ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் 10-ந்தேதி ஆலோசனை – மோகன் பகவத், ஜே.பி.நட்டா பங்கேற்பு

நாக்பூர், ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய 36 அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது. இம்மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், குடும்ப பண்புகளை பரப்புதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், விசுவ இந்து பரிஷத், … Read more

எப்ப சார் சம்பளம் போடுவீங்க.. ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் புலம்பல்..!

இந்தியா விமானப் போக்குவரத்து சேவையில் மத்திய அரசு விதித்து இருந்த கட்டண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் விருப்பம் போல் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கும் காரணத்தால் போட்டியும் கடுமையாக அதிகரித்துள்ளது. வேகமாக இயங்க வேண்டிய இந்த நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் 2 மாதங்களாகத் தொடர்ந்து சம்பளம் தாமதமாக வருகிறது எனப் புலம்பி வருகின்றனர். வீட்டுக்கே வரும் ஸ்பைஸ்ஜெட் டாக்சி சேவை… அசத்தல் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி! ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை … Read more

180 தையல்கள்… கனடாவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பிரபலம்: விரிவான பின்னணி

இந்திய வம்சாவளி ஊடக பிரபலமான ஜோதி சிங் மான் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். தன் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என தமக்கு இதுவரை புரியவில்லை என்றே மான் குறிப்பிட்டுள்ளார். பிராம்டனில் தனது வீட்டுக்கான பாதையில் அரிவாள் மற்றும் கோடரியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பிரபலம், முதல்முறையாகப் பேசியுள்ளார். ஒன்ராறியோவின் பிராம்டனில் ஆக்ஸ்ட் 4 ம் திகதி இந்திய வம்சாவளி ஊடக பிரபலமான ஜோதி சிங் மான் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். நிறுத்தி … Read more

ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை; குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். குமாரசாமி பார்வையிட்டார் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் பெய்த மழை காரணமாக, அந்த தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில், சன்னப்பட்டணாவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். மக்களிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு … Read more

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்கு உயர்வு.. அதிர்ச்சி அளிக்கும் CMIE தரவுகள்..!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் உலகளவில் இருந்து புதிய நிறுவனங்கள் முதலீடு செய்து அலுவலகத்தையும், உற்பத்தி தளத்தையும் உருவாக்கி வரும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவீடுகளை வெளியிடும் CMIE அமைப்பு ஒவ்வொரு மாதமும் மாநில வாரியாகவும், நகரம் மற்றும் கிராமம் வாரியாகவும், வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு எவ்வளவு தெரியுமா..? ஹரியானா, ராஜஸ்தான் … Read more

ரஷ்யாவுக்கு நாங்க இருக்கோம்.. சீனா-வை ஓரம்கட்டிய இந்தியா..!

2022ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு – 0.6 (மைனஸ்) சதவிகிதமாக உள்ளது. இதுவே மார்ச் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் -1.6 சதவீதமாகச் சரிந்திருந்தது. ஆனால் இதேவேளையில் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 20.1 சதவீத வளர்ச்சி அடைந்த நிலையில், 2022 ஜூன் காலாண்டில் அமெரிக்கா போல் மைன்ஸ் அளவுக்குச் செல்லாமல் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் … Read more

திட்டமிட்டபடி… ரஷ்யாவில் களமிறங்கிய சீன இராணுவம்: வெளிவரும் புதிய தகவல்

செப்டம்பர் 7ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ பயிற்சியில் ரஷ்யா சார்பில் 50,000 வீரர்கள்  அமெரிக்காவுடன் இணக்கமாக இல்லாத ரஷ்யாவும் சீனாவும் சமீப காலமாக மிகவும் நெருங்கி வருவதாகவே கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில், சீனா இராணுவத்துடன் இணைந்து ஒரு வார காலம் நீளும் இராணுவ பயிற்சி முகாமை திட்டமிட்டபடி துவங்கியுள்ளது ரஷ்யா. உக்ரைனில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மிகப் பெரிய பயிற்சி திட்டங்களை ரஷ்யா … Read more

ஓரே நாளில் ஸ்பைஸ்ஜெட் CFO, ரெக்கிட் பென்கிசர் CEO ராஜினாமா.. என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 2022 ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டிலும் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகப்படியான இழப்புகளை எதிர்கொண்டு உள்ளது. ஸ்பைஸ்ஜெட் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இரண்டு காலாண்டுகளாக அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதேவேளையில் Reckitt Benckiser நிறுவனத்தின் தலைமை செயல் … Read more

மெண்டீஸ், ஷனகா அதிரடி…சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி

15வது ஆசிய கிண்ணம் டி20 கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றிபெற்றது. துபாயில் இன்று நடைபெற்ற 5வது ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 … Read more

இந்தியா தொடர்ந்து இதில் கவனம் செலுத்தணும்.. எதிர்காலத்திற்கு இது தான் நல்லது!

இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராகும். இதனால் தான் சர்வதேச சந்தையில் ஏற்படும் சிறு தாக்கம் கூட மிகப்பெரிய அழுத்தத்தினை இங்கு கொடுக்கிறது. இந்த நிலையில் நாட்டின் எதிர்கால தேவை மற்றும் சுத்திகரிப்பு திறன், நுகர்வு அதிகரிப்பு, சுத்திகரிப்பு திட்டங்கள் தாமதம் உள்ளிட்ட பலவற்றை மத்திய அரசு மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் எதிர்கால தேவை மற்றும் சுத்திகரிப்பு திறன் தேவைகள் குறித்து புதிய அறிக்கைளை தயாரிக்குமாறு எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் … Read more