மீனம்: `பணம் வரும் வழி இதுதான்' – ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலிருந்து விலகி, 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். அதேபோல், கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் நின்று பலன் தரப்போகிறார். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், பிணிப்பாதிப்புகள் விலகி, தேகம் பொலிவு பெறும்; சந்தோஷம் மலரும். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகு பகவான் உங்கள் ராசியிலிருந்து விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் … Read more

கோடையை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோவை தெற்கு ரயில்வே கோடை  காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு  ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை – ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06063) வருகிற மே மாதம் 02, 09, 16 மற்றும் 23, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த யில் கோவையில் இருந்து (வெள்ளிக்கிழமை) காலை 11.50 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்- … Read more

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' – என்னென்ன தெரியுமா?

‘சென்னை vs பஞ்சாப்!’ சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்பு இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றிகரமாக தோற்று சென்னை அணி அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? தோனி முறையாக ஃபினிஷ் ஆகாத பேட்டிங்! கடந்த போட்டிகளைவிட இந்தப் போட்டியில் சென்னையின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. சாம் கரண் … Read more

திருநெல்வேலி எல்லைக்குள் நிழைய இருவருக்கு தடை விதித்த காவல்துறை ஆணையர்

திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது. திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த … Read more

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' – பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது. இதில் சில பெண்கள் தொடர்ந்து பாலியல் தொழிலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொழில் வசதிக்காக குற்றப் பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருந்துள்ளனர். இதனால் பல குற்றச்சம்பவங்களும் நடந்து வந்துள்ளன. இந்த நிலையில், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் மற்றும் வல்லம் டிஎஸ்பி உத்தரவின் பேரில் … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைப்பு

டெல்லி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/ பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய … Read more

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக நவிமும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில் நவிமும்பை நெரூல் பகுதியில் வீட்டு மாடியில் போதைப்பொருள் பரிவர்த்தனை நடக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கஞ்சா இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டு … Read more

கர்நாடக முதல்வர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மைதானத்தில் ஒருநபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். க ற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் … Read more

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.  இந்நிலையில், நாசர் அலி தன்னுடைய நண்பர் வேலுமணி என்பவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகனைத் தனியாக திருவெறும்பூர் அருகே அழைத்துச் சென்று அந்த சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி வாயில் மது … Read more

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு

டெல்லி ஊழல் தடுப்பு  பிரிவினர்  டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின் முதலமைச்சராக ரேகா குப்தா செயலாற்றி வருகிறார். முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவடையாதது, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆலோசகர் மற்றும் கட்டிடக் கலைஞர் நியமிக்கப்பட்டதால் … Read more