திட்டமிடல் மற்றும் செயல்திறன் பிரிவு ஒரு மூத்த … Read more

சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார்…

சென்னை: சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.நகரில் காமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையட்டி, சென்னையில், வியாபார ஸ்தலங்களான தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட சந்தை பகுதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதன் காரணமாக வெளிமாநில திருடர்கள் சென்னையில் புகுந்து திருட்டு, பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறும். மேலும்  மக்கள் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஏற்கனவே 4 போலீசார், 3 வட்டாசியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 … Read more

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள்; அறிமுகம் முதல் திருமணம் வரை அசரவைக்கும் ஆலியா பட் கிராஃப்!

பாலிவுட் நடிகை ஆலியா பட், திரையுலகில் கால் தடம் பதித்து 10 வருடங்கள் ஆகியுள்ளன. இது தொடர்பாக தனது சமூகவலைதளங்களில் அவர், “இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த இடம் கிடைக்கப்பெற்றதற்கு, ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும்! இன்னும் மேன்மேலும் சிறப்பாக செயல்படவும் – ஆழமாக எதிர்காலம் பற்றி கனவு காணவும், உழைக்கவும் செய்வேன். இத்தனை நாள்களாக என்னைச் சுற்றி நிகழ்ந்த எல்லா அதிசயங்களுக்கும் நன்றி. அன்பு, அன்பு மற்றும் அன்பு மட்டுமே!” என்றுள்ளார் ஆலியா. ரன்பீர் … Read more

தீபாவளி பண்டிகையை பொது பள்ளி விடுமுறையாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

நியூயார்க் நகரில் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி பொது விடுமுறை. தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு விழாவை பொது பள்ளி விடுமுறை நாளில் இருந்து நீக்கிய நியூயார்க்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி(DIWALI) பண்டிகை நாள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் இந்து மதத்தினரின் கொண்டாட்டமான தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகர பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக … Read more

மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கி சூடு: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையினரின் எச்சரிக்கையை மீறியதால், துப்பாக்கி நடத்தியதாக கடலோர காவல்படை விளக்கம் அளித்த நிலையில்,  துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தமிழக அரசு நிதி உதவி அறிவித்து உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

பரங்கிமலை ரயில் நிலையம் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என்று சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் – 9498142494 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

வெறுப்பு பேச்சுகள் கவலையளிக்கின்றன: உச்சநீதிமன்றம் வேதனை| Dinamalar

புதுடில்லி: ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை தன்மை கொண்ட நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஷாகீன் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இது 21ம் நூற்றாண்டு. மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கின்றன என தெரிவித்த நீதிபதிகள், அத்தகைய குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடங்கிய … Read more