செப்.21: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தள்ளாடிய முதல்வர்: விரைவில் விசாரணை| Dinamalar

புதுடில்லி:பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான், குடித்து விட்டு விமானத்தில் ஏறியதாக தகவல் வெளியானதை அடுத்து, ”இந்த சம்பவம் வெளிநாட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கப்படும்,” என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறிஉள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமீபத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றார். பயணத்தை முடித்து, பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் பகவந்த் மான், ‘லுப்தான்சா’ விமானத்தில் ஏறி உள்ளார்.தாமதம்அப்போது கால்கள் தள்ளாட, … Read more

ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சி: பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதல்

ஜெய்பூர், ராஜஸ்தானில் கால்நடைகளுக்கு ஒருவித தோல் நோய் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர். போராட்ட குழுவினர் நேற்று காலையில் தங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபையை நோக்கி வந்தனர். அவர்களை பைஸ் குடோன் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்ட குழுவினர் போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டசபையை நோக்கி முன்னேற முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்.. இதை செய்தால் 1% கூடுதல் கட்டணம்

உலகின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..! … Read more

ஶ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்

ஶ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவிலை, நன்னிலம் – குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. நன்னிலம் – கும்பகோணம் சாலையில் அச்சுதமங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1 கிலோ மீட்டர்  சென்றால் இத்தலத்தை அடையலாம். ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி … Read more

தனது காதலியுடன் சுற்றித்திரிந்ததால் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்; முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தனது காதலியுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பவன் (வயது 23) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பவன், இளம்பெண்ணிடம் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண், அந்தோனி … Read more

தேர்தல் நோக்கத்தில் செயல்படாதீர்கள்மேயர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை| Dinamalar

காந்தி நகர், :”தேர்தல் வெற்றி என்ற நோக்கத்துடனே இல்லாமல், நகரங்களின் வளர்ச்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும்,” என, பா.ஜ., ஆளும் மாநக ராட்சி மேயர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.பா.ஜ., ஆளும் மாநக ராட்சி மேயர்கள் கூட்டம், குஜராத்தின் காந்திநகரில் நடக்கிறது. இதில், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 118 மேயர்கள்மற்றும் துணை மேயர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி … Read more

சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அந்த மசோதாவில் மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறாமல் இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கர்நாடக சரக்கு-சேவை வரி சட்டத்திருத்த மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தினத்தந்தி Related Tags : பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா

காதலியின் நிர்வாண படத்தை பகிர்ந்த டாக்டர் அடித்துக் கொலை| Dinamalar

பெங்களூரு, காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்த 27 வயதான டாக்டரை, அவரதுகாதலியே அடித்து கொன்ற சம்பவம் பெங்களூரில் அரங்கேறி உள்ளது.கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் விகாஸ் ராஜன், 27, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு ஒப்புதல் கர்நாடகாவின் பெங்களூரில் புது வேலை கிடைத்ததும் அங்கு குடிபெயர்ந்தார். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிறுவனத்திலும் பணியாற்றினார். … Read more

மகாராணியின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்ற மேக்ரான்: கேலி செய்யும் இணையம்…

பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில் ஊர் சுற்றிப்பார்க்க முடிவெடுத்த மேக்ரான், கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கருப்புக் கண்ணாடி அணிந்துவிட்டால் தன்னை யாருக்கும் தெரியாது என்ற அவரது புத்திசாலித்தனத்தைக் கண்டு விழுண்டு விழுந்து சிரிக்கிறது இணையம். பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில், ஊர் சுற்றிப்பார்க்க முடிவெடுத்த பிரான்ஸ் ஜனாதிபதியை கேலியும் கிண்டலும் செய்கிறது இணையம். மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக உலகத் தலைவர்கள் பலர் பிரித்தானியாவுக்கு வந்திருந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி லண்டனை சுற்றிப்பார்க்க … Read more