தெலுங்கானாவில் அரசு தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களிடம் தாலியை கழற்ற வைத்ததால் சர்ச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதாரபாத்: தெலுங்கானாவில் அரசுத்தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுத வந்த பெண் தேர்வர்களிடம் தாலி, கொலுசு, தோடு ஆகியவற்றை அகற்றச்சொல்லி கட்டாயப் படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில அரசுப்பணி காலியிடங்களுக்கு அம்மாநில அரசு தேர்வாணையத்தின் சார்பில் குரூப் -1 தேர்வு கடந்த 16-ம் தேதி மாநிலம் முழுதும் தேர்வு நடந்தது.இதில் அடிலாபாத் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களை போலீஸ் அதிகாரிகள் சோதனை … Read more

“ஏசி ஹால், சாப்பாடு வேண்டாம்..!" – ராஜரத்தினம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி

ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் அறிக்கை என பரபரப்பாக இருந்த தமிழக அரசியல் களத்தை, அதிமுக-வின் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போட்டம் திசைமாற்றியிருக்கிறது. அதிமுக-வினர் கைதைத் தொடர்ந்து, அந்தக் கட்சித் தொண்டர்களின் படையெடுப்பு, அரசியல் தலைவர்கள் சந்திப்பு என சென்னை ராஜரத்தினம் மைதானம் அதிமுக-வினரின் பொதுக்கூட்ட மைதானம் போலக் காட்சியளித்தது. கூடுதலாக, “அரசியல் ரீதியாக தனக்கு நெருக்கடியாக இருக்கவேண்டிய ஒரு நாளை, மிகச் சாமர்த்தயமாக தனக்குச் சாதகமான ஒரு நாளாக மாற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி” எனக் குதூகலிக்கிறார்கள் அவரின் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவிப்பு

உக்ரைனை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததுடன் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறங்கின. ரஷ்யா உடனான சுமூக உறவை முறித்துக்கொண்டதை அடுத்து அந்நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கியதுடன் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உக்ரைனில் இருந்து … Read more

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் கட்டத்தில் பொறுப்பை ஏற்றுள்ளார் கார்கே என குறிப்பிட்டுள்ளார்.

Ballon d'Or: “இவ்விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”- கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா!

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது Ballon d’Or விருது. பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் வருடா வருடம் வழங்கப்படும். இதற்கு முன் இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர். இந்த ஆண்டிற்கான (2022) Ballon d’Or விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்காக பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா போன்ற 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதை பிரான்ஸ் … Read more

பிரித்தானியாவில் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை: 40 ஆண்டு கால உச்சத்தில் பணவீக்கம்

பிரித்தானிய பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு மற்றும் மது அல்லாத பானங்களில் விலைகள் 14.5 சதவீகிதம் வரை உயர்வு.  பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI )ஆண்டு அடிப்படையில் 10.1 சதவீகிதமாக அதிகரித்துள்ளது, அத்துடன் இந்த விலை குறியீடு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீகிதமாக இருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தனது அறிக்கை … Read more

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் விடுவிப்பு

சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான எடப்பாடி பழனிசாமி விடுவிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்க யோசனை மைசூரு பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க| Dinamalar

மைசூரு : ”கலாச்சாரம், பாரம்பரிய நகரமாக மைசூரு திகழ்கிறது. உலகின் துாய்மையான, பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக மைசூரு உள்ளது. ஆனால், நகரின் பாரம்பரிய கட்டடங்கள் முறையாக பராமரிப்பின்றி, பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்க, ஒவ்வொரு பட்ஜெட்டிலும், அரசு நிதி ஒதுக்க வேண்டும்,” என மைசூரு பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ரங்கராஜு தெரிவித்தார். தொடர் மழை, அதிகாரிகளின் அலட்சியத்தால், மைசூரு அரண்மனை கோட்டை காம்பவுண்டு சுவர் நேற்று காலை திடீரென இடிந்து … Read more

“முடிந்தால் பிரதமருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்யுங்கள்!" – மணீஷ் சிசோடியா காட்டம்

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகளால் அவர் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க-வில் சேருமாறு சி.பி.ஐ அழுத்தம் கொடுத்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருந்தார். பாஜக இந்த நிலையில் மேற்கு தில்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா,”சிசோடியா நேர்மையான தலைவராக இருந்தால் அவர் … Read more

எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை: இணைக்கப்பட்ட நகரங்களில் புடின் விதித்துள்ள புதிய சட்டம்

இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் புடின் இராணுவச் சட்டத்தை அறிவித்தார். எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என ரஷ்யா விளக்கம். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் நடவடிக்கையில் உச்சக்கட்டமாக  Donetsk, Luhansk மக்கள் குடியரசுகள், Zaporizhzhia மற்றும் Kherson ஆகிய  நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்தார். இதற்கு உக்ரைன் … Read more