“ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது!" – தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் பேச்சு

சீனக் குடியரசு நாட்டை ஆட்சி செய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) 20-வது தேசிய மாநாடு பீஜிங்கில் இன்று தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று(அக்டோபர் 16) முதல் அக்டோபர் 22-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, மூன்றாவது முறையாக அதிபர் ஜி ஜின்பிங்கே மீண்டும் பதவியேற்கப்போவதாகச் செய்திகள் பரவ, மக்கள் பலர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகக் குரலெழுப்பிவருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிலையில் சுமார் 2,300 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,401 ஆக சரிவு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேர் குணமடைந்து உள்ளதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,73,308 ஆனது. தற்போது 26,625 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 … Read more

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சமூக பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி| Dinamalar

புதுடில்லி: நாடு முழுவதும், 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்களை பிரதமர் மோடி இன்று(அக்.,16) ‛ வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நாட்டுக்கு அர்பணித்தார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் ஏற்படுத்தப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் படி, பிரதமர் மோடி இந்த திட்டத்தை, நாட்டுக்கு அர்பணித்தார். நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பேசியதாவது: சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் … Read more

அரசு பஸ்சுக்கும் லாரிக்கும் இடையே சிக்கி அப்பளம் போல் நசுங்கிய வேன் – குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகே நேற்று இரவு 11 மணி அளவில் 20-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அந்த சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். … Read more

`நாட்டில் எஞ்சிய ஒற்றை தேசிய கட்சி பாஜக மட்டும்தான்!' – நட்டாவின் பேச்சும், கள யதார்த்தமும்!

பாஜக மட்டுமே தேசிய கட்சி: குஜராத்தின் துவாரகாவிலிருந்து போர்பந்தர் வரை பா.ஜ.க-வின் இரண்டாவது யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, “ஒரு காலத்தில் அரசியல் என்றால் ஊழல், பதவியிலிருந்து கொண்டு மக்களை ஏமாற்றி மகிழ்வது என்ற நிலை இருந்தது. ஆனால், பிரதமர் மோடி இந்த நிலையை மாற்றி, சேவையில் ஈடுபட்டார். இந்தியாவில் பாஜக-வைத் தவிர வேறு எந்த தேசிய கட்சியும் இல்லை. காங்கிரஸ் சுருங்கிவிட்டது. இனி அது தேசிய கட்சி இல்லை” … Read more

சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது, மழைகால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அரசு பஸ்- சுற்றுலா வேன் மீது மோதல்: 9 பேர் பலி| Dinamalar

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் காந்திநகர் கிராமம் அருகே நேற்று(அக்.,15) இரவு அரசு பஸ்சும், சுற்றுலா டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த சமயத்தில் வேன் பின்னால் வந்த டேங்கர் லாரியும் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பெங்களூரு: கர்நாடக மாநிலம், … Read more

அக்னிபத் திட்ட வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி, அக்னிபத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் … Read more

திருப்பூர்: குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி சாவு!

திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த 63 வேலம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் கிஷோர் (9). அதே பகுதியைச் சேர்ந்த வேலன் மகன் கதிர்வேல் (11). கிஷோர், கதிர்வேல் இருவரும் நண்பர்கள். கிஷோர் 63 வேலம்பாளையம் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பும், கதிர்வேல் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கிஷோர், கதிர்வேல் இருவரும் 63 வேலம்பாளையம் அருகே உள்ள மூணுமடை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் மீன் பிடிக்க … Read more