கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க 'மாஸ்டர் பிளான்' போடும் கேட்! அமெரிக்காவில் தனிப்பட்ட சந்திப்பு

இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியம் டிசம்பரில் அமெரிக்கா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசி டயானாவும், ராணி இரண்டாம் எலிசபெத்தும் அதைத்தான் விரும்பியிருப்பார்கள் என்பது கேட்டுக்கு தெரியும். பிரித்தானிய அரச குடும்பத்தையும், இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் சகோதரர்களையும் மீண்டும் இணைக்க இளவரசி கேட் மிகப்பாரிய திட்டத்தை வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸ் இளவரசி கேட், தனது கணவர் இளவரசர் வில்லியம் மற்றும் மைத்துனர் இளவரசர் ஹரிக்கு இடையே உள்ள இடைவெளியை உடைக்க ஆவலுடன் இருப்பதாக … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

பெர்த்: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பேட்டிங்கில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் சாம் கரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

லஞ்சம் கேட்ட பெண் ஊழியர் ஆடியோ, வீடியோவால் பரபரப்பு| Dinamalar

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் தாசில்தார் அலுவலக தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் ‘ஆடியோ, வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், பட்டா பெயர் மாற்றம், பட்டா பெறுதல் போன்ற பணிகளுக்கு, ‘செட்டில்மென்ட்’ தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் விண்ணப்பிக்கின்றனர். அவர்களிடம் சொத்துக்களின் அளவுகளை பொறுத்து, 5,௦௦௦ ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது என, நீண்ட காலமாகவே புகார் உள்ளது. செட்டில்மென்ட் தாசில்தார் மற்றும் சர்வேயர் … Read more

தீபாவளியன்று அலுவலகம், புதுக்கணக்கு, பஞ்சாபி வீடுகளில் விளக்கு; இது டெல்லி தீபாவளி!

டெல்லியில் காற்று மாசுபாடு சில ஆண்டுகளாகவே கடுமையாக உள்ளது. அது மக்களிடம் தீவிர ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அங்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடையை அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு. பட்டாசு உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்லி மக்கள் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். காற்றை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்தியதால் டெல்லி … Read more

கனடாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் கைத்துப்பாக்கி விற்பனைக்கு தடை! ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

கனடாவின் துப்பாக்கி கொலை விகிதம் பல பணக்கார நாடுகளை விட அதிகமாக உள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத மிகவும் பலமான துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. சமீபத்திய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அனைத்து கைத்துப்பாக்கி விற்பனையையும் கனடா தடை செய்கிறது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் துப்பாக்கி வன்முறையை சமாளிக்க கைத்துப்பாக்கிகளை விற்கவோ, வாங்கவோ அல்லது மாற்றவோ தடை விதித்துள்ளார். கைத்துப்பாக்கி இறக்குமதியை தடை செய்யும் முந்தைய முயற்சிகளின் அடிப்படையில் … Read more

சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஜியோ நிறுவனம்…

மும்பை: ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி  5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டகமாக டெல்லி சென்னை உள்பட பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  தமிழகத்தில்  ஏர்டல் நிறுவனம்  5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ 5ஜி சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது. … Read more

மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அணுகு சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பெரியம்மாவின் புறம்பேச்சு, அக்காவின் பொறாமை; காயப்படுத்துபவர்களை கையாள்வது எப்படி? #PennDiary88

எங்களுடையது மிகவும் ஏழ்மையான கிராமத்து குடும்பம். நான், தம்பி என வீட்டில் இரண்டு பிள்ளைகள். நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கல்லூரியில் படிக்கவைக்க வீட்டில் பொருளாதார வசதி இல்லை. எனவே, நகரத்தில் இருந்த பெரியம்மாவிடம் என் அம்மா, தங்கள் பெற்றோரது பூர்விக வீட்டில் தனது பங்கையும் அவரையே எடுத்துக்கொள்ளச் சொல்லியும், பதிலுக்கு என்னை அவர்கள் வீட்டில் தங்கவைத்து, கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தை கட்டும்படியும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே, நான் பெரியம்மா வீட்டில் தங்கி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். … Read more

மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5.93 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மும்பை பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.

ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்: 10 பேர் கைது| Dinamalar

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 23 வயது டெங்கு நோயாளிக்கு டிரிப்ஸ்சில் பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் போலி பிளேட்லெட் கடத்தி விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள … Read more