T20 World Cup: ஆச்சர்யத்துடன் தொடங்கிய உலகக்கோப்பை; இலங்கை அணியை காலி செய்த நமீபியா!

உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கிறது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பான முதல் சுற்றின் முதல் போட்டியில் இன்று இலங்கையும் நமீபியாவும் மோதியிருந்தன. அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் போட்டியிலேயே அப்செட் நிகழ்ந்தது. நமீபியா அணி இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இலங்கை அணியின் கேப்டனான தசுன் சனாகாதான் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 163 ரன்களை சேர்த்தது. தொடக்கத்தில் நமீபிய அணி அத்தனை சிறப்பாக ஆடவில்லை. … Read more

ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்- 11 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். ரஷ்யா – உக்ரைன் போர் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ராணுவ பயிற்சி தளத்தில் பயங்கவராத தாக்குதல் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் புரிவதற்காக ரஷ்ய வீரர்கள் அந்நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தில் பயிற்சி செய்து வந்த நிலையில், இரு பயங்கரவாதிகள் இந்த பயிற்சி மையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 15 … Read more

தங்கம் கடத்த உதவிய ஏர் இந்தியா ஊழியர் கைது

சென்னை: சென்னை வந்த தங்கக் கடத்தல்காரர் சுங்க சோதனையில் இருந்து தப்ப உதவிய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் தங்கத்தைக் கடத்த ஏர் இந்தியா ஊழியர் உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கப்பசை இருந்த கைப்பை சிக்கியது.

உங்களில் ஒருவன்: “பாஜக-வுடன் திமுக சமரசமாகிவிட்டதா?" – ஸ்டாலின் சொல்வதென்ன?

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உங்களில் ஒருவன் எனும் கேள்வி பதில் நிகழ்வு மூலம், மக்களின் பொதுவான கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார். உங்களில் ஒருவன்! மக்களின் கேள்விகளும், ஸ்டாலினின் பதில்களும்! 1. ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன? மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை! நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கின்ற சவால்! ஸ்டாலின் 2. 24 மணி நேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதற்கேற்ப உடலையும், மனதையும் … Read more

இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைகால வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும், இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.

அடிப்படை கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும்: இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேட்டி

சென்னை: அடிப்படை கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தாய் மொழி தமிழில் நான் கல்வி கற்றது, எந்த இடத்திலும் எனக்கு பலவீனமாக தெரியவில்லை என மயில் சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

“திராவிட மாடலால் மோடியை திக்குமுக்காட வைக்கிறார் ஸ்டாலின்!" – ஊட்டியில் ஆ.ராசா பேச்சு

தி.மு.க துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா இன்று நீலகிரிக்கு வருகை தந்தார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ராசாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னூரில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்கள் மத்தியில் நன்றி தெரிவித்துக் கொண்டு ஊட்டிக்கு வருகை தந்த ராசா, ஊட்டி காஃபி ஹவுஸ் சதுக்கத்தில் தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார். எம்.பி ராசா தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய ராசா, “எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வைத்துவிட்டுப் போன … Read more

டெல்லி துணை முதல்வர் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மது கொள்கை தொடர்பாக நாளை காலை 11 மணியளவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது.

ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார்.

ம.பி.,யில் அமித்ஷா துவக்கி வைப்பு| Dinamalar

போபால்: இந்தியாவில் முதன் முறையாக, ம.பி.,யில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை, இன்று(அக்.,16) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். ம.பி.,யில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். இது இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்பிரிவாகும். ம.பி.,யில் 13 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 பாடங்களில் ஹிந்தி கற்பிக்கப்படவுள்ளது நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் … Read more