புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அடுத்தநாளான 26ந்தேதி பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் வரும் 24ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பணி நிமித்தமாக நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன் காரணமாக, பண்டிகையை முடித்துவிட்டு திரும்பும் வகையில், தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற … Read more

நடிகை மீரா மிதுணை காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார்

சென்னை: நடிகை மீரா  மிதுணை காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனின் தாய் புகார் தெரிவித்திட்டுள்ளார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவரை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் அவரது தாயார் புகார் தெரிவித்துள்ளார்.

ம.பியில் பஸ்சும், லாரியும் மோதி விபத்து: 14 பேர் பலி| Dinamalar

ரேவா: மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பகுதி அருகே சென்று கொண்டிருந்த பஸ்சும், அதேபகுதியில் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேவா: மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பகுதி அருகே சென்று கொண்டிருந்த பஸ்சும், அதேபகுதியில் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் … Read more

சனி மகாபிரதோஷம்: இன்று கட்டாயம் வழிபாடு செய்யவேண்டிய ராசிக்காரர்கள் மற்றும் வழிபடும் முறை!

பிரதோஷங்களில் சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமை வரும் பிரதோஷம். அதனால்தான் அதை சனிமகாபிரதோஷம் என்று அழைக்கிறோம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினம். எனவே சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி திதிக்கு மகாபிரதோஷம் என்ற பெயர் உண்டானது. பெயரில் மட்டுமல்ல வழிபடுபவர்களுக்கு வரங்கள் அருள்வதிலும் சனிக்கிழமை பிரதோஷம் மகாபிரதோஷம் தான். சிவபெருமான் பொதுவாக பிரதோஷ நாளின் பிரதோஷ வேளையில் அதாவது … Read more

தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது. கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார். ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, … Read more

மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படை மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

உ.பி., கூட்டு பலாத்கார விவகாரம் பொய் புகார் என போலீஸ் விளக்கம்| Dinamalar

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், பொய் புகார் அளித்து நாடகம் ஆடுவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். உத்தர பிரதேசம் காஜியாபாத் ஆஷ்ரம் சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் ஒரு பெண் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சென்று அந்தப் பெண்ணை மீட்டு, முதலுதவிக்குப் பின், புதுடில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சித்ரவதை புதுடில்லியில் வசிக்கும் 36 வயதான அந்தப் பெண் சமீபத்தில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் வசிக்கும் சகோதரர் … Read more

'அரசியல், பொருளாதார சிக்கல்' – திணறும் பிரிட்டன் அரசு!

பிரிட்டன் பிரதமராகக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் போரிஸ் ஜான்சன் இருந்து வந்தார். ஆரம்பக் காலத்தில், முந்தைய பிரிட்டன் பிரதமர்களான கேவிட் கேமரூன், தேசரா மே ஆகியோரால் செய்ய முடியாத சில விஷயங்களை, போரிஸ் ஜான்சன் செய்து விட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதனால் தொடக்கத்தில் அவருக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. போரிஸ் ஜான்சன் நாளடைவில் அவரின் ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாகக் கொரோனா உச்சத்திலிருந்த சமயத்தில் பிரிட்டனில் ‘லாக்டெளன்’ அறிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை வென்று வென்றுள்ளார். இதுமட்டுமின்றி சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சிறப்பு பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கங்களை வென்று அசத்திய இந்திய சிறுமி

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை பெற்று இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார் அசத்தியுள்ளார். மேலும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு பட்டத்தையும் சிறுமி சார்வி அனில்குமார் பெற்றுள்ளார்.