இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,037- ஆக உள்ளதுகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,84,646- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் … Read more

`கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?’… `தகவல்கள் இல்லை’ – ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்

அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, எப்போது தொடங்கும் என தெரியாது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் சமீபகாலமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்பது காமெடியாகி வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பூர்வாங்கப்பணிகள் முடிந்து விட்டதாக கடந்த மாதம் … Read more

பள்ளி வாகனங்களில் இருபுறமும் கேமரா கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: பள்ளி வாகனங்களின் முன்புறம், பின்புறம் ஆகிய இருபுறமும் கேமரா பொருத்தப்பட வேண்டும், இது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் சிக்கிமாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் பள்ளி சிறார்கள் பலியாவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. அதன் ஒருபகுதியாக. பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த … Read more

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்ட விடுதி மற்றும் நூலக கட்டடங்களை காணொலியில் முதலமைச்சர் திறந்து வைத்தார். மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

உத்தரகாண்ட் : கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு செல்கிறார். மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் அவர் , பத்ரிநாத் கோயிலில் தரிசனம் … Read more

போலி கிளினிக்: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு – உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கிளியனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். இவரின் 5 வயது மகள், கிளியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் இச்சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, தைலாபுரம் அருகே உள்ள ஈச்சங்காடு சாலையில் தனியார் கிளினிக் நடத்தி வரும் கணேசன் என்பவரிடம் சிகிச்சை பெறுவதற்காக தன் குழந்தையை 18.09.2022 அன்று மாலை 6 மணிக்கு அழைத்துச் சென்றுள்ளார் சுகுமார். அங்கு சிகிச்சை … Read more

தங்கநகையுடன் மாயமான புது மனைவி! நடந்தது என்ன?

சென்னை தாம்பரத்தின் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி அபிநயா, நடராஜனை விட மூன்று வயது மூத்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், இருவரும் வேலைக்கு சென்றுவந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். சம்பவதினத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார், வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். நடராஜனும் சிறிய வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, அபிநயாவை காணவில்லை. வீட்டில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்துள்ளது, … Read more

காவலர் வீரவணக்க நாள்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: நாடு முழுவதும் இன்று காவலர் வீரவணக்கா நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை  டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார். பணியின்போது வீரமணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஆண்டுதோறும் அக்டோபர் 21ந்தேதி “காவலர் வீரவணக்க நாள்” அனுசரிக்கப்படுகிறது.  இதையடுத்து சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்த்நது,. தமிழகத்தின் மற்ற … Read more

மின்சார கட்டணம் தொடர்பாக செல் போனுக்கு வரும் குறுந்தகவல் குறித்து டிஜிபி எச்சரிக்கை

சென்னை: மின்சார கட்டணம் என்ற பெயரில்  குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுந்தகவல் வந்தால் நம்பவேண்டாம் என டிஜிபி கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதி காட்டும் திமுக அரசு… எதிர்ப்புகள் கூடுமா… குறையுமா?!

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தைக் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமைக்க முடிவு செய்து, அதற்கான திட்டப்பணிகளை மேற்கொண்டுவருகிறது தமிழ்நாடு அரசு. இந்தத் திட்டத்துக்காக, பரந்தூர், ஏகனாபுரம், மேலேரி, வளத்தூர்,நெல்வாய் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 4,971 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால், அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். அரசு கையகப்படுத்தவிருக்கும் நிலத்தில் சுமார் 2,600 ஏக்கர் நஞ்சை நிலம். `நாங்கள் கால்நடை வளர்ப்பையும், விவசாயத்தையும் நம்பியிருக்கிறோம். இங்கு … Read more