திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. ஆடிப்போன தைவான்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

International oi-Yogeshwaran Moorthi தைபே: தைவானின் யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்சர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதால், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானின் யுஜிங்கில் இருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், சாலைகள் குலுங்கியுள்ளன. … Read more

ரஷ்யா வேண்டாம் வெளியேறிய நைக்-க்கு நன்றி.. .உக்ரேனிய அதிபர் உருக்கம்.. ஏன்?

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகின்றது. சுமார் 7 மாதங்களாக நடந்து வரும் இந்த தாக்குதல் இதுவரையில் முடிவுக்கு வந்த பாடாகவும் இல்லை. உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பின் வாங்காமல் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ஆரம்பத்தில் இருந்த பல மேற்கத்திய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் எதற்கும் ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை. ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் … Read more

ஆ.ராசாவைக் கண்டித்து போஸ்டர்; தடுத்த காவல் ஆய்வாளரைத் தாக்கிய பாஜக-வினர்! – என்ன நடந்தது?

தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியிருப்பது பல அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் ஆ.ராசா மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி போலீஸில் புகாரளித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வருகிறார்கள். அந்த வகையில், ஆ.ராசாவைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில்  பழைய பேருந்து  நிலையம் அருகே  இந்து முன்னணி அமைப்பினர் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். … Read more

குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொய்யான ஊழல் புகார்களை சுமத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1ல் இருந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விதிகள் மாற்றம்.. வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்?

அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக கார்டு டோக்கனைசேஷன் முறை நடைமுறை படுத்தப்படவுள்ளது. இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வங்கித் துறையில் என்ன தான் வங்கிகள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும், ஆங்காங்கே பிரச்சனைகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றன. கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை … Read more

“இந்தியாவின் அடையாளம் அவர்; நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும்!" – சீமான்

இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அம்பேத்கருக்கு முன்பே சமூக நீதிக்காக, சமத்துவ சமூகத்திற்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவுக்கு வெளியே காந்தியும், அம்பேத்கரும்தான் நமக்கான அடையாளங்கள். அதனால் மத்திய அரசு கட்டிவரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை சூட்டவேண்டும். அம்பேத்கர் தென்காசியில் நடந்த தீண்டாமை … Read more

சென்னை லாட்ஜ்களில் போலீஸ் அதிரடி சோதனை

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் அதிரடியாக செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தார். அதன்படி, களத்தில் இறங்கிய போலீசார் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான … Read more

சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவு

பஞ்சாப்: சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பல்கலை. விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

WFH குறித்து ராஜஸ்தான் அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்.. யாருக்கு பலன்..!

ஜெய்ப்பூர்: கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக நிறுவனங்கள் பலவும் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சனை ஊழியர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்களும் இந்த ஆப்சனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும் வந்தது. சொல்லப்போனால் நிறுவனங்களின் இந்த திட்டத்தினால் பெண்களின் பங்களிப்பு என்பது கணிசமாக அதிகரித்தது எனலாம். WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு … Read more

“உதயநிதியிடம் திரைப்படம் குறித்து பேசும்போது, இதையும் பேசுங்கள்!" – கமலுக்கு வானதி அட்வைஸ்

கோவை ராமலிங்க காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், வானதி சீனிவாசன் “இடது, வலது என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆசியாவின் முதல் மையக் கருத்தாளன் நான்தான்!” – கமல் “தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்க்கான காரணத்தைத் தடுக்காமல், தற்காலிக நடவடிக்கையைக் அரசு செய்து வருகிறது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. … Read more